அத்தியாயம் – 10
திருவானைக்காவல் கோவிலின் மணி அடிக்கத் தொடங்க, விடியலின் நேரம் கோவில் திறக்கப்பட்டு பூஜைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த வீடுகளின் விளக்குகள் எரிய தொடங்கின.
பெண்கள் மெல்ல கதவை திறந்து தங்கள் வீட்டு வாசலை பெருக்கி தண்ணீர் தெளிக்க தொடங்கினார்கள். ஆறு மணிக்குள் வீட்டு வாசல்களில் அழகாக கோலம் வரையப்பட்டு தெருவே அழகாக்கியது.
ஊருக்குள் முதல் பஸ் தனது பெருத்த ஹாரனுடன் நுழைந்தது. அந்த அதிகாலை நேரத்தில் பேருந்தில் ஒன்றிரண்டு ஆட்களே இருக்க, முதல் ஆளாக சஞ்சலா இறங்கினாள். ஒற்றை பின்னல் இட்டு, சுடிதார் அணிந்து துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி, பார்க்கவே மிகவும் பவ்யமான பெண்ணாக இருந்தாள்.
பேருந்திலிருந்து இறங்கியவள் சுற்றுபுறத்தை ஆராய, டீக்கடை வாசலில் அமர்ந்திருந்த பெருசுகளும், ஒரு சில இளைஞர்களும் அவளை தான் பார்த்தனர். அந்த இளைஞர்கள் ஊரை சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மெல்ல டீக்கடையை நோக்கி சென்றாள்.
அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் “இங்கே ராமசாமி ஐயா வீடு எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?” என்றாள் மெல்லிய குரலில்.
அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்த பெருசு ஒன்று “நீ யாரும்மா? எங்கே இருந்து வர? ஐயாவுக்கு நீ என்ன வேணும்?” என்றார்.
மிகவும் மரியாதையுடன் “கங்கா அம்மா வேலைக்கு ஆள் கேட்டிருந்தாங்க. அதுக்கு தான் வந்திருக்கேன்” என்றாள்.
அதை கேட்டதும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவர் “சரி உன்னை பற்றி சொல்லு? உன் குடும்ப பின்னணி எல்லாம் சொல்லு” என்றார் சற்றே அதிகாரமாக.
அவர் கேட்டதும் அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் அனைத்தையும் கூறினாள். அவரின் முகம் அதை வெளிப்படுத்த, அப்போது ஒரு இளைஞன் “இங்கே பாரு பொய் எதுவும் சொல்லி இருந்தேன்னா மாட்டிக்குவே. எங்க அண்ணன் முட்டிக்கு முட்டி தட்டி மூலையில உட்கார வச்சிடுவாரு” என்றான் மிரட்டலான குரலில்.
வெளியில் அதிர்ந்த மாதிரி காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ‘உங்க அண்ணனுக்கு சுளுக்கு எடுக்க தான் வந்திருக்கேன் ராசா’ என்றெண்ணிக் கொண்டு வெறுமனே தலையசைத்தாள்.
அதன்பின் மேலும் பத்து நிமிடங்களுக்கு விசாரணை தொடர, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கே சலிப்பாகி போக “டேய்! சந்துரு இந்த பொண்ணை அம்மா கிட்ட அழைச்சிட்டு போ. பார்த்தா நல்லா பொண்ணா தான் தெரியுது” என்று விட்டார்.
இவை அனைத்தையும் சிவதாஸின் டீம் கண்காணித்து கொண்டு தான் இருந்தது. உடனே அவனுக்கு தகவலும் அனுப்பப்பட்டது.
செங்கல்பட்டு அருகே இருந்த கெஸ்ட் ஹவுசில் தனது காலை நேர ஓட்டத்தை தொடர்ந்திருந்தவனின் மொபைல் விடாமல் அடித்தது. வியர்வை வழிய ஓடிக் கொண்டிருந்தவன் மொபைலின் ஒலியில் சற்றே நின்று போனை எடுத்தான்.
“தாஸ் ஹியர்!”
“தாஸ்! பட்சி வந்து இறங்கியாச்சு”.
“குட்! குட்! ரொம்ப கவனமா இருங்க. அவ கண்ணுல படவே கூடாது. அம்மாவும் ஜாக்கிரதை” என்று கூறி வைத்தவனின் இதழ்களில் கேலி புன்னகை.
