அத்தியாயம் – 11
நாட்கள் யாருக்கும் நில்லாமல் சடுதியில் ஓட, ஸ்ருதி வேலைக்குச் சேர்ந்து பதினைந்து நாட்கள் ஓடி போயிருந்தது.
வேலைக்குச் செல்வதிலும் தினம் ஒரு தகவலாக வந்த மெசேஜ்ஜிலும் மனம் நிறைய ஸ்ருதியின் முகம் தெளிவடையத் தொடங்கியிருந்தது.
ஆரம்பத்தில் அவனது பேச்சை வேண்டா வெறுப்பாகக் கேட்கத் தொடங்கியவள் நாட்கள் செல்ல செல்ல ஆர்வத்துடன் எதிர்நோக்க ஆரம்பித்தாள். மனமோ அவனது செயல்களுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தது.அவனோ தினமும் அவள் அணிந்து செல்லும் ஆடைகளைப் பற்றி, தனது நடத்தைக்காக மறைமுகமாக மன்னிப்பு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தான்.ஒருவிதத்தில் அவனது பேச்சு அவள் மனதில் நெருக்கத்தைக் கொண்டு வந்ததென்றால், மறுபுறம் சற்று கோபமும் எழுந்தது. ‘என்னை என்ன நினைச்சுகிட்டு இருக்கான்.திடீர்ன்னு என் மேல எப்படி இந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வந்ததுன்னு சொல்லாம, என் கேரக்டரை பத்தி பேசியதுக்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்காம எல்லாத்தையும் எப்படிச் சரி பண்ணிட முடியும்ன்னு நினைக்கிறான்?’ என்று ஆத்திரப்பட்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு எழுந்திரிக்க மனமில்லாமல் எழுந்தவள் காலைகடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
அவளது ரூம்மேட்டுகளோ இரவு பணிக்கு போய்விட்டு வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.வேலைக்குச் செல்லும் நாட்கள் எல்லாம் நேரம் போவதே தெரியாது.இந்த ஞாயிற்றுக்கிழமைகள் ஏன் வருகின்றன என்று அலுப்பாக இருக்கும் ஸ்ருதிக்கு.
என்ன தான் ஒருவாரமாகச் சேர்த்து வைத்திருந்த துணிகளைத் துவைத்து அயர்ன் செய்தாலும், ரெண்டு மணி நேரத்திற்குள் மேல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கப் போர் அடிக்கும்.மற்ற அறைகளில் இருப்பவர்கள் எல்லாம் மாலுக்கும், சினிமாவுக்கும் சென்றுவிட, வழக்கம் போல் தோட்டத்தில் தனிமையில் அமர்ந்திருப்பாள்.
இன்றும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் நிக்கி தன் உடைகளைப் பற்றி அடிக்கும் கமெண்ட் நினைவுக்கு வர,கடைக்குச் சென்று புதுசு வாங்கி வருவோமா என்றெண்ணினாள்.
அந்தநேரம் அவளது அலைபேசி அழைப்பு விடுக்க எழுந்து சென்று யாரென்று பார்த்தாள். ஆர்த்தியிடமிருந்து அழைப்பு.
“ஹலோ அக்கா..எப்படி இருக்கீங்க?”
“ஹாய் ஸ்ருதி..நல்லாயிருக்கேன். நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே சொல்லு?”
“ம்ம்..இன்னைக்குக் கொஞ்சம் டிரஸ் பர்சேஸ் பண்ண போகலாமான்னு இருக்கேன் அக்கா.ஏன் கேட்குறீங்க?”
“ஒ..அப்போ சரி.நீ எத்தனை மணிக்கு ரெடியா இருப்ப? நானும் வரவா?”
“தாராளாமா வாங்கக்கா” என்றாள் சந்தோஷத்துடன்.
“நீ எத்தனை மணிக்கு கிளம்புவ சொல்லு. நான் அங்க வந்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.”
“சரிக்கா.நான் ஒன்பது மணிக்கு ரெடியாகிடுவேன். நீங்க வந்துடுங்க.”
“ஓகே ஸ்ருதி. அப்புறம் கடைக்குப் போயிட்டு அத்தை நம்மளை சாப்பாட்டுக்கு இங்கே வந்துட சொல்றாங்க.”
“அங்கேயா?”
“ஹலோ என்ன இழுவை?கவலைபடாதீங்க மேடம். உங்க ஆளு வர மாட்டார்” என்றாள் நக்கலாக.
“ம்ம்..நீங்க கிளம்பி வந்துடுங்கக்கா” என்று சொல்லி போனை வைத்தாள்.
