அத்தியாயம் – 11
ஊட்டியின் ப்ரூக்ளின் எஸ்டேட் நடுவே இருந்த அந்த மாளிகையின் ஒரு அறையில் கையில் கிளாசுடன் அமர்ந்திருந்த க்றிஸ் தொண்டைக்குள் இறங்கிய திரவத்தை ரசித்து கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தான்.
தாங்கள் வந்த நோக்கத்தின் முதல் அடியை வெற்றிகரமாக முடித்து வைத்த திருப்தியில் கையிலிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அலைப்பேசி அடிக்க, ஒருவித அலட்சியத்துடன் அதை எடுத்து காதில் வைத்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க க்றிஸ்?”
“என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் ஜாக். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு. அடுத்த மூவை முடிவு செய்வோம்”.
“நோ க்றிஸ்! நீ கவனமா இருக்கணும். எனக்கென்னவோ நம்மை போலீஸ் மோப்பம் பிடிச்சிட்டாங்ளோன்னு தோணுது”.
கையிலிருந்த கிளாசை கீழே வைத்து விட்டு சத்தமாக சிரித்தவன் “நோ வே! இங்கே இருக்கிற போலீஸ் எல்லாம் நம்ம கிட்ட நெருங்க கூட முடியாது. நம்ம சிந்தனை வேற. அவனுங்களால இப்படியொரு விஷயத்தை யோசிக்கவே முடியாது” என்றான் அகம்பாவமாக.
“கேரளாவில் நடந்ததை மறந்திட்டியா க்றிஸ். அவனுங்களால தான் நாம இரண்டு வருஷம் எதுவும் பண்ணாம இருந்தோம். அதோட பனிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்ததையும் மறந்திட்ட இல்ல. எவனையும் எளிதா நினைச்சிடாதே. நாம ரொம்ப கவனமா இருக்கணும்”.
அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த க்றிஸ் நறநறவென்று பற்களை கடித்து “இதுக்காகவே நாம யாருன்னு காட்டனும் ஜாக். நீ அங்கே மற்றவற்றை கவனி. நான் பூஜைக்கான இடத்தை தயார் செய்கிறேன். மற்றவை எல்லாம் நமக்கான வழியில் தகவல்கள் உனக்கு வந்து சேரும்”.
“ம்ம்...கவனம்” என்று கூறி போனை வைத்து விட்டான்.
அதே நேரம் சிவதாசும் சுபெஷும் தாம்பரம் மலைப்பகுதியை சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு இடமும் தேடலுக்கு உள்ளானது. சுமார் இரண்டு தினங்களாக தேடல் நடந்தாலும் அவர்களால் அங்கு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவனது மனசாட்சி சொன்னது நிச்சயம் அங்கே தான் அவன் தேடும் தடயங்கள் இருக்கிறது என்று. ஆனால் ஏதோவொன்று அதை கிடைக்க விடாமல் தடுக்கிறது.
“சுபேஷ்! நான் சொல்கிற மாதிரி ஒரு பவுண்டரி ரெடி பண்ணுங்க. அதுக்குள்ள நிச்சயமா நாம தேடுகிற விஷயம் கிடைக்கும்”.
“ஓகே தாஸ்”.
அவன் சொன்னபடி அனைத்தும் தயாராக ஆனது. மீண்டும் தேடுதல் வேட்டை தீவிரமானது. அவன் சொன்ன எல்லைக்குள் அந்த பாழடைந்த மண்டபமும் அதை சுற்றியுள்ள இடங்களும் வர, மெல்ல மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். அது கண்ணில் பட்டதுமே சிவதாசிற்கு நம்பிக்கை பிறந்தது.
அதன் பிறகு அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் தேடியது அனைத்தும் கிடைத்தது. இதன் பின்னணி இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தது தான் என்றாலும் இத்தனை மோசமான ஒன்றை எதிர்பார்க்கவில்லை.
அந்த குகையின் நடுவே நின்றிருந்த சிவதாஸின் கண்கள் அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தது. சுபேஷ் அனைத்தையும் தன் கையிலிருந்த கருவியில் பதிந்து கொண்டிருந்தான்.