இடுப்பில் கை வைத்து தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்தவன் ‘ரொம்ப சுவாரசியமா இருக்கு சஞ்ச..லா! நீ என்னோட மூவை தெரிஞ்சு வச்சிருப்பேன்னு தெரியும். ஆனா உன்னை இங்கே வரவழைத்தது நான் தான்னு உன்னால யூகிக்க முடியாது. உன்னை என் பக்கம் யோசிக்க வைத்து என்னிடம் கொண்டு வந்திருக்கேன். கூடிய சீக்கிரம் நாம சேர்ந்து டிராவல் பண்ணுவோம்’ என்றவனின் இதழ்களில் நைய்யாண்டி தெரிந்தது.
தலைக்கு குளித்து முடித்து நெற்றிக்கு இட்டுக் கொண்டு பூஜையறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார் கங்கா. கண்களை இறுக மூடி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தவரை “அம்மா!” என்ற குரல் களைத்தது.
மெல்ல பூஜை அறையை விட்டு வெளியே வந்தவர் “யாருப்பா அது?” என்று கேட்டபடியே வாசல் கேட்டருகே வந்தார்.
“நான் தானுங்கம்மா ராஜா. உங்களை தேடி ஒரு பொண்ணு வந்திருக்கு. அது தான் கொண்டு வந்து விடலாம்னு வந்தேன்” என்றான்.
பூட்டி இருந்த கதவை திறந்து விட்டவர் அவளை பார்த்து புன்சிரிப்புடன் “வாம்மா” என்று விட்டு “நல்லா இருக்கியாப்பா? அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? வேலைக்கு போற தானே?” என்று கேள்விகளை அடுக்கினார்.
அவரது கேள்விகளுக்கு பதிலை சொன்னவன் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். அவளை அடுத்து வந்த ஹாலில் அமர வைத்தவர், அவளை பற்றிய மொத்த விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
“ரொம்ப சின்ன பெண்ணா இருக்கியேம்மா. உன்னை எப்படி வெளியூருக்கு வேலைக்கு அனுப்பினாங்க. அதுவும் கிராமத்துக்கு எப்படி வர ஒத்துகிட்ட?”
அவளோ மிகவும் சாமர்த்தியமாக “மேம்! நீங்க என்னை விசாரிக்கிற மாதிரி அவங்களும் உங்க குடும்பத்தை பற்றி விசாரிச்சிட்டு தான் அனுப்பினாங்க” என்றாள்.
திருவானைக்காவல் கோவிலின் மணி அடிக்கத் தொடங்க, விடியலின் நேரம் கோவில் திறக்கப்பட்டு பூஜைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த வீடுகளின் விளக்குகள் எரிய தொடங்கின.
பெண்கள் மெல்ல கதவை திறந்து தங்கள் வீட்டு வாசலை பெருக்கி தண்ணீர் தெளிக்க தொடங்கினார்கள். ஆறு மணிக்குள் வீட்டு வாசல்களில் அழகாக கோலம் வரையப்பட்டு தெருவே அழகாக்கியது.
ஊருக்குள் முதல் பஸ் தனது பெருத்த ஹாரனுடன் நுழைந்தது. அந்த அதிகாலை நேரத்தில் பேருந்தில் ஒன்றிரண்டு ஆட்களே இருக்க, முதல் ஆளாக சஞ்சலா இறங்கினாள். ஒற்றை பின்னல் இட்டு, சுடிதார் அணிந்து துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி, பார்க்கவே மிகவும் பவ்யமான பெண்ணாக இருந்தாள்.
பேருந்திலிருந்து இறங்கியவள் சுற்றுபுறத்தை ஆராய, டீக்கடை வாசலில் அமர்ந்திருந்த பெருசுகளும், ஒரு சில இளைஞர்களும் அவளை தான் பார்த்தனர். அந்த இளைஞர்கள் ஊரை சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மெல்ல டீக்கடையை நோக்கி சென்றாள்.
அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் “இங்கே ராமசாமி ஐயா வீடு எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?” என்றாள் மெல்லிய குரலில்.
அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்த பெருசு ஒன்று “நீ யாரும்மா? எங்கே இருந்து வர? ஐயாவுக்கு நீ என்ன வேணும்?” என்றார்.
மிகவும் மரியாதையுடன் “கங்கா அம்மா வேலைக்கு ஆள் கேட்டிருந்தாங்க. அதுக்கு தான் வந்திருக்கேன்” என்றாள்.
அதை கேட்டதும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவர் “சரி உன்னை பற்றி சொல்லு? உன் குடும்ப பின்னணி எல்லாம் சொல்லு” என்றார் சற்றே அதிகாரமாக.
அவர் கேட்டதும் அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் அனைத்தையும் கூறினாள். அவரின் முகம் அதை வெளிப்படுத்த, அப்போது ஒரு இளைஞன் “இங்கே பாரு பொய் எதுவும் சொல்லி இருந்தேன்னா மாட்டிக்குவே. எங்க அண்ணன் முட்டிக்கு முட்டி தட்டி மூலையில உட்கார வச்சிடுவாரு” என்றான் மிரட்டலான குரலில்.
வெளியில் அதிர்ந்த மாதிரி காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ‘உங்க அண்ணனுக்கு சுளுக்கு எடுக்க தான் வந்திருக்கேன் ராசா’ என்றெண்ணிக் கொண்டு வெறுமனே தலையசைத்தாள்.
அதன்பின் மேலும் பத்து நிமிடங்களுக்கு விசாரணை தொடர, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கே சலிப்பாகி போக “டேய்! சந்துரு இந்த பொண்ணை அம்மா கிட்ட அழைச்சிட்டு போ. பார்த்தா நல்லா பொண்ணா தான் தெரியுது” என்று விட்டார்.
இவை அனைத்தையும் சிவதாஸின் டீம் கண்காணித்து கொண்டு தான் இருந்தது. உடனே அவனுக்கு தகவலும் அனுப்பப்பட்டது.
செங்கல்பட்டு அருகே இருந்த கெஸ்ட் ஹவுசில் தனது காலை நேர ஓட்டத்தை தொடர்ந்திருந்தவனின் மொபைல் விடாமல் அடித்தது. வியர்வை வழிய ஓடிக் கொண்டிருந்தவன் மொபைலின் ஒலியில் சற்றே நின்று போனை எடுத்தான்.
“தாஸ் ஹியர்!”
“தாஸ்! பட்சி வந்து இறங்கியாச்சு”.
“குட்! குட்! ரொம்ப கவனமா இருங்க. அவ கண்ணுல படவே கூடாது. அம்மாவும் ஜாக்கிரதை” என்று கூறி வைத்தவனின் இதழ்களில் கேலி புன்னகை.
இடுப்பில் கை வைத்து தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்தவன் ‘ரொம்ப சுவாரசியமா இருக்கு சஞ்ச..லா! நீ என்னோட மூவை தெரிஞ்சு வச்சிருப்பேன்னு தெரியும். ஆனா உன்னை இங்கே வரவழைத்தது நான் தான்னு உன்னால யூகிக்க முடியாது. உன்னை என் பக்கம் யோசிக்க வைத்து என்னிடம் கொண்டு வந்திருக்கேன். கூடிய சீக்கிரம் நாம சேர்ந்து டிராவல் பண்ணுவோம்’ என்றவனின் இதழ்களில் நைய்யாண்டி தெரிந்தது.
தலைக்கு குளித்து முடித்து நெற்றிக்கு இட்டுக் கொண்டு பூஜையறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார் கங்கா. கண்களை இறுக மூடி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தவரை “அம்மா!” என்ற குரல் களைத்தது.
மெல்ல பூஜை அறையை விட்டு வெளியே வந்தவர் “யாருப்பா அது?” என்று கேட்டபடியே வாசல் கேட்டருகே வந்தார்.
“நான் தானுங்கம்மா ராஜா. உங்களை தேடி ஒரு பொண்ணு வந்திருக்கு. அது தான் கொண்டு வந்து விடலாம்னு வந்தேன்” என்றான்.
பூட்டி இருந்த கதவை திறந்து விட்டவர் அவளை பார்த்து புன்சிரிப்புடன் “வாம்மா” என்று விட்டு “நல்லா இருக்கியாப்பா? அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? வேலைக்கு போற தானே?” என்று கேள்விகளை அடுக்கினார்.
அவரது கேள்விகளுக்கு பதிலை சொன்னவன் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். அவளை அடுத்து வந்த ஹாலில் அமர வைத்தவர், அவளை பற்றிய மொத்த விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
“ரொம்ப சின்ன பெண்ணா இருக்கியேம்மா. உன்னை எப்படி வெளியூருக்கு வேலைக்கு அனுப்பினாங்க. அதுவும் கிராமத்துக்கு எப்படி வர ஒத்துகிட்ட?”
அவளோ மிகவும் சாமர்த்தியமாக “மேம்! நீங்க என்னை விசாரிக்கிற மாதிரி அவங்களும் உங்க குடும்பத்தை பற்றி விசாரிச்சிட்டு தான் அனுப்பினாங்க” என்றாள்.