அத்தியாயம்- 12
“கால் மீ தாஸ்”.
“ரொம்ப முக்கியம்! தேவையில்லாம பேசாதே!”
அவளது கரங்களை அழுத்தமாகப் பற்றி “நான் எந்த வார்த்தையும் தேவையில்லாம விடுவதில்லை. நீ எங்களோட சேர்ந்து இந்த கேசில் வேலை செய்யணும்”.
அவனது கைகளில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தவள் அவனது பதிலைக் கேட்டு “மூளையோட தான் பேசிட்டு இருக்கியா? நான் உன்னுடைய அப்பாவை கொலை பண்ண வந்திருக்கேன். என்கிட்டே என்ன கேட்டுட்டு இருக்க?’
பட்டென்று அவளது கரங்களை முடுக்கி அலேக்காக தூக்கி தலைக்கு மேல் தூக்கியவன் “இந்த தாஸ் கிட்ட எந்த ஆம்பிள்ளையும் எதிரே நின்னு தைரியமா பேச மாட்டான். நீ இந்தளவுக்கு பேசிகிட்டு உயிரோட இருக்கேன்னா நான் அனுமதிச்சதுனால. என் அனுமதி இல்லாம நீ இனி அசைய கூட முடியாது”.
“சிவதாஸ்! நீ பெரிய இவனா இருக்கலாம். ஆனா என்னை அவ்வளவு ஈசியா எடை போடாதே!”
“என்ன ஒரு அம்பது அம்பத்தைஞ்சு கிலோ இருப்பியா?”
“சிவதாஸ்! என்னை கீழே இறக்கி விடு! ஓவரா போயிட்டு இருக்க”.
“நான் சொல்றதை பொறுமையா கேட்பேன்னு சொல்லு இறக்கி விடுறேன்” என்றான் அழுத்தமாக.
அவனிடமிருந்து விடுபட முடியாமல் “சரி கேட்கிறேன்” என்றாள் எரிச்சலுடன்.
பட்டென்று அவளை கீழே தூக்கிப் போட்டவன் அங்கே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் அப்படி தூக்கி எறிவான் என்று எதிர்பார்க்காதவள் கீழே விழுந்த அதிர்வில் எழுந்த வலியுடன் மெல்ல எழுந்து நின்றாள்.
அவளைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாது எதிரே இருந்த நாற்காலியை நோக்கி கையை காட்டினான்.
அவன் மீது இருந்த கடுப்பில் நாற்காலியை ஒரு எத்து எத்தி விட்டு “வேண்டாம் தாஸ்! நான் இங்கே வந்தது உங்கப்பாவை கொல்றதுக்காக. அது தெரிஞ்சும் நீ என்னை இங்கே அலவ் பண்ணி இருக்கேன்னா உன்னுடைய தன்னம்பிக்கை அளவை காட்டுது”.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தவன் “எது பேசுவதாக இருந்தாலும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசு” என்றான் அழுத்தமாக.
அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் “சொல்லு! என்னை எதுக்காக ட்ராப் பண்ணின?”
“எங்கப்பாவை கொலை பண்ணப் போகிற இன்ட்டேன்ஷனோட இருக்கிறன்னு தெரிஞ்சும் உன்னை இங்கே விட்டிருக்கேன்னா அந்த கேசை பற்றி விவரங்கள் எனக்கு தெரியாம இருக்குமா சொல்லு?’
“சோ என்னை கன்வின்ஸ் பண்ணி உங்கப்பாவை காப்பாற்ற ப்ளான் பண்ற?”
அதை கேட்டு லேசாக இதழ்களை விரித்து சிரித்தவன் “நான் நினைத்தால் இந்த நிமிஷம் உன்னை இங்கேயே கொன்னுட்டு என் வீட்டு தோட்டத்திலேயே புதைச்சிட்டு போயிடுவேன். நீ இருக்கியா இல்லையான்னு கேட்க கூட யாருமில்ல. சோ உன்னை கன்வின்ஸ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு எது?”
‘பின்னே எதுக்கு என்கிட்ட பேசிகிட்டு இருக்க?’
“எனக்கு உன்னுடைய இந்த தைரியம் பிடிச்சிருக்கு. அதோட ஜாக் கேஸ் விஷயத்தில் அவங்க கூட்டத்திற்குள் நுழைய மன தைரியம் உள்ள பெண் தேவை”.
