அத்தியாயம் – 13
கல்யாணராமனுக்கு பெரும் நிம்மதி. தர்ஷ்ணா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது திருமணத்தை ஏற்றுக் கொண்டது.
காயத்ரியும், அஞ்சனாவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். தந்தை திருமண ஏற்பாடுகளில் செய்திருந்த குளறுபடிகளை எல்லாம் அன்னையிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் அஞ்சனா. அதை கார்த்திக்கின் வீட்டினர் யாரும் தவறாகப் பேசாததைப் பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
அதனால் இருவரும் இந்த திருமணம் நல்லபடியாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தனர்.
கார்த்திக்கும் அனைத்து தடைகளையும் மீறி அவளின் கரம் பிடித்ததை எண்ணி உற்சாகத்தில் இருந்தான். அவர்களின் அலுவலகத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.
ஆர்த்தி, ஷ்யாம் என்று அவளின் டீம் ஆட்கள் அவனுக்கு கை கொடுத்துவிட்டு அவளிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் சென்று விட்டனர். அவளும் அவர்களிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவளின் முகத்தில் சிறு புன்னகைக்கு கூட பஞ்சமாக இருந்தது.
சுகன்யா அதை கவனித்துவிட்டு வந்து மாலையை சரி செய்வது போல “தர்ஷு கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரும்மா. உனக்கு எதுவும் இந்த புடவை நகை கஷ்டப்படுத்துதா?”.
“இல்லக்கா...” என்றாள் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன். ஆனால் மனமோ ‘புடவை நகை எல்லாம் கஷ்டம் இல்லக்கா உங்க தம்பியை கட்டி இருக்கிறது தான் கஷ்டம்’ என்று எண்ணிக் கொண்டாள்.
அதன்பின்னர் மற்றவர்களுக்கு காட்சிப்பொருள் ஆகாமல் மெல்லிய புன்னகையுடன் நிற்க ஆரம்பித்தாள். அதை ஒருவித ஏளனத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.
மற்ற சடங்குகள் எல்லாம் முடித்துக் கொண்டு பெண், பிள்ளையை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதுவரை கார்த்திக் அவளிடம் பேசிக் கொள்ளவே இல்லை. சிறு பார்வையுடனும், சிரிப்புடனும் இருந்து கொண்டான்.
அவனது நண்பர்கள் கூட அதற்காக அவனை ஒட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் மீறி அவன் மிகத் திருப்தியுடன் இருந்தான்.
வீட்டிற்கு வந்து விளக்கேற்றி பால், பழம் கொடுத்து முடித்த பின்னர் அவளை ஒரு அறையில் ஓய்வெடுக்க கூறினார்கள். அஞ்சனாவிற்கு அக்காவுடன் பேச வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. ஆனால் கார்த்திக் வீட்டினர் என்ன சொல்வார்களோ என்கிற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார்த்திக்கின் அன்னை அவளின் ஆசையை உணர்ந்து “நீ போய் கொஞ்ச நேரம் அக்காவோட பேசிட்டு இரும்மா” என்று அனுப்பி வைத்தார்.
அறைக்குள் சென்றவளோ ஓய்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கதவை முழுவதுமாக சாத்தாமல் வைத்துவிட்டு அக்காவின் அருகே வந்தமர்ந்தாள் அஞ்சனா.
“அக்கா!”
தனக்குள் நடக்கும் போராட்டத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு “என்னடா?” என்றாள்.
“எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்குக்கா”.
“ம்ம்...இந்த மூட்லையே இல்லாம ஒழுங்கா பரீட்சை எல்லாம் எழுது அஞ்சு”.
அவள் படிப்பைப் பற்றி பேசியதும் “போக்கா! இப்போ போய் அதைப் பற்றி பேசிட்டு இருக்க. அக்கா! நான் ஒன்னு கவனிச்சேன். உங்க பிரெண்ட் ஆர்த்தி ஏன் உங்களுக்கு கை கொடுக்கவே இல்ல பேசவும் இல்ல”.
அவள் அதை கவனித்திருப்பாள் என்று எதிர்பார்க்காதவள் சற்றே நிமிர்ந்து அமர்ந்து “கூட்டமா இருந்ததால போய் இருப்பாள்”.
“ஆனா அக்கா நம்ம அப்பா கல்யாண ஏற்பாடு எல்லாம் சொதப்பிட்டார். மாமா வீட்டு ஆட்கள் யாரும் அதை குறை சொல்லவே இல்ல தெரியுமா?”
“அப்பா பற்றி தெரிஞ்சது தானே!” என்றாள் சலிப்பாக.
“இருந்தாலும் அக்கா வேற யாரா இருந்தாலும் அசிங்கமா போயிருக்கும். கார்த்திக் மாமாவும் சரி அவங்க வீட்டு ஆட்களும் சரி கிரேட்-கா” என்றதும் “நீ இதைப் பற்றி தான் பேசிட்டு இருக்கப் போறேன்னா ப்ளீஸ் என்னை கொஞ்சம் ப்ரீயா விடு” என்று விட்டாள்.
அவளின் பேச்சில் சற்றே முகம் சுருங்கி விட, உடனே எழுந்து கொண்டவள் “சரிக்கா! நான் வெளில போறேன். நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.