ஆர்த்தியோ ஸ்ருதியிடம் பேசி முடித்துவிட்டு நிகிலுக்கு அழைத்தாள். “என்ன மச்சினரே!எத்தனை நாளைக்கு நாலு சுவற்றுக்குள்ளேயே கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமேன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கப் போறீங்க?”என்றாள்.
“ஹாய் அண்ணி..திடீர்ன்னு காலையில போன் பண்ணி வம்பு இழுக்குறீங்க? என்ன விசேஷம் சொல்லுங்க.”
“ம்ம்..விசேஷம் தான். உங்க ஆளோட டிரெஸ்ஸை ரொம்பப் புகழ்ந்திருப்பீங்க போலருக்கு.இன்னைக்கு டிரஸ் வாங்க கிளம்பிட்டு இருக்காங்க மேடம்.நீங்க என்ன பண்றதா உத்தேசம்.”
“ஹா..ஹா..அப்போ நான் பாடுறதை தினமும் கேட்குறான்னு தானே அர்த்தம்.”
“இதுக்கெல்லாம் சந்தோஷப்படாதீங்க நிக்கி.இனிமே தான் இருக்கு விவகாரமே.”
“என்ன அண்ணி பயமுறுத்துறீங்க.ஏன் ஏதாவது உங்ககிட்ட பேசினாளா?”
“அடடா!அதெல்லாமில்லை.சரி அதை விடுங்க.நீங்க கடைக்கு வரீங்களா?”
அப்போது உள்ளே நுழைந்த நீரஜ் ஆர்த்தியிடம் சைகையில் யாரென்று கேட்க “நிக்கி” என்றாள்.
அவளிடமிருந்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு “என்னடா தம்பி!எப்படி போயிட்டிருக்கு உன் ஆர்ஜே பயணம்?”
“நான் தினமும் விஜயகாந்த் மாதிரி ராத்திரியானா ராசாத்தி உன்னைன்னு பாடிகிட்டு இருக்கேன். அந்தச் சைடுலே இருந்து நோ ரெஸ்போன்ஸ்.”
“அதுசரி எத்தனை நாளைக்குத் தான் இப்படி நேரா பேசாம மைக் மோகன் மாதிரி பாடிகிட்டு போற?
நாட்கள் யாருக்கும் நில்லாமல் சடுதியில் ஓட, ஸ்ருதி வேலைக்குச் சேர்ந்து பதினைந்து நாட்கள் ஓடி போயிருந்தது.
வேலைக்குச் செல்வதிலும் தினம் ஒரு தகவலாக வந்த மெசேஜ்ஜிலும் மனம் நிறைய ஸ்ருதியின் முகம் தெளிவடையத் தொடங்கியிருந்தது.
ஆரம்பத்தில் அவனது பேச்சை வேண்டா வெறுப்பாகக் கேட்கத் தொடங்கியவள் நாட்கள் செல்ல செல்ல ஆர்வத்துடன் எதிர்நோக்க ஆரம்பித்தாள். மனமோ அவனது செயல்களுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தது.அவனோ தினமும் அவள் அணிந்து செல்லும் ஆடைகளைப் பற்றி, தனது நடத்தைக்காக மறைமுகமாக மன்னிப்பு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தான்.ஒருவிதத்தில் அவனது பேச்சு அவள் மனதில் நெருக்கத்தைக் கொண்டு வந்ததென்றால், மறுபுறம் சற்று கோபமும் எழுந்தது. ‘என்னை என்ன நினைச்சுகிட்டு இருக்கான்.திடீர்ன்னு என் மேல எப்படி இந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வந்ததுன்னு சொல்லாம, என் கேரக்டரை பத்தி பேசியதுக்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்காம எல்லாத்தையும் எப்படிச் சரி பண்ணிட முடியும்ன்னு நினைக்கிறான்?’ என்று ஆத்திரப்பட்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு எழுந்திரிக்க மனமில்லாமல் எழுந்தவள் காலைகடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
அவளது ரூம்மேட்டுகளோ இரவு பணிக்கு போய்விட்டு வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.வேலைக்குச் செல்லும் நாட்கள் எல்லாம் நேரம் போவதே தெரியாது.இந்த ஞாயிற்றுக்கிழமைகள் ஏன் வருகின்றன என்று அலுப்பாக இருக்கும் ஸ்ருதிக்கு.