“நான் என்ன செய்யணும் செய்ய வேண்டாம்னு முடிவு செய்ய என் தோழர்கள் இருக்காங்க. எங்கள் குரல் அந்த ஜாக்கையும், க்றிஸ் ரெண்டு பேரின் கதையையும் முடிச்சிடுவாங்க”.
அவள் மறுத்து மறுத்து பேசிக் கொண்டிருக்க சட்டென்று நாற்காலியை விட்டு எழுந்தவன் “லுக் சஞ்சலா இங்கே நீ எதை தேடி வந்தியோ அதற்கான தீர்வு நான் சொல்கிற இடத்தில் கிடைக்கும். எங்கள் குரல் குரல்வளை நெறிக்கப்பட்டு மொத்த கூட்டமும் என் கையில் இருக்காங்க. சோ நீ நான் சொல்கிறபடி நடந்தாகணும்”.
“அப்போ தமயந்திக்கு எப்போ நீதி கிடைக்கும்?”
அவளை கூர்ந்து பார்த்தவன் அங்கே மேஜை மீது அவள் எடுத்து வைத்திருந்த அவனது தநதையின் டைரியை கையில் எடுத்துக் கொண்டு “தமயந்திக்கும் இப்போ நீ செய்யப் போகிற இந்த செயலுக்கும் தொடர்பு உண்டு. இந்த கேஸ் முடியும் போது உன் கேள்விகளுக்கான விடை உனக்கு கிடைக்கும்”.
அவன் சொன்னதின் அர்த்தம் புரிய “குணா, பார்த்தி எல்லோரையும் பிடிச்சாச்சா? சோ ப்ளான் பண்ணி தான் மூவ் பண்ணி இருக்க. என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்க” என்றாள் தெனாவெட்டாக.
அவனது முகம் கடுமையைப் பூசிக் கொள்ள “தமயந்தியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்னிடம் இருக்கு. அவளது கடைசி நிமிடங்கள் மிக மோசமானதாக இருந்திருக்கு. ஒரு பனிரெண்டு வருடம் முன்னர் நடந்த கொலையோட அதே பாணி இப்போது கடைபிடிக்க பட்டிருக்கு. அப்போ அதை செய்தவங்க தானே இப்போ மீண்டும் வந்திருக்கணும்”.
அவன் சொல்வதை அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்தவள் அவனது கடைசி வார்த்தையில் எழுந்து நின்று விட்டாள்.
“கால் மீ தாஸ்”.
“ரொம்ப முக்கியம்! தேவையில்லாம பேசாதே!”
அவளது கரங்களை அழுத்தமாகப் பற்றி “நான் எந்த வார்த்தையும் தேவையில்லாம விடுவதில்லை. நீ எங்களோட சேர்ந்து இந்த கேசில் வேலை செய்யணும்”.
அவனது கைகளில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தவள் அவனது பதிலைக் கேட்டு “மூளையோட தான் பேசிட்டு இருக்கியா? நான் உன்னுடைய அப்பாவை கொலை பண்ண வந்திருக்கேன். என்கிட்டே என்ன கேட்டுட்டு இருக்க?’
பட்டென்று அவளது கரங்களை முடுக்கி அலேக்காக தூக்கி தலைக்கு மேல் தூக்கியவன் “இந்த தாஸ் கிட்ட எந்த ஆம்பிள்ளையும் எதிரே நின்னு தைரியமா பேச மாட்டான். நீ இந்தளவுக்கு பேசிகிட்டு உயிரோட இருக்கேன்னா நான் அனுமதிச்சதுனால. என் அனுமதி இல்லாம நீ இனி அசைய கூட முடியாது”.
“சிவதாஸ்! நீ பெரிய இவனா இருக்கலாம். ஆனா என்னை அவ்வளவு ஈசியா எடை போடாதே!”
“என்ன ஒரு அம்பது அம்பத்தைஞ்சு கிலோ இருப்பியா?”
“சிவதாஸ்! என்னை கீழே இறக்கி விடு! ஓவரா போயிட்டு இருக்க”.
“நான் சொல்றதை பொறுமையா கேட்பேன்னு சொல்லு இறக்கி விடுறேன்” என்றான் அழுத்தமாக.
அவனிடமிருந்து விடுபட முடியாமல் “சரி கேட்கிறேன்” என்றாள் எரிச்சலுடன்.
பட்டென்று அவளை கீழே தூக்கிப் போட்டவன் அங்கே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் அப்படி தூக்கி எறிவான் என்று எதிர்பார்க்காதவள் கீழே விழுந்த அதிர்வில் எழுந்த வலியுடன் மெல்ல எழுந்து நின்றாள்.
அவளைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாது எதிரே இருந்த நாற்காலியை நோக்கி கையை காட்டினான்.
அவன் மீது இருந்த கடுப்பில் நாற்காலியை ஒரு எத்து எத்தி விட்டு “வேண்டாம் தாஸ்! நான் இங்கே வந்தது உங்கப்பாவை கொல்றதுக்காக. அது தெரிஞ்சும் நீ என்னை இங்கே அலவ் பண்ணி இருக்கேன்னா உன்னுடைய தன்னம்பிக்கை அளவை காட்டுது”.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தவன் “எது பேசுவதாக இருந்தாலும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசு” என்றான் அழுத்தமாக.
அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் “சொல்லு! என்னை எதுக்காக ட்ராப் பண்ணின?”
“எங்கப்பாவை கொலை பண்ணப் போகிற இன்ட்டேன்ஷனோட இருக்கிறன்னு தெரிஞ்சும் உன்னை இங்கே விட்டிருக்கேன்னா அந்த கேசை பற்றி விவரங்கள் எனக்கு தெரியாம இருக்குமா சொல்லு?’
“சோ என்னை கன்வின்ஸ் பண்ணி உங்கப்பாவை காப்பாற்ற ப்ளான் பண்ற?”
அதை கேட்டு லேசாக இதழ்களை விரித்து சிரித்தவன் “நான் நினைத்தால் இந்த நிமிஷம் உன்னை இங்கேயே கொன்னுட்டு என் வீட்டு தோட்டத்திலேயே புதைச்சிட்டு போயிடுவேன். நீ இருக்கியா இல்லையான்னு கேட்க கூட யாருமில்ல. சோ உன்னை கன்வின்ஸ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு எது?”
‘பின்னே எதுக்கு என்கிட்ட பேசிகிட்டு இருக்க?’
“எனக்கு உன்னுடைய இந்த தைரியம் பிடிச்சிருக்கு. அதோட ஜாக் கேஸ் விஷயத்தில் அவங்க கூட்டத்திற்குள் நுழைய மன தைரியம் உள்ள பெண் தேவை”.
“நான் என்ன செய்யணும் செய்ய வேண்டாம்னு முடிவு செய்ய என் தோழர்கள் இருக்காங்க. எங்கள் குரல் அந்த ஜாக்கையும், க்றிஸ் ரெண்டு பேரின் கதையையும் முடிச்சிடுவாங்க”.
அவள் மறுத்து மறுத்து பேசிக் கொண்டிருக்க சட்டென்று நாற்காலியை விட்டு எழுந்தவன் “லுக் சஞ்சலா இங்கே நீ எதை தேடி வந்தியோ அதற்கான தீர்வு நான் சொல்கிற இடத்தில் கிடைக்கும். எங்கள் குரல் குரல்வளை நெறிக்கப்பட்டு மொத்த கூட்டமும் என் கையில் இருக்காங்க. சோ நீ நான் சொல்கிறபடி நடந்தாகணும்”.
“அப்போ தமயந்திக்கு எப்போ நீதி கிடைக்கும்?”
அவளை கூர்ந்து பார்த்தவன் அங்கே மேஜை மீது அவள் எடுத்து வைத்திருந்த அவனது தநதையின் டைரியை கையில் எடுத்துக் கொண்டு “தமயந்திக்கும் இப்போ நீ செய்யப் போகிற இந்த செயலுக்கும் தொடர்பு உண்டு. இந்த கேஸ் முடியும் போது உன் கேள்விகளுக்கான விடை உனக்கு கிடைக்கும்”.
அவன் சொன்னதின் அர்த்தம் புரிய “குணா, பார்த்தி எல்லோரையும் பிடிச்சாச்சா? சோ ப்ளான் பண்ணி தான் மூவ் பண்ணி இருக்க. என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்க” என்றாள் தெனாவெட்டாக.
அவனது முகம் கடுமையைப் பூசிக் கொள்ள “தமயந்தியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்னிடம் இருக்கு. அவளது கடைசி நிமிடங்கள் மிக மோசமானதாக இருந்திருக்கு. ஒரு பனிரெண்டு வருடம் முன்னர் நடந்த கொலையோட அதே பாணி இப்போது கடைபிடிக்க பட்டிருக்கு. அப்போ அதை செய்தவங்க தானே இப்போ மீண்டும் வந்திருக்கணும்”.
அவன் சொல்வதை அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்தவள் அவனது கடைசி வார்த்தையில் எழுந்து நின்று விட்டாள்.