அத்தியாயம் – 12
அவளை வீட்டில் விட்டுவிட்டு காயத்ரியிடம் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் மகளின் அருகே வந்தமர்ந்தவர் “என்ன பிரச்சனை உனக்கு? இப்போ எல்லாம் அடிக்கடி தலைவலி வருது? மாப்பிள்ளை உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறார்”.
அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இனிமே யாரும் என்னைப் பற்றி கவலைப்படாதீங்க. அவங்க அவங்க வாழ்க்கையைப் பாருங்க”.
மகளின் பேச்சில் கடுப்பானவர் “நீ சரியில்ல தர்ஷனா. உன்னை நான் சரியாக வளர்க்களையோன்னு தோணுது”.
“ஆமாம்ம்மா! நீங்க சரியா வளர்த்திருந்தா நான் இப்படி என்ன முடிவெடுக்கிறது என்று தெரியாம எல்லோரிடமும் அசிங்கப்பட்டு இருந்திருக்க மாட்டேன்”.
சட்டென்று எழுந்து கொண்டவர் அவளை முறைத்துவிட்டு “நல்லவொரு வாழ்க்கை கிடைச்சிருக்கு உனக்கு. அதை இப்படியே பேசிப்பேசியே கெடுத்துக்காதே. இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தான் இருக்கு. நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. முகத்தை இனி இப்படி வச்சுக்காதே. சந்தோஷமா இரு” என்றார்.
அன்னை சொல்லிச் சென்றதை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டவள் ‘இப்போ தான்ம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காதலிச்சவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என் வீட்டிலேயே அநாதை மாதிரி இருக்க வேண்டிய சூழ்நிலை. இதுல இத்தனை நாள் பழகிய நட்புகளுக்கு நான் இப்படியொரு காரியத்தை செய்வேனா என்று கூட தோன்றாமல் என்னை கேவலமாக ஜட்ஜ் பண்ணும் நிலையில் இருக்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்-மா’ என்று சொல்லிக் கொண்டவளின் கண்களில் கண்ணீர்.
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு அலுவலகம் நரகத்தைக் காட்டியது. யாரும் அவளிடம் வந்து பேசவில்லை. மாறனைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியவில்லை. இதில் கார்த்திக் வேறு அவ்வபோது வந்து நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்டு சென்றது அனைவரின் பார்வையும் அவள் மீது காறி துப்பியது.
ஆர்த்தி அவள் அருகில் கூட வர முயலவில்லை. அவளைப் பார்த்தாலே அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். மொத்தத்தில் அலுவலகத்தில் தனிப்பட்டுப் போனாள். உதவி தேவைப்பட்டால் கூட யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை.
உணர்வுகள் மரத்த நிலைக்குச் சென்று விட்டிருந்தாள். எல்லாமே எல்லை மீறிச் சென்று விட்டது. இனி, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள்.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுப்பு எடுக்கும்படி சொல்லி விட்டார்கள். அது அவளுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்தது. தன் பங்கிற்கு அவள் யாருக்கும் பத்திரிக்கையோ அழைப்போ வைக்கவில்லை. அனைவரின் ஏளனப் பார்வையில் இருந்தும் தப்பித்தது போல் இருந்தது.
வீட்டில் சொந்தங்கள் மெல்ல வரத் தொடங்கியதால் அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை. மணப்பெண் என்று ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்று விடுவார்கள். அதனால் தனிமையில் மாறனை எண்ணி மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். இதுவரை அவனைப் பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டதை வைத்து தெரிந்து கொண்டிருந்தாள். மொத்தமாக நம்பிக்கை இழந்து போயிருந்தது.
இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் வரும் என்று நினைக்கவே இல்லை. அன்று தனியே அழைத்துச் சென்ற கல்யாணராமன் பேசிய வார்த்தைகள் மனதில் அழியாமல் இருந்தது.
“மாப்பிள்ளை கிட்ட பேசினியாமே? அவர் சொன்னார்”.
அவரின் வார்த்தையில் சற்றே தயங்கி “என்னப்பா சொன்னார்?”
“அது தான் மாறனை லவ் பண்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னியாமே?”
அவர் சொன்ன பதிலில் ஆடிப் போய் “அப்பா!”...”உங்களுக்கு நா...நான்...மாறனை காதலிப்பது தெரியுமா?”
“தெரியுமே! அவன் தான் என்னிடம் வந்து பேசினானே”.
“என்னப்பா சொல்றீங்க? தெரிஞ்சும் எதுக்கு?”
“என் மகளை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு நான் தான் முடிவெடுக்கணும்”.