என்ன தான் ஒருவாரமாகச் சேர்த்து வைத்திருந்த துணிகளைத் துவைத்து அயர்ன் செய்தாலும், ரெண்டு மணி நேரத்திற்குள் மேல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கப் போர் அடிக்கும்.மற்ற அறைகளில் இருப்பவர்கள் எல்லாம் மாலுக்கும், சினிமாவுக்கும் சென்றுவிட, வழக்கம் போல் தோட்டத்தில் தனிமையில் அமர்ந்திருப்பாள்.
இன்றும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் நிக்கி தன் உடைகளைப் பற்றி அடிக்கும் கமெண்ட் நினைவுக்கு வர,கடைக்குச் சென்று புதுசு வாங்கி வருவோமா என்றெண்ணினாள்.
அந்தநேரம் அவளது அலைபேசி அழைப்பு விடுக்க எழுந்து சென்று யாரென்று பார்த்தாள். ஆர்த்தியிடமிருந்து அழைப்பு.
“ஹலோ அக்கா..எப்படி இருக்கீங்க?”
“ஹாய் ஸ்ருதி..நல்லாயிருக்கேன். நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே சொல்லு?”
“ம்ம்..இன்னைக்குக் கொஞ்சம் டிரஸ் பர்சேஸ் பண்ண போகலாமான்னு இருக்கேன் அக்கா.ஏன் கேட்குறீங்க?”
“ஒ..அப்போ சரி.நீ எத்தனை மணிக்கு ரெடியா இருப்ப? நானும் வரவா?”
“தாராளாமா வாங்கக்கா” என்றாள் சந்தோஷத்துடன்.
“நீ எத்தனை மணிக்கு கிளம்புவ சொல்லு. நான் அங்க வந்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.”
“சரிக்கா.நான் ஒன்பது மணிக்கு ரெடியாகிடுவேன். நீங்க வந்துடுங்க.”
“ஓகே ஸ்ருதி. அப்புறம் கடைக்குப் போயிட்டு அத்தை நம்மளை சாப்பாட்டுக்கு இங்கே வந்துட சொல்றாங்க.”
“அங்கேயா?”
“ஹலோ என்ன இழுவை?கவலைபடாதீங்க மேடம். உங்க ஆளு வர மாட்டார்” என்றாள் நக்கலாக.
“ம்ம்..நீங்க கிளம்பி வந்துடுங்கக்கா” என்று சொல்லி போனை வைத்தாள்.
ஆர்த்தியோ ஸ்ருதியிடம் பேசி முடித்துவிட்டு நிகிலுக்கு அழைத்தாள். “என்ன மச்சினரே!எத்தனை நாளைக்கு நாலு சுவற்றுக்குள்ளேயே கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமேன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கப் போறீங்க?”என்றாள்.
“ஹாய் அண்ணி..திடீர்ன்னு காலையில போன் பண்ணி வம்பு இழுக்குறீங்க? என்ன விசேஷம் சொல்லுங்க.”
“ம்ம்..விசேஷம் தான். உங்க ஆளோட டிரெஸ்ஸை ரொம்பப் புகழ்ந்திருப்பீங்க போலருக்கு.இன்னைக்கு டிரஸ் வாங்க கிளம்பிட்டு இருக்காங்க மேடம்.நீங்க என்ன பண்றதா உத்தேசம்.”
“ஹா..ஹா..அப்போ நான் பாடுறதை தினமும் கேட்குறான்னு தானே அர்த்தம்.”
“இதுக்கெல்லாம் சந்தோஷப்படாதீங்க நிக்கி.இனிமே தான் இருக்கு விவகாரமே.”
“என்ன அண்ணி பயமுறுத்துறீங்க.ஏன் ஏதாவது உங்ககிட்ட பேசினாளா?”
“அடடா!அதெல்லாமில்லை.சரி அதை விடுங்க.நீங்க கடைக்கு வரீங்களா?”
அப்போது உள்ளே நுழைந்த நீரஜ் ஆர்த்தியிடம் சைகையில் யாரென்று கேட்க “நிக்கி” என்றாள்.
அவளிடமிருந்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு “என்னடா தம்பி!எப்படி போயிட்டிருக்கு உன் ஆர்ஜே பயணம்?”
“நான் தினமும் விஜயகாந்த் மாதிரி ராத்திரியானா ராசாத்தி உன்னைன்னு பாடிகிட்டு இருக்கேன். அந்தச் சைடுலே இருந்து நோ ரெஸ்போன்ஸ்.”
“அதுசரி எத்தனை நாளைக்குத் தான் இப்படி நேரா பேசாம மைக் மோகன் மாதிரி பாடிகிட்டு போற?