அத்தியாயம் – 11
அவள் நடந்து கொண்ட விதத்தை அன்னை வந்ததும் அவரிடம் பகிர்ந்து கொண்டாள் அஞ்சனா. காயத்ரிக்கு இப்போது பெரியவளை எண்ணி உள்ளுக்குள் மிகுந்த கவலையாகிப் போயிற்று.
அவள் ஏதோவொரு அழுத்தத்தில் அப்படி செய்கிறாள் என்று எண்ணி இருக்க, ஒவ்வொரு நாளும் அவளின் போக்கு மேலும் அதிகமாக சென்று கொண்டிருப்பதை எண்ணி பயந்து போனார்.
“யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குமாம். அப்படி இருக்கு உங்க அக்கா பண்றது. கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேன்னு இருக்காளே!”.
“அவ சரியில்லம்மா! அக்காவுக்குள்ள இப்படியொரு குணம் இருக்கும்னு நானும் நினைக்கலம்மா. இப்போ எனக்கு அத்தானை நினைத்து தான் கவலையாக இருக்கு. அந்த மனுஷன் இவளுக்கு தலைவலின்னு சொன்னவுடனே பதறிப் போய் போன் பண்றார்”.
“நேத்து நான் அவ்வளவு பேசி இருக்கேன் அஞ்சு. அப்பா வேற கூப்பிட்டு புத்திமதி சொல்லி இருக்காங்க. எல்லாத்தையும் கேட்டுகிட்டு அதற்கு பிறகும் இப்படி பண்றாளே”.
“நான் அவ கிட்ட இனி இதைப் பற்றி பேசப் போறதில்லைம்மா. எனக்கு வெறுத்துப் போச்சு”.
“நானும் தான்!”.
அவர்கள் அவளைப் பற்றி பலவாறு பேசிக் கொண்டிருக்க, அவளோ தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள். அவளின் மனம் கடவுளிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டு இருந்தது.
அவனுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது. நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.
அன்று முழுவதும் எவரிடமும் பேசாமல் தன் உணர்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தாள். அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களும் அப்படியே கழிந்தது.
ஆபிசிலும் அதற்கடுத்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். நாட்கள் வேகமாக கடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வில்லாமல் தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்தாள்.
திருமணப் பத்திரிக்கை வந்து கோவிலில் வைத்து வாங்கியபின் காயத்ரியும் கல்யாணராமனும் மெல்ல உறவினர்களுக்கு வழங்க ஆரம்பித்திருந்தனர். அவளை கேட்டால் அந்தப் பத்திரிகையில் என்ன இருந்தது என்று கூட தெரியாது.
அலுவலகத்தில் அவள் டீமில் இருந்தவர்களுக்கு அவளைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. அவர்கள் டீமே சுவாரசியம் இழந்து காணப்பட்டது. எல்லோருக்கும் மாறனை மிகவும் பிடிக்கும். யாருக்கும் உதவி என்றால் உடனே ஓடிச் சென்று செய்பவன் ஆயிற்றே. கார்த்திக் எட்டி இருந்து இருக்கும் சூழ்நிலையை அவதானித்துக் கொண்டிருந்தானே தவிர, அவளின் அருகே வர முயற்ச்சிக்கவில்லை.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. அவளுக்கு எதுவும் அதைப் பற்றி கவலை இல்லை. அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஷ்யாம் அவளிடம் ஓடி வந்தான்.
அவன் முகமே பதற்றத்தில் இருப்பதைக் காட்டியது.
“தர்ஷ்! அங்கே இருக்கிறவங்க கிட்ட இருந்து மெச்செஜ் வந்திருக்கு. மாறன் அந்த வீகென்ட் பக்கத்திலிருந்த ஒரு ஊருக்கு காரில் கிளம்பி போய் இருக்கார். போகும் வழியில் விபத்து நடந்திருக்கு. இப்போ விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு மூணு கிலோ மீட்டரில் ஒரு பாடி கிடைச்சிருக்காம்” என்று சொல்லி முடிக்கும் முன்னே மயங்கி விழுந்திருந்தாள்.
அப்போதுதான் உள்ளே நுழைந்த ஆர்த்தி வேகமாக ஓடி வந்து அவளை தாங்கிப் பிடிக்க, அலுவலகமே கலவரமாகிப் போனது. அவளுக்கு தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்க முயற்சிகள் எடுத்தனர்.
மயக்கம் தெளிந்ததும் தன் இரு கரம் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். சுற்றி இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தவிக்க ஆரம்பித்தனர். கார்த்திக் அப்போது வந்திருக்கவில்லை.
மீண்டும் வந்த செய்தி உண்மை தானா என்று கேட்டறிந்து கொண்டு அனைவருமாக கூடி கூடிப் பேசினார்கள். அப்போது மாறனின் பெற்றோர்கள் வந்திருப்பதாக யாரோ வந்து கூறவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போயினர்.
அவளின் கண்களில் கண்ணீர் வற்றாத நதியைப் போல ஓடத் துவங்கியது. அனைவருக்குமே அந்த நடுக்கம் எழ ஆரம்பித்தது. மேல் அதிகாரிகள் விஷயம் அறிந்து மாறனின் பெற்றவர்களை அழைத்து வந்திருந்த செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்தனர்.
“நிச்சயமா அது உங்க மகனுடைய உடல் தான் என்று எந்த தகவலும் வரல. அதனால நமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. மாறனுக்கு எதுவும் ஆகி இருக்காது என்று நம்புவோம்” என்று ஆறுதல் அளித்து அவர்களை அனுப்பினார்கள்.
அவள் நடந்து கொண்ட விதத்தை அன்னை வந்ததும் அவரிடம் பகிர்ந்து கொண்டாள் அஞ்சனா. காயத்ரிக்கு இப்போது பெரியவளை எண்ணி உள்ளுக்குள் மிகுந்த கவலையாகிப் போயிற்று.
அவள் ஏதோவொரு அழுத்தத்தில் அப்படி செய்கிறாள் என்று எண்ணி இருக்க, ஒவ்வொரு நாளும் அவளின் போக்கு மேலும் அதிகமாக சென்று கொண்டிருப்பதை எண்ணி பயந்து போனார்.
“யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குமாம். அப்படி இருக்கு உங்க அக்கா பண்றது. கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேன்னு இருக்காளே!”.
“அவ சரியில்லம்மா! அக்காவுக்குள்ள இப்படியொரு குணம் இருக்கும்னு நானும் நினைக்கலம்மா. இப்போ எனக்கு அத்தானை நினைத்து தான் கவலையாக இருக்கு. அந்த மனுஷன் இவளுக்கு தலைவலின்னு சொன்னவுடனே பதறிப் போய் போன் பண்றார்”.
“நேத்து நான் அவ்வளவு பேசி இருக்கேன் அஞ்சு. அப்பா வேற கூப்பிட்டு புத்திமதி சொல்லி இருக்காங்க. எல்லாத்தையும் கேட்டுகிட்டு அதற்கு பிறகும் இப்படி பண்றாளே”.
“நான் அவ கிட்ட இனி இதைப் பற்றி பேசப் போறதில்லைம்மா. எனக்கு வெறுத்துப் போச்சு”.
“நானும் தான்!”.
அவர்கள் அவளைப் பற்றி பலவாறு பேசிக் கொண்டிருக்க, அவளோ தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள். அவளின் மனம் கடவுளிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டு இருந்தது.
அவனுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது. நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.
அன்று முழுவதும் எவரிடமும் பேசாமல் தன் உணர்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தாள். அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களும் அப்படியே கழிந்தது.
ஆபிசிலும் அதற்கடுத்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். நாட்கள் வேகமாக கடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வில்லாமல் தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்தாள்.
திருமணப் பத்திரிக்கை வந்து கோவிலில் வைத்து வாங்கியபின் காயத்ரியும் கல்யாணராமனும் மெல்ல உறவினர்களுக்கு வழங்க ஆரம்பித்திருந்தனர். அவளை கேட்டால் அந்தப் பத்திரிகையில் என்ன இருந்தது என்று கூட தெரியாது.
அலுவலகத்தில் அவள் டீமில் இருந்தவர்களுக்கு அவளைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. அவர்கள் டீமே சுவாரசியம் இழந்து காணப்பட்டது. எல்லோருக்கும் மாறனை மிகவும் பிடிக்கும். யாருக்கும் உதவி என்றால் உடனே ஓடிச் சென்று செய்பவன் ஆயிற்றே. கார்த்திக் எட்டி இருந்து இருக்கும் சூழ்நிலையை அவதானித்துக் கொண்டிருந்தானே தவிர, அவளின் அருகே வர முயற்ச்சிக்கவில்லை.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. அவளுக்கு எதுவும் அதைப் பற்றி கவலை இல்லை. அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஷ்யாம் அவளிடம் ஓடி வந்தான்.
அவன் முகமே பதற்றத்தில் இருப்பதைக் காட்டியது.
“தர்ஷ்! அங்கே இருக்கிறவங்க கிட்ட இருந்து மெச்செஜ் வந்திருக்கு. மாறன் அந்த வீகென்ட் பக்கத்திலிருந்த ஒரு ஊருக்கு காரில் கிளம்பி போய் இருக்கார். போகும் வழியில் விபத்து நடந்திருக்கு. இப்போ விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு மூணு கிலோ மீட்டரில் ஒரு பாடி கிடைச்சிருக்காம்” என்று சொல்லி முடிக்கும் முன்னே மயங்கி விழுந்திருந்தாள்.
அப்போதுதான் உள்ளே நுழைந்த ஆர்த்தி வேகமாக ஓடி வந்து அவளை தாங்கிப் பிடிக்க, அலுவலகமே கலவரமாகிப் போனது. அவளுக்கு தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்க முயற்சிகள் எடுத்தனர்.
மயக்கம் தெளிந்ததும் தன் இரு கரம் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். சுற்றி இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தவிக்க ஆரம்பித்தனர். கார்த்திக் அப்போது வந்திருக்கவில்லை.
மீண்டும் வந்த செய்தி உண்மை தானா என்று கேட்டறிந்து கொண்டு அனைவருமாக கூடி கூடிப் பேசினார்கள். அப்போது மாறனின் பெற்றோர்கள் வந்திருப்பதாக யாரோ வந்து கூறவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போயினர்.
அவளின் கண்களில் கண்ணீர் வற்றாத நதியைப் போல ஓடத் துவங்கியது. அனைவருக்குமே அந்த நடுக்கம் எழ ஆரம்பித்தது. மேல் அதிகாரிகள் விஷயம் அறிந்து மாறனின் பெற்றவர்களை அழைத்து வந்திருந்த செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்தனர்.
“நிச்சயமா அது உங்க மகனுடைய உடல் தான் என்று எந்த தகவலும் வரல. அதனால நமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. மாறனுக்கு எதுவும் ஆகி இருக்காது என்று நம்புவோம்” என்று ஆறுதல் அளித்து அவர்களை அனுப்பினார்கள்.