அவளை வீட்டில் விட்டுவிட்டு காயத்ரியிடம் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் மகளின் அருகே வந்தமர்ந்தவர் “என்ன பிரச்சனை உனக்கு? இப்போ எல்லாம் அடிக்கடி தலைவலி வருது? மாப்பிள்ளை உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறார்”.
அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இனிமே யாரும் என்னைப் பற்றி கவலைப்படாதீங்க. அவங்க அவங்க வாழ்க்கையைப் பாருங்க”.
மகளின் பேச்சில் கடுப்பானவர் “நீ சரியில்ல தர்ஷனா. உன்னை நான் சரியாக வளர்க்களையோன்னு தோணுது”.
“ஆமாம்ம்மா! நீங்க சரியா வளர்த்திருந்தா நான் இப்படி என்ன முடிவெடுக்கிறது என்று தெரியாம எல்லோரிடமும் அசிங்கப்பட்டு இருந்திருக்க மாட்டேன்”.
சட்டென்று எழுந்து கொண்டவர் அவளை முறைத்துவிட்டு “நல்லவொரு வாழ்க்கை கிடைச்சிருக்கு உனக்கு. அதை இப்படியே பேசிப்பேசியே கெடுத்துக்காதே. இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தான் இருக்கு. நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. முகத்தை இனி இப்படி வச்சுக்காதே. சந்தோஷமா இரு” என்றார்.
அன்னை சொல்லிச் சென்றதை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டவள் ‘இப்போ தான்ம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காதலிச்சவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என் வீட்டிலேயே அநாதை மாதிரி இருக்க வேண்டிய சூழ்நிலை. இதுல இத்தனை நாள் பழகிய நட்புகளுக்கு நான் இப்படியொரு காரியத்தை செய்வேனா என்று கூட தோன்றாமல் என்னை கேவலமாக ஜட்ஜ் பண்ணும் நிலையில் இருக்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்-மா’ என்று சொல்லிக் கொண்டவளின் கண்களில் கண்ணீர்.
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு அலுவலகம் நரகத்தைக் காட்டியது. யாரும் அவளிடம் வந்து பேசவில்லை. மாறனைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியவில்லை. இதில் கார்த்திக் வேறு அவ்வபோது வந்து நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்டு சென்றது அனைவரின் பார்வையும் அவள் மீது காறி துப்பியது.
ஆர்த்தி அவள் அருகில் கூட வர முயலவில்லை. அவளைப் பார்த்தாலே அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். மொத்தத்தில் அலுவலகத்தில் தனிப்பட்டுப் போனாள். உதவி தேவைப்பட்டால் கூட யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை.
உணர்வுகள் மரத்த நிலைக்குச் சென்று விட்டிருந்தாள். எல்லாமே எல்லை மீறிச் சென்று விட்டது. இனி, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள்.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுப்பு எடுக்கும்படி சொல்லி விட்டார்கள். அது அவளுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்தது. தன் பங்கிற்கு அவள் யாருக்கும் பத்திரிக்கையோ அழைப்போ வைக்கவில்லை. அனைவரின் ஏளனப் பார்வையில் இருந்தும் தப்பித்தது போல் இருந்தது.
வீட்டில் சொந்தங்கள் மெல்ல வரத் தொடங்கியதால் அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை. மணப்பெண் என்று ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்று விடுவார்கள். அதனால் தனிமையில் மாறனை எண்ணி மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். இதுவரை அவனைப் பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டதை வைத்து தெரிந்து கொண்டிருந்தாள். மொத்தமாக நம்பிக்கை இழந்து போயிருந்தது.
இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் வரும் என்று நினைக்கவே இல்லை. அன்று தனியே அழைத்துச் சென்ற கல்யாணராமன் பேசிய வார்த்தைகள் மனதில் அழியாமல் இருந்தது.
“மாப்பிள்ளை கிட்ட பேசினியாமே? அவர் சொன்னார்”.
அவரின் வார்த்தையில் சற்றே தயங்கி “என்னப்பா சொன்னார்?”
“அது தான் மாறனை லவ் பண்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னியாமே?”
அவர் சொன்ன பதிலில் ஆடிப் போய் “அப்பா!”...”உங்களுக்கு நா...நான்...மாறனை காதலிப்பது தெரியுமா?”
“தெரியுமே! அவன் தான் என்னிடம் வந்து பேசினானே”.
“என்னப்பா சொல்றீங்க? தெரிஞ்சும் எதுக்கு?”
“என் மகளை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு நான் தான் முடிவெடுக்கணும்”.
Last edited: