அத்தியாயம் – 13
சிவதாஸ் மற்றும் அவர்களின் டீம் மொத்தமும் அந்த அறையில் குழுமி இருந்தது. நடுவே ஒரு மேஜை போடப்பட்டிருக்க, அதன் மீது ஒரு வரைபடம் விரித்து வைக்கப்பட்டிருந்தது.
அனைவரின் பார்வையும் அதன் மீது தான். கடந்த இரண்டு மணி நேரமாக அதில் குறிப்பிட்டிருக்கும் செய்தியை அறிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருகிறார்கள். எந்த இடத்தை அந்த வரைப்படம் குறிக்கிறது என்பது புரியாத புதிராக இருந்தது.
பல்வேறு கணக்குகளை போட்டு பார்த்தும் அவர்களால் கணிக்க முடியவில்லை. சிவதாஸின் பார்வை முழுவதும் அதன் மீதே தான் பதிந்திருந்தது. ஒவ்வொரு கோடும் எங்கு செல்கிறது? எந்த ஊரை குறிப்பிடுகிறது என்று ஆராய்ந்தே கொண்டே இருந்தான்.
மேலும் அரை மணி நேரம் சென்றிருக்க, சிவதாசிடம் ஒரு பரபரப்பு தெரிய “கைஸ்! இங்கே பாருங்க!” என்றவன் ஓரிடத்தை சுட்டிக் காட்டி “இது மதுரை! சுற்றுவட்டாரத்தை நல்லா கவனிங்க புரியும்” என்றான்.
அவன் சொன்னதும் அனைவரும் அந்தப் பகுதியை கவனித்து தங்களுக்குள் விவாத்தித்து “ஆமாம் தாஸ்! அப்போ மதுரையை சுற்றியுள்ள ஏதோவொரு பகுதியில் தான் பூஜைக்கான இடம் தயாராகி இருக்கு”.
“எஸ் அப்சலூட்லி” என்றான் மெச்சுதலாக.
அவன் சொன்னதும் அடுத்து மதுரை மேப் கொண்டு வரப்பட்டு அதன் சுற்று வட்டாரங்கள் ஆராயப்பட ஆரம்பித்தன. அவர்களுக்கு கிடைத்த வரைப்படமும், மதுரையின் வரைபடத்தோடு ஒத்துப் போன இடங்களையும் ஆராய்ந்து இறுதியில் கள்ளிகுடி என்கிற அந்த கிராமம் தான் பூஜைக்கான இடம் என்று அறிந்து கொண்டனர்.
“மதுரையிலிருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு இந்த கிராமம். தேசிய நெடுஞ்சாலை ஏழில் திருமங்கலத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கு” என்றான் தாடையை தடவியபடி.
“ரஞ்சன்! நீ உடனடியா கிளம்பி இந்த கிராமத்திற்கு போகணும். அந்த ஊர் தலைவர் யார் அவரோட அதிகாரம் எந்தளவிற்கு மக்கள் இடையே பலிக்கும் போன்ற விஷயங்களை இருபத்திநாலு மணி நேரத்திற்குள் எனக்கு கொடுக்கணும்” என்றவன் பிரதீப்பின் பக்கம் திரும்பி “எனக்கு அமைச்சர் கதிர்வேலனோட சந்திப்பிற்கு ஏற்பாடு செய்”.
சுபேஷும், அப்துலும் அவனை பார்க்க “நீங்க ரெண்டு பேரும் ராஜேஷையும், அந்த பிரபுவையும் இங்கே கொண்டு வந்திடுங்க. அவனுங்க நாம சொல்கிற அனைத்தையும் கேட்டுகிட்டு நம்ம சார்பா அங்கே போகணும். எந்த இடத்திலும் அவனுங்க நமக்கு எதிரா மாறக் கூடாது”.
“ஓகே தாஸ்! அவனுங்களை நாங்க பார்த்துக்கிறோம். அவனுங்க கிட்ட அனுப்ப நமக்கு ஒரு பொண்ணு வேணுமே. நம்ம டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்க யாரையும்....” என்று முடிக்கும் முன்னே “தயாரா இருக்கு...சோ நோ வொர்ரீஸ். பார்த்துக்கலாம்” என்றபடி மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய தொடங்கி விட்டான்.
அதை கேட்டு அவனது டீம் மொத்தமும் ஆடித்தான் போய் விட்டனர். எந்த விஷயத்தையும் அசால்ட்டாக செய்து கொண்டிருப்பவனை ஆச்சர்யமாக பார்த்தபடி தங்களுக்கு சொன்ன வேலைகளை முடிக்க அனைவரும் கிளம்பினார்கள்.
ப்ரூக்ளின் எஸ்டேடிலிருந்து அந்த அதிகாலை வேளையில் ஒரு கார் கிளம்பி மலையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த க்றிஸ் மடிகணினியில் யாரிடமோ சாட் செய்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஆரம்பத்தில் லேசாக உற்சாகம் இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் அது சீற்றமாக உருமாற “ஷிட்! ப்ளடி பாக்!” என்று கெட்ட வார்த்தைகளாக உதிர்த்து கணினியை எடுத்து அருகே வீசினான்.