“சுபேஷ்! எதையும் மிஸ் பண்ணிடாதே! அதோட இந்த மலையடிவாரத்தில் நம்ம ஆட்களை காவலுக்கு போடு. போலீஸ் பார்வை அவங்க மேல விழுந்தது சந்தேகமா மட்டுமே இருக்கணும். அது தான் அவர்களை வெளியே கொண்டு வரும்”.
“ஓகே தாஸ் நான் பார்த்துக்கிறேன். அடுத்த மூவ் என்ன?”
அங்கு சுவற்றில் அழிக்கப்பட்டிருந்த ஒவிங்களை பார்வையிட்டுக் கொண்டே “க்றிஸ் எங்கே இருக்கான்னு பார்க்கணும். இந்த க்ரூப்பில் அவன் தான் டேஞ்சரானவன். எப்படியும் ஒரு சில நாட்களில் இந்த பாலோயர்களுக்கு தகவல் வரும். அதை தொடர்ந்து நம்மாளு அவர்களின் நடுவே உள்ளே நுழைவான்”.
அவன் சொன்னது சுபேஷிற்கு ஓரளவு தான் புரிந்தது. ஒருவித குழப்பத்துடன் “நம்மாளு எப்படி?” என்றான்.
“எஸ்! நீ சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பு. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பினான்.
அவனது மனம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை கணக்கு போடா ஆரம்பித்தது.
திருவானைக்காவல் வீட்டில் கங்கா ஒரு பெரிய அறைக்குள் சஞ்சலாவை அழைத்துச் சென்று காண்பித்துக் கொண்டிருந்தார்.
“இது தான் மா என்னுடைய நூலகம். இங்கே தான் உனக்கு வேலை. நான் சொல்கிற குறிப்புகளை எடுத்து இங்கிருக்கிற நூல்களில் இருந்து தேவையானவற்றை ஆராய்ந்து எனக்கு நோட்ஸ் எடுத்து தர வேண்டும்” என்றார்.
அவளும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டாலும் அந்த அறையை கண்கள் அலசி ஆராய்ந்தது.
ஊட்டியின் ப்ரூக்ளின் எஸ்டேட் நடுவே இருந்த அந்த மாளிகையின் ஒரு அறையில் கையில் கிளாசுடன் அமர்ந்திருந்த க்றிஸ் தொண்டைக்குள் இறங்கிய திரவத்தை ரசித்து கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தான்.
தாங்கள் வந்த நோக்கத்தின் முதல் அடியை வெற்றிகரமாக முடித்து வைத்த திருப்தியில் கையிலிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அலைப்பேசி அடிக்க, ஒருவித அலட்சியத்துடன் அதை எடுத்து காதில் வைத்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க க்றிஸ்?”
“என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் ஜாக். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு. அடுத்த மூவை முடிவு செய்வோம்”.
“நோ க்றிஸ்! நீ கவனமா இருக்கணும். எனக்கென்னவோ நம்மை போலீஸ் மோப்பம் பிடிச்சிட்டாங்ளோன்னு தோணுது”.
கையிலிருந்த கிளாசை கீழே வைத்து விட்டு சத்தமாக சிரித்தவன் “நோ வே! இங்கே இருக்கிற போலீஸ் எல்லாம் நம்ம கிட்ட நெருங்க கூட முடியாது. நம்ம சிந்தனை வேற. அவனுங்களால இப்படியொரு விஷயத்தை யோசிக்கவே முடியாது” என்றான் அகம்பாவமாக.
“கேரளாவில் நடந்ததை மறந்திட்டியா க்றிஸ். அவனுங்களால தான் நாம இரண்டு வருஷம் எதுவும் பண்ணாம இருந்தோம். அதோட பனிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்ததையும் மறந்திட்ட இல்ல. எவனையும் எளிதா நினைச்சிடாதே. நாம ரொம்ப கவனமா இருக்கணும்”.
அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த க்றிஸ் நறநறவென்று பற்களை கடித்து “இதுக்காகவே நாம யாருன்னு காட்டனும் ஜாக். நீ அங்கே மற்றவற்றை கவனி. நான் பூஜைக்கான இடத்தை தயார் செய்கிறேன். மற்றவை எல்லாம் நமக்கான வழியில் தகவல்கள் உனக்கு வந்து சேரும்”.
