அத்தியாயம் – 10
வீடு வந்து சேர்ந்த பின்னரும் அவன் பேசிய வார்த்தைகள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. இவன் சரியானவன் இல்லை என்கிற பயம் முதன்முறையாக உள்ளுக்குள் எழ ஆரம்பித்திருந்தது.
தனியே அறையில் அமர்ந்திருந்தவளிடம் வந்தமர்ந்த அஞ்சனா “என்னக்கா யோசனை?” என்றாள் மெல்லிய குரலில்.
அவளை திரும்பிப் பார்த்தவளின் மனது ‘இவளிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாமா’ என்று யோசித்தது.
“அக்கா!”
சொன்னால் என்ன ஆகும்? இவளால் என்னை காப்பாற்ற முடியுமா? அம்மாவால் கூட முடியாத ஒன்று அஞ்சனவால் முடியுமா? இல்லை வீட்டை விட்டு சென்று வெளியில் ஹாஸ்ட்டலில் தங்கி விடலாமா மாறன் வரும் வரை?
“என்னக்கா? ஏன் பேச மாட்டேன்ற?”
“ம்ம்...உனக்கு படிக்க எதுவும் இல்லையா? ஏன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்க?”
சட்டென்று எழுந்து கொண்டவள் “உனக்கு என்ன ஆச்சுக்கா? ஏன் இப்படி இருக்க?”
“எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நடக்குது. என்னைத் தவிர மற்ற எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. யாருமே என்னைப் பற்றி கவலைப்படவே இல்லை தானே? பின்ன நான் எப்படி இருக்க முடியும்?”
தர்ஷனாவை முறைத்துப் பார்த்த அஞ்சனா “ஆனாலும் உனக்கு இந்தப் பிடிவாதம் ஆகாதுக்கா. நம்ம அப்பா நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார் தான். அதற்காக அவர் செய்த ஒரு நல்ல விஷயத்தை ஏற்க கூடாதுன்னு நினைக்கிற பார், இது ரொம்ப தப்புக்கா”.
அவளின் பேச்சில் அதிர்ந்து போனவள் “நான் அப்படி செய்யக் கூடியவளா அஞ்சு?”
“அது தான் செஞ்சிட்டு இருக்கியே. அத்தானைப் பொறுத்தவரை என்னால எந்த தப்பும் பார்க்க முடியலக்கா. அதிலும் அவங்க குடும்பம் ரொம்ப இயல்பானவங்களா இருக்காங்க. இதை விட வேற என்னக்கா வேணும் உனக்கு?”
“சின்ன பொண்ணுன்னு நிரூபிக்கிற” என்றாள் வெறுத்துப் போன உணர்வுடன்.
“நான் சின்ன பொண்ணு தான்- அக்கா. ஆனா உன்னை விட தைரியமானவள். எனக்கு என்ன தேவையோ அதை அப்பாவிடம் நேரடியா கேட்டு வாங்க கூடியவள். இப்பவும் சொல்றேன் அப்பாவை வைத்து அத்தானை எடை போடாதே!”
“அப்படின்னு உனக்கு யார் சொன்னா?”
“அப்போ வேற என்ன காரணம்?”
“நான் எங்க ஆபிசிலேயே வேற ஒருத்தரை காதலிக்கிறேன்” என்று உண்மையை போட்டு உடைத்தாள்.
எகத்தாளமான ஒரு சிரிப்புடன் “இதை நான் நம்பனும். பிடிவாதத்துக்காக எதுவும் பேசாதே. தயவு செய்து அத்தானைப் புரிஞ்சுக்கப் பாரு” என்றாள்.
கண்களில் வெறுமையுடன் “தயவு செய்து இனி என்கிட்ட வந்து ஏன் அப்படி இருக்க? இப்படி இருக்கன்னு கேட்காதே அஞ்சு” என்று விட்டாள்.
அஞ்சுவிற்கு அத்தனை கோபம் “அக்கா கிடைக்கிற நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதே” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
அவள் சென்று அன்னையிடம் அனைத்தையும் கூறிவிட அவர் தர்ஷனாவைப் பார்க்க வந்து விட்டார்.
“என்ன தர்ஷனா இது! உன்கிட்ட இதை எதிர்பார்க்கல. நான் பார்த்தவரை மாப்பிள்ளை மேலையும், அந்த குடும்பத்து மேலையும் நல்ல அபிப்பிராயம் தான் அதிகமாயிட்டே வருது. எந்த இடத்திலேயும் அவங்க தவறான ஆளாக தெரியல. நாம எதிர்பார்த்தது இப்படியொரு வாழ்க்கையைத் தானே?”
நீங்களுமா அம்மா? என்பது போல பார்த்துவிட்டு “சரிம்மா! உங்க மாப்பிள்ளை தங்கமானவர் தான். அது தான் நான் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கிட்டு தானே இருக்கேன். இன்னும் என்கிட்ட என்ன எதிர்பார்க்குறீங்க?”
“அஞ்சு கிட்ட ஆபிசில் யாரையோ லவ் பண்றேன்னு எதுக்கு சொன்ன? நீ சொன்னது மாப்பிள்ளை காதுல விழுந்தா என்ன ஆகும்? தப்பா நினைக்க மாட்டாங்க?”
அன்னையின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் ‘சொன்ன பிறகும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு படுத்துறான்-மா. என்னால முடியல. ஒன்னு செத்துடனும் இல்ல இங்கிருந்து எங்கேயாவது போயிடனும்’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.
வீடு வந்து சேர்ந்த பின்னரும் அவன் பேசிய வார்த்தைகள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. இவன் சரியானவன் இல்லை என்கிற பயம் முதன்முறையாக உள்ளுக்குள் எழ ஆரம்பித்திருந்தது.
தனியே அறையில் அமர்ந்திருந்தவளிடம் வந்தமர்ந்த அஞ்சனா “என்னக்கா யோசனை?” என்றாள் மெல்லிய குரலில்.
அவளை திரும்பிப் பார்த்தவளின் மனது ‘இவளிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாமா’ என்று யோசித்தது.
“அக்கா!”
சொன்னால் என்ன ஆகும்? இவளால் என்னை காப்பாற்ற முடியுமா? அம்மாவால் கூட முடியாத ஒன்று அஞ்சனவால் முடியுமா? இல்லை வீட்டை விட்டு சென்று வெளியில் ஹாஸ்ட்டலில் தங்கி விடலாமா மாறன் வரும் வரை?
“என்னக்கா? ஏன் பேச மாட்டேன்ற?”
“ம்ம்...உனக்கு படிக்க எதுவும் இல்லையா? ஏன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்க?”
சட்டென்று எழுந்து கொண்டவள் “உனக்கு என்ன ஆச்சுக்கா? ஏன் இப்படி இருக்க?”
“எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நடக்குது. என்னைத் தவிர மற்ற எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. யாருமே என்னைப் பற்றி கவலைப்படவே இல்லை தானே? பின்ன நான் எப்படி இருக்க முடியும்?”
தர்ஷனாவை முறைத்துப் பார்த்த அஞ்சனா “ஆனாலும் உனக்கு இந்தப் பிடிவாதம் ஆகாதுக்கா. நம்ம அப்பா நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார் தான். அதற்காக அவர் செய்த ஒரு நல்ல விஷயத்தை ஏற்க கூடாதுன்னு நினைக்கிற பார், இது ரொம்ப தப்புக்கா”.
அவளின் பேச்சில் அதிர்ந்து போனவள் “நான் அப்படி செய்யக் கூடியவளா அஞ்சு?”
“அது தான் செஞ்சிட்டு இருக்கியே. அத்தானைப் பொறுத்தவரை என்னால எந்த தப்பும் பார்க்க முடியலக்கா. அதிலும் அவங்க குடும்பம் ரொம்ப இயல்பானவங்களா இருக்காங்க. இதை விட வேற என்னக்கா வேணும் உனக்கு?”
“சின்ன பொண்ணுன்னு நிரூபிக்கிற” என்றாள் வெறுத்துப் போன உணர்வுடன்.
“நான் சின்ன பொண்ணு தான்- அக்கா. ஆனா உன்னை விட தைரியமானவள். எனக்கு என்ன தேவையோ அதை அப்பாவிடம் நேரடியா கேட்டு வாங்க கூடியவள். இப்பவும் சொல்றேன் அப்பாவை வைத்து அத்தானை எடை போடாதே!”
“அப்படின்னு உனக்கு யார் சொன்னா?”
“அப்போ வேற என்ன காரணம்?”
“நான் எங்க ஆபிசிலேயே வேற ஒருத்தரை காதலிக்கிறேன்” என்று உண்மையை போட்டு உடைத்தாள்.
எகத்தாளமான ஒரு சிரிப்புடன் “இதை நான் நம்பனும். பிடிவாதத்துக்காக எதுவும் பேசாதே. தயவு செய்து அத்தானைப் புரிஞ்சுக்கப் பாரு” என்றாள்.
கண்களில் வெறுமையுடன் “தயவு செய்து இனி என்கிட்ட வந்து ஏன் அப்படி இருக்க? இப்படி இருக்கன்னு கேட்காதே அஞ்சு” என்று விட்டாள்.
அஞ்சுவிற்கு அத்தனை கோபம் “அக்கா கிடைக்கிற நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதே” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
அவள் சென்று அன்னையிடம் அனைத்தையும் கூறிவிட அவர் தர்ஷனாவைப் பார்க்க வந்து விட்டார்.
“என்ன தர்ஷனா இது! உன்கிட்ட இதை எதிர்பார்க்கல. நான் பார்த்தவரை மாப்பிள்ளை மேலையும், அந்த குடும்பத்து மேலையும் நல்ல அபிப்பிராயம் தான் அதிகமாயிட்டே வருது. எந்த இடத்திலேயும் அவங்க தவறான ஆளாக தெரியல. நாம எதிர்பார்த்தது இப்படியொரு வாழ்க்கையைத் தானே?”
நீங்களுமா அம்மா? என்பது போல பார்த்துவிட்டு “சரிம்மா! உங்க மாப்பிள்ளை தங்கமானவர் தான். அது தான் நான் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கிட்டு தானே இருக்கேன். இன்னும் என்கிட்ட என்ன எதிர்பார்க்குறீங்க?”
“அஞ்சு கிட்ட ஆபிசில் யாரையோ லவ் பண்றேன்னு எதுக்கு சொன்ன? நீ சொன்னது மாப்பிள்ளை காதுல விழுந்தா என்ன ஆகும்? தப்பா நினைக்க மாட்டாங்க?”
அன்னையின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் ‘சொன்ன பிறகும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு படுத்துறான்-மா. என்னால முடியல. ஒன்னு செத்துடனும் இல்ல இங்கிருந்து எங்கேயாவது போயிடனும்’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.