வைதேகி வீட்டினுள் சென்ற போது, ஹர்ஷிதா உள்ளே செல்லாமல் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும்,
"வீட்டுக்குள்ள வா பேசணும்" என்று சொல்லி விட்டு வேகமாக வைதேகி நடந்து சென்று விட, அவள் அந்த வரவேற்பறையை விட்டு அசையவில்லை.
வைதேகி சொன்னதைக் காதில் வாங்காதது போல் மும்முரமாக செல்ஃபோனில் ஆரிஃப்க்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கடந்தும் வீட்டினுள் வராமல் இருக்கும் மகளின் பிடிவாதத்தை கண்டவர், அவரே வரவேற்பறைக்கு வந்து விட, அவள் செல்ஃபோனை விட்டு நிமிர்ந்துப் பார்க்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். வைதேகி அருகில் நிற்பதை உணர்ந்தும்.
"என் பொண்ணோட விஷயம் வெளியில் தெரியக்கூடாது நினைச்சு தான் உள்ளே கூப்பிட்டேன்" என்று அருகில் அமர்ந்தார்.
"உனக்கு பிடித்ததை முதல் முதலா என்னால் நிறைவேற்ற முடியாது. ஜஸ்ட் டூ டேஸ் தானே.. " என்றார்.
"என் மனசை உன்கிட்ட தானே ஃபர்ஸ்ட் சொன்னேன். அப்பவே சொல்ல வேண்டியது தானே. இப்போ என்ன? ஹோ! ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு போனதால் பிடிக்கலயா? இல்லை அவர் நம்ம சாமியை கும்பிட மாட்டார்ன்னு பிடிக்கலயா?"
"ஏய் லூசு!!! நீ பண்ணின வேலைக்கு நான் தான் கோபப்படணும். இங்கே நீ இப்படி பண்ற. ஃபர்ஸ்ட் சாப்பிடு" என்றார் விரக்தியான முறுவலுடன்.
"ஆரிஃப் ஃபோன் வந்தால் தான் சாப்பிடுவேன்" இப்போது ஸ்விட்ச் ஆஃப் மோட் க்கு சென்றிருந்தது.
ஒரே நாளில் மாறும் விஷயமல்ல என்பதால் அமைதியாகவே இருந்தார். அதே நேரம் இந்நேரத்தில் தானும் கோபத்தை வெளிபடுத்துவது நல்லதல்ல என்று முயன்று கட்டுப்படுத்தி வெளிக்காட்டாமல் அவளிடம் மென்மையாக பேசினார்.
"செல்லம்மா! அம்மா மேல் நம்பிக்கை இருக்கு தானே"
"உனக்கு ஏன்ம்மா என் மேல் நம்பிக்கை இல்லாமல் போச்சு" என்று அழவும்,
"எல்லா ஃபார்மாலிட்டீஸ்ம் முடிச்சு வச்சிருக்கார். நீயும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல இருக்கன்னு சொல்லும் போது கொஞ்சம் கோபம் வந்துடுச்சு. சாரிடா. நீ சைன் பண்ணணும் நினைத்திருந்தால், ஒரு ஃபோன் பண்ணியாவது என்னிடம் சொல்லியிருப்பன்னு இப்போதான் யோசிக்கிறேன்" என்றதும், அவள் உதட்டில் முறுவல் தோன்றி மறைந்தது.
"சரி சாப்பிடு"
"ஃபோன் மட்டும் பேசிட்டு வரேன். உனக்கு ஆரிஃப் பிடிக்கலன்னா.. இது வேணாம்" என்று சொல்லும் போதே, குரல் உள்ளே சென்று விட, அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டார். பிரிவின் வலியை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர், செல்லும் வழிகளில் எல்லாம் பூக்கள் மட்டுமே தூவியிருக்காது என்று சொல்லி வளர்த்தவர் தான், ‘இதில் இருந்து மீண்டு வரும் மன வலிமை அவளுக்கு வேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.
"வீட்டுக்குள்ள வா பேசணும்" என்று சொல்லி விட்டு வேகமாக வைதேகி நடந்து சென்று விட, அவள் அந்த வரவேற்பறையை விட்டு அசையவில்லை.
வைதேகி சொன்னதைக் காதில் வாங்காதது போல் மும்முரமாக செல்ஃபோனில் ஆரிஃப்க்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கடந்தும் வீட்டினுள் வராமல் இருக்கும் மகளின் பிடிவாதத்தை கண்டவர், அவரே வரவேற்பறைக்கு வந்து விட, அவள் செல்ஃபோனை விட்டு நிமிர்ந்துப் பார்க்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். வைதேகி அருகில் நிற்பதை உணர்ந்தும்.
"என் பொண்ணோட விஷயம் வெளியில் தெரியக்கூடாது நினைச்சு தான் உள்ளே கூப்பிட்டேன்" என்று அருகில் அமர்ந்தார்.
"உனக்கு பிடித்ததை முதல் முதலா என்னால் நிறைவேற்ற முடியாது. ஜஸ்ட் டூ டேஸ் தானே.. " என்றார்.
"என் மனசை உன்கிட்ட தானே ஃபர்ஸ்ட் சொன்னேன். அப்பவே சொல்ல வேண்டியது தானே. இப்போ என்ன? ஹோ! ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு போனதால் பிடிக்கலயா? இல்லை அவர் நம்ம சாமியை கும்பிட மாட்டார்ன்னு பிடிக்கலயா?"
"ஏய் லூசு!!! நீ பண்ணின வேலைக்கு நான் தான் கோபப்படணும். இங்கே நீ இப்படி பண்ற. ஃபர்ஸ்ட் சாப்பிடு" என்றார் விரக்தியான முறுவலுடன்.
"ஆரிஃப் ஃபோன் வந்தால் தான் சாப்பிடுவேன்" இப்போது ஸ்விட்ச் ஆஃப் மோட் க்கு சென்றிருந்தது.
ஒரே நாளில் மாறும் விஷயமல்ல என்பதால் அமைதியாகவே இருந்தார். அதே நேரம் இந்நேரத்தில் தானும் கோபத்தை வெளிபடுத்துவது நல்லதல்ல என்று முயன்று கட்டுப்படுத்தி வெளிக்காட்டாமல் அவளிடம் மென்மையாக பேசினார்.
"செல்லம்மா! அம்மா மேல் நம்பிக்கை இருக்கு தானே"
"உனக்கு ஏன்ம்மா என் மேல் நம்பிக்கை இல்லாமல் போச்சு" என்று அழவும்,
"எல்லா ஃபார்மாலிட்டீஸ்ம் முடிச்சு வச்சிருக்கார். நீயும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல இருக்கன்னு சொல்லும் போது கொஞ்சம் கோபம் வந்துடுச்சு. சாரிடா. நீ சைன் பண்ணணும் நினைத்திருந்தால், ஒரு ஃபோன் பண்ணியாவது என்னிடம் சொல்லியிருப்பன்னு இப்போதான் யோசிக்கிறேன்" என்றதும், அவள் உதட்டில் முறுவல் தோன்றி மறைந்தது.
"சரி சாப்பிடு"
"ஃபோன் மட்டும் பேசிட்டு வரேன். உனக்கு ஆரிஃப் பிடிக்கலன்னா.. இது வேணாம்" என்று சொல்லும் போதே, குரல் உள்ளே சென்று விட, அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டார். பிரிவின் வலியை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர், செல்லும் வழிகளில் எல்லாம் பூக்கள் மட்டுமே தூவியிருக்காது என்று சொல்லி வளர்த்தவர் தான், ‘இதில் இருந்து மீண்டு வரும் மன வலிமை அவளுக்கு வேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.