“ம்ம்...கவனம்” என்று கூறி போனை வைத்து விட்டான்.
அதே நேரம் சிவதாசும் சுபெஷும் தாம்பரம் மலைப்பகுதியை சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு இடமும் தேடலுக்கு உள்ளானது. சுமார் இரண்டு தினங்களாக தேடல் நடந்தாலும் அவர்களால் அங்கு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவனது மனசாட்சி சொன்னது நிச்சயம் அங்கே தான் அவன் தேடும் தடயங்கள் இருக்கிறது என்று. ஆனால் ஏதோவொன்று அதை கிடைக்க விடாமல் தடுக்கிறது.
“சுபேஷ்! நான் சொல்கிற மாதிரி ஒரு பவுண்டரி ரெடி பண்ணுங்க. அதுக்குள்ள நிச்சயமா நாம தேடுகிற விஷயம் கிடைக்கும்”.
“ஓகே தாஸ்”.
அவன் சொன்னபடி அனைத்தும் தயாராக ஆனது. மீண்டும் தேடுதல் வேட்டை தீவிரமானது. அவன் சொன்ன எல்லைக்குள் அந்த பாழடைந்த மண்டபமும் அதை சுற்றியுள்ள இடங்களும் வர, மெல்ல மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். அது கண்ணில் பட்டதுமே சிவதாசிற்கு நம்பிக்கை பிறந்தது.
அதன் பிறகு அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் தேடியது அனைத்தும் கிடைத்தது. இதன் பின்னணி இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தது தான் என்றாலும் இத்தனை மோசமான ஒன்றை எதிர்பார்க்கவில்லை.
அந்த குகையின் நடுவே நின்றிருந்த சிவதாஸின் கண்கள் அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தது. சுபேஷ் அனைத்தையும் தன் கையிலிருந்த கருவியில் பதிந்து கொண்டிருந்தான்.
“சுபேஷ்! எதையும் மிஸ் பண்ணிடாதே! அதோட இந்த மலையடிவாரத்தில் நம்ம ஆட்களை காவலுக்கு போடு. போலீஸ் பார்வை அவங்க மேல விழுந்தது சந்தேகமா மட்டுமே இருக்கணும். அது தான் அவர்களை வெளியே கொண்டு வரும்”.
“ஓகே தாஸ் நான் பார்த்துக்கிறேன். அடுத்த மூவ் என்ன?”
அங்கு சுவற்றில் அழிக்கப்பட்டிருந்த ஒவிங்களை பார்வையிட்டுக் கொண்டே “க்றிஸ் எங்கே இருக்கான்னு பார்க்கணும். இந்த க்ரூப்பில் அவன் தான் டேஞ்சரானவன். எப்படியும் ஒரு சில நாட்களில் இந்த பாலோயர்களுக்கு தகவல் வரும். அதை தொடர்ந்து நம்மாளு அவர்களின் நடுவே உள்ளே நுழைவான்”.
அவன் சொன்னது சுபேஷிற்கு ஓரளவு தான் புரிந்தது. ஒருவித குழப்பத்துடன் “நம்மாளு எப்படி?” என்றான்.
“எஸ்! நீ சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பு. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பினான்.
அவனது மனம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை கணக்கு போடா ஆரம்பித்தது.
திருவானைக்காவல் வீட்டில் கங்கா ஒரு பெரிய அறைக்குள் சஞ்சலாவை அழைத்துச் சென்று காண்பித்துக் கொண்டிருந்தார்.
“இது தான் மா என்னுடைய நூலகம். இங்கே தான் உனக்கு வேலை. நான் சொல்கிற குறிப்புகளை எடுத்து இங்கிருக்கிற நூல்களில் இருந்து தேவையானவற்றை ஆராய்ந்து எனக்கு நோட்ஸ் எடுத்து தர வேண்டும்” என்றார்.
அவளும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டாலும் அந்த அறையை கண்கள் அலசி ஆராய்ந்தது.