தன் பாக்கெட்டில் இருந்து அலைப்பேசியை எடுத்து அழைத்தவன் ஸ்பானிஷில் பேச ஆரம்பித்தான்.
“உங்களால ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியாதா?” என்று எகிறினான்.
அந்தப் பக்கம் வந்த பதிலில் மேலும் கோபம் ஏற “என்ன செய்வீங்களோ தெரியாது இன்னும் இரண்டு நாளில் இங்கே வந்து இறங்கியாகனும். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கணும். யாருக்கும் எந்த சந்தேகமும் வரக் கூடாது” என்றான் அழுத்தமாக.
போனை அணைத்து தூக்கிப் போட்டவன் கண்களை மூடி அமர்ந்து கொண்டான். பனிரெண்டு வருடங்களாக எதையும் செய்ய முடியாது மறைந்து மறைந்து வாழ்ந்து இன்று இத்தனை தூரம் கொண்டு வந்த பின்பு மீண்டும் பிரச்சனை என்றால் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கும் எதிலும் சந்தேகம் ஊர் மக்களுக்கோ, போலீசிற்கோ வரவே கூடாது. மிக கவனமாக கையாள வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஜாக்கிற்கு செய்தி அனுப்பினான்.
அடுத்த நிமிடம் அவனிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது.
“என்ன பிரச்சனை?”
“டேனியும், மரியாவும் வருவதில் பிரச்சனை. டாகுமென்ட்ஸ் சரியாக இல்லை”.
“வாட்! அவங்க கண்டிப்பாக வந்தாகணும் க்றிஸ்”.
“எஸ்! ஆனா அவங்க உள்ளே நுழையும் போது சந்தேகம் வந்தா நாம பினிஷ்”.
“எதுவாக இருந்தாலும் சரியாக பண்ணிட்டு சீக்கிரம் வர சொல்லு க்றிஸ். நம்ம ஆட்களுக்கு தகவல் கொடுக்க ஆரம்பிச்சாச்சு”.
“குட்! பிரசாதம் எப்போ ரெடியாகும்?” என்றவனது விழிகளில் அத்தனை பளபளப்பு.
“நான் இரண்டு நாளில் அங்கே போறேன். எல்லாம் செக் பண்ணிட்டு தயார் பண்ணிடலாம். பட் எனக்கு உன்கிட்ட பிடிக்காத விஷயம் இந்த பிரசாதத்தில் கை வைப்பது தான்”.
சிவதாஸ் மற்றும் அவர்களின் டீம் மொத்தமும் அந்த அறையில் குழுமி இருந்தது. நடுவே ஒரு மேஜை போடப்பட்டிருக்க, அதன் மீது ஒரு வரைபடம் விரித்து வைக்கப்பட்டிருந்தது.
அனைவரின் பார்வையும் அதன் மீது தான். கடந்த இரண்டு மணி நேரமாக அதில் குறிப்பிட்டிருக்கும் செய்தியை அறிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருகிறார்கள். எந்த இடத்தை அந்த வரைப்படம் குறிக்கிறது என்பது புரியாத புதிராக இருந்தது.
பல்வேறு கணக்குகளை போட்டு பார்த்தும் அவர்களால் கணிக்க முடியவில்லை. சிவதாஸின் பார்வை முழுவதும் அதன் மீதே தான் பதிந்திருந்தது. ஒவ்வொரு கோடும் எங்கு செல்கிறது? எந்த ஊரை குறிப்பிடுகிறது என்று ஆராய்ந்தே கொண்டே இருந்தான்.
மேலும் அரை மணி நேரம் சென்றிருக்க, சிவதாசிடம் ஒரு பரபரப்பு தெரிய “கைஸ்! இங்கே பாருங்க!” என்றவன் ஓரிடத்தை சுட்டிக் காட்டி “இது மதுரை! சுற்றுவட்டாரத்தை நல்லா கவனிங்க புரியும்” என்றான்.
அவன் சொன்னதும் அனைவரும் அந்தப் பகுதியை கவனித்து தங்களுக்குள் விவாத்தித்து “ஆமாம் தாஸ்! அப்போ மதுரையை சுற்றியுள்ள ஏதோவொரு பகுதியில் தான் பூஜைக்கான இடம் தயாராகி இருக்கு”.
“எஸ் அப்சலூட்லி” என்றான் மெச்சுதலாக.
அவன் சொன்னதும் அடுத்து மதுரை மேப் கொண்டு வரப்பட்டு அதன் சுற்று வட்டாரங்கள் ஆராயப்பட ஆரம்பித்தன. அவர்களுக்கு கிடைத்த வரைப்படமும், மதுரையின் வரைபடத்தோடு ஒத்துப் போன இடங்களையும் ஆராய்ந்து இறுதியில் கள்ளிகுடி என்கிற அந்த கிராமம் தான் பூஜைக்கான இடம் என்று அறிந்து கொண்டனர்.
“மதுரையிலிருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு இந்த கிராமம். தேசிய நெடுஞ்சாலை ஏழில் திருமங்கலத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கு” என்றான் தாடையை தடவியபடி.
“ரஞ்சன்! நீ உடனடியா கிளம்பி இந்த கிராமத்திற்கு போகணும். அந்த ஊர் தலைவர் யார் அவரோட அதிகாரம் எந்தளவிற்கு மக்கள் இடையே பலிக்கும் போன்ற விஷயங்களை இருபத்திநாலு மணி நேரத்திற்குள் எனக்கு கொடுக்கணும்” என்றவன் பிரதீப்பின் பக்கம் திரும்பி “எனக்கு அமைச்சர் கதிர்வேலனோட சந்திப்பிற்கு ஏற்பாடு செய்”.
சுபேஷும், அப்துலும் அவனை பார்க்க “நீங்க ரெண்டு பேரும் ராஜேஷையும், அந்த பிரபுவையும் இங்கே கொண்டு வந்திடுங்க. அவனுங்க நாம சொல்கிற அனைத்தையும் கேட்டுகிட்டு நம்ம சார்பா அங்கே போகணும். எந்த இடத்திலும் அவனுங்க நமக்கு எதிரா மாறக் கூடாது”.
“ஓகே தாஸ்! அவனுங்களை நாங்க பார்த்துக்கிறோம். அவனுங்க கிட்ட அனுப்ப நமக்கு ஒரு பொண்ணு வேணுமே. நம்ம டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்க யாரையும்....” என்று முடிக்கும் முன்னே “தயாரா இருக்கு...சோ நோ வொர்ரீஸ். பார்த்துக்கலாம்” என்றபடி மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய தொடங்கி விட்டான்.
அதை கேட்டு அவனது டீம் மொத்தமும் ஆடித்தான் போய் விட்டனர். எந்த விஷயத்தையும் அசால்ட்டாக செய்து கொண்டிருப்பவனை ஆச்சர்யமாக பார்த்தபடி தங்களுக்கு சொன்ன வேலைகளை முடிக்க அனைவரும் கிளம்பினார்கள்.
ப்ரூக்ளின் எஸ்டேடிலிருந்து அந்த அதிகாலை வேளையில் ஒரு கார் கிளம்பி மலையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த க்றிஸ் மடிகணினியில் யாரிடமோ சாட் செய்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஆரம்பத்தில் லேசாக உற்சாகம் இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் அது சீற்றமாக உருமாற “ஷிட்! ப்ளடி பாக்!” என்று கெட்ட வார்த்தைகளாக உதிர்த்து கணினியை எடுத்து அருகே வீசினான்.
தன் பாக்கெட்டில் இருந்து அலைப்பேசியை எடுத்து அழைத்தவன் ஸ்பானிஷில் பேச ஆரம்பித்தான்.
“உங்களால ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியாதா?” என்று எகிறினான்.
அந்தப் பக்கம் வந்த பதிலில் மேலும் கோபம் ஏற “என்ன செய்வீங்களோ தெரியாது இன்னும் இரண்டு நாளில் இங்கே வந்து இறங்கியாகனும். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கணும். யாருக்கும் எந்த சந்தேகமும் வரக் கூடாது” என்றான் அழுத்தமாக.
போனை அணைத்து தூக்கிப் போட்டவன் கண்களை மூடி அமர்ந்து கொண்டான். பனிரெண்டு வருடங்களாக எதையும் செய்ய முடியாது மறைந்து மறைந்து வாழ்ந்து இன்று இத்தனை தூரம் கொண்டு வந்த பின்பு மீண்டும் பிரச்சனை என்றால் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கும் எதிலும் சந்தேகம் ஊர் மக்களுக்கோ, போலீசிற்கோ வரவே கூடாது. மிக கவனமாக கையாள வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஜாக்கிற்கு செய்தி அனுப்பினான்.
அடுத்த நிமிடம் அவனிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது.
“என்ன பிரச்சனை?”
“டேனியும், மரியாவும் வருவதில் பிரச்சனை. டாகுமென்ட்ஸ் சரியாக இல்லை”.
“வாட்! அவங்க கண்டிப்பாக வந்தாகணும் க்றிஸ்”.
“எஸ்! ஆனா அவங்க உள்ளே நுழையும் போது சந்தேகம் வந்தா நாம பினிஷ்”.
“எதுவாக இருந்தாலும் சரியாக பண்ணிட்டு சீக்கிரம் வர சொல்லு க்றிஸ். நம்ம ஆட்களுக்கு தகவல் கொடுக்க ஆரம்பிச்சாச்சு”.
“குட்! பிரசாதம் எப்போ ரெடியாகும்?” என்றவனது விழிகளில் அத்தனை பளபளப்பு.
“நான் இரண்டு நாளில் அங்கே போறேன். எல்லாம் செக் பண்ணிட்டு தயார் பண்ணிடலாம். பட் எனக்கு உன்கிட்ட பிடிக்காத விஷயம் இந்த பிரசாதத்தில் கை வைப்பது தான்”.