கல்யாணராமனுக்கு பெரும் நிம்மதி. தர்ஷ்ணா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது திருமணத்தை ஏற்றுக் கொண்டது.
காயத்ரியும், அஞ்சனாவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். தந்தை திருமண ஏற்பாடுகளில் செய்திருந்த குளறுபடிகளை எல்லாம் அன்னையிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் அஞ்சனா. அதை கார்த்திக்கின் வீட்டினர் யாரும் தவறாகப் பேசாததைப் பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
அதனால் இருவரும் இந்த திருமணம் நல்லபடியாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தனர்.
கார்த்திக்கும் அனைத்து தடைகளையும் மீறி அவளின் கரம் பிடித்ததை எண்ணி உற்சாகத்தில் இருந்தான். அவர்களின் அலுவலகத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.
ஆர்த்தி, ஷ்யாம் என்று அவளின் டீம் ஆட்கள் அவனுக்கு கை கொடுத்துவிட்டு அவளிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் சென்று விட்டனர். அவளும் அவர்களிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவளின் முகத்தில் சிறு புன்னகைக்கு கூட பஞ்சமாக இருந்தது.
சுகன்யா அதை கவனித்துவிட்டு வந்து மாலையை சரி செய்வது போல “தர்ஷு கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரும்மா. உனக்கு எதுவும் இந்த புடவை நகை கஷ்டப்படுத்துதா?”.
“இல்லக்கா...” என்றாள் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன். ஆனால் மனமோ ‘புடவை நகை எல்லாம் கஷ்டம் இல்லக்கா உங்க தம்பியை கட்டி இருக்கிறது தான் கஷ்டம்’ என்று எண்ணிக் கொண்டாள்.
அதன்பின்னர் மற்றவர்களுக்கு காட்சிப்பொருள் ஆகாமல் மெல்லிய புன்னகையுடன் நிற்க ஆரம்பித்தாள். அதை ஒருவித ஏளனத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.
மற்ற சடங்குகள் எல்லாம் முடித்துக் கொண்டு பெண், பிள்ளையை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதுவரை கார்த்திக் அவளிடம் பேசிக் கொள்ளவே இல்லை. சிறு பார்வையுடனும், சிரிப்புடனும் இருந்து கொண்டான்.
அவனது நண்பர்கள் கூட அதற்காக அவனை ஒட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் மீறி அவன் மிகத் திருப்தியுடன் இருந்தான்.
வீட்டிற்கு வந்து விளக்கேற்றி பால், பழம் கொடுத்து முடித்த பின்னர் அவளை ஒரு அறையில் ஓய்வெடுக்க கூறினார்கள். அஞ்சனாவிற்கு அக்காவுடன் பேச வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. ஆனால் கார்த்திக் வீட்டினர் என்ன சொல்வார்களோ என்கிற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார்த்திக்கின் அன்னை அவளின் ஆசையை உணர்ந்து “நீ போய் கொஞ்ச நேரம் அக்காவோட பேசிட்டு இரும்மா” என்று அனுப்பி வைத்தார்.
அறைக்குள் சென்றவளோ ஓய்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கதவை முழுவதுமாக சாத்தாமல் வைத்துவிட்டு அக்காவின் அருகே வந்தமர்ந்தாள் அஞ்சனா.
“அக்கா!”
தனக்குள் நடக்கும் போராட்டத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு “என்னடா?” என்றாள்.
“எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்குக்கா”.
“ம்ம்...இந்த மூட்லையே இல்லாம ஒழுங்கா பரீட்சை எல்லாம் எழுது அஞ்சு”.
அவள் படிப்பைப் பற்றி பேசியதும் “போக்கா! இப்போ போய் அதைப் பற்றி பேசிட்டு இருக்க. அக்கா! நான் ஒன்னு கவனிச்சேன். உங்க பிரெண்ட் ஆர்த்தி ஏன் உங்களுக்கு கை கொடுக்கவே இல்ல பேசவும் இல்ல”.
அவள் அதை கவனித்திருப்பாள் என்று எதிர்பார்க்காதவள் சற்றே நிமிர்ந்து அமர்ந்து “கூட்டமா இருந்ததால போய் இருப்பாள்”.
“ஆனா அக்கா நம்ம அப்பா கல்யாண ஏற்பாடு எல்லாம் சொதப்பிட்டார். மாமா வீட்டு ஆட்கள் யாரும் அதை குறை சொல்லவே இல்ல தெரியுமா?”
“அப்பா பற்றி தெரிஞ்சது தானே!” என்றாள் சலிப்பாக.
“இருந்தாலும் அக்கா வேற யாரா இருந்தாலும் அசிங்கமா போயிருக்கும். கார்த்திக் மாமாவும் சரி அவங்க வீட்டு ஆட்களும் சரி கிரேட்-கா” என்றதும் “நீ இதைப் பற்றி தான் பேசிட்டு இருக்கப் போறேன்னா ப்ளீஸ் என்னை கொஞ்சம் ப்ரீயா விடு” என்று விட்டாள்.
அவளின் பேச்சில் சற்றே முகம் சுருங்கி விட, உடனே எழுந்து கொண்டவள் “சரிக்கா! நான் வெளில போறேன். நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.