அத்தியாயம் – 1
‘கவிதா பெண்கள் விடுதி’ என்கிற போர்டை பார்த்தபடி அவன் நின்றிருந்தான். உள்ளே சென்று அவளைப் பார்பதற்கு யோசனையாக இருந்தது. அவளின் கேள்விகளுக்கு தன்னால் பதில் தர இயலுமா? நிச்சயமாக முடியாது. என்ன தைரியத்தில் இங்கு வந்து நிற்கிறோம் என்று யோசித்தபடியே மீண்டும் போர்டை பார்த்தான்.
பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். காவலாளி இவன் வெகுநேரமாக போர்டை பார்த்துக் கொண்டே நிற்பதை சந்தேகக் கண்ணோடு பார்த்தான்.
அவனுடைய பார்வை எங்கேனும் அவளாக தென்படுகிறாளா என்று தேடியது. அத்தனை நேரம் நின்றும் அவள் கண்களில் படவில்லை எனும் போது வாய்ப்பில்லை என்றே புரிந்தது.
தயக்கத்தை உதறி தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான். வரவேற்ப்பில் இருந்த பெண்ணிடம் “சுடர்கொடியைப் பார்க்கணும்” என்றான்.
“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”
“மாமா”.
அங்கே சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை நிறுத்தி சுடரை அழைத்து வரும்படி கூறினாள்.
தனதறையில் இருந்த மேஜையில் குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவளை கலைத்தது அந்தப் பெண்ணின் குரல்.
“சுடர்கொடி உனக்கு கெஸ்ட். உங்க மாமா வந்திருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.
“மாமாவா? அது யாரு?” என்று யோசனையுடன் எழுந்தவள் மெல்ல படியிறங்கி வர ஆரம்பித்தாள்.
அங்கு இடுப்பில் கை வைத்தபடி முதுகு காட்டிக் கொண்டு நின்றவனை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. மனமோ ‘மாமாவா?’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள்.
அவளின் வருகையில் சட்டென்று திரும்பியவனின் பார்வை முழுமையாக ஆராய்ந்தது. அதில் அவளின் உடல் மெலிவும், கண்களின் கருவளையமும் அவளின் மனதை கூறியது.
“வா வெளில போய் பேசுவோம்”.
அவளும் அங்கே வைத்து எதையும் பேசக் கூடாது என்று அமைதியாக அவன் பின்னோடு சென்றாள்.
விடுதியின் முன்புறம் உள்ள மரத்தின் கீழே சென்றதும் பொறுமையைப் பறக்க விட்டவள் “எதுக்கு மாமான்னு சொன்னீங்க?” என்று எகிறினாள்.
இருகைகளையும் கட்டிக் கொண்டு அவளை ஆழ்ந்துப் பார்த்தவன் “அப்போ நான் யார் உனக்கு?”
அவளும் நேரடியாக அவன் கண்களைப் பார்த்து “யாருமே இல்லை! நமக்குள்ள என்ன உறவிருக்கு? எதுவுமில்லை”.
“சோ வெறுத்து ஒதுக்கிட்ட”.
“ஒதுங்கிட்டேன்! வேற என்ன செய்ய முடியும்? எதுவுமே வேண்டாம் யாருமே வேண்டாம்னு ஒதுங்கி வந்துட்டேன்”.
“ஏன் சுடர்? நான் தான் சொன்னேனே. எல்லாவற்றிற்கும் காலம் நேரம் இருக்கு பொறுமையாக இரு என்று”.
சட்டென்று கண்கள் கலங்கிவிட “தவறு எங்கப் பக்கம் இருக்கு நடந்து முடிந்துவிட்ட எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் கொட்டப்பட்ட வார்த்தைகளை அள்ளிவிட முடியுமா சொல்லுங்க? அந்த வார்த்தைகள் என்றைக்கும் என்னை துரத்திக் கொண்டே தான் இருக்கும். அதோட கயல் அவளை நினைத்தால் எதுவுமே பேசக் கூடாது”.
“அந்த வார்த்தைகள் தான் உனக்கு முக்கியமா போயிடுச்சு இல்ல? நான் உன் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் உண்டாக்கலையா? ம்ம்..சரி விடு! நீ எதுக்கு ஹாஸ்டலில் இருக்க?”
முகம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? நம்மை பொறுத்தவரை எல்லாமே முடிஞ்சு போச்சு. தயவு செய்து என்னை பார்க்க வராதீங்க”.
“என் கேள்விக்கு பதில் சொல்லு சுடர். நீ ஏன் இங்கே இருக்க?”
அவனை முறைத்து பார்த்துவிட்டு நகர எத்தனிக்க, அவளின் மணிக்கட்டைப் பிடித்திருந்தான். அழுத்தி பிடித்ததில் வலி எடுக்க ஒருவித எரிச்சலுடன் “விடுங்க! இன்னும் என்ன வேணும்? மொத்தமா என் உயிரை அள்ளி குடிச்சாச்சு. வேற என்ன தான் வேணும்?”
அவளின் கையை விட்டவன் “ஏண்டி? ஏன்? நீயும் உன் பங்கிற்கு என்னை படுத்துற? கொஞ்சம் பொறுமையா இருன்னு தானே சொல்றேன்?”
மேலும் கண்களும் முகமும் கசங்கிப் போக “இதுக்கு தான்! இதுக்கு தான் ஒதுங்கி போயிடுங்கன்னு சொல்றேன். மனசெல்லாம் விஷமாகி போச்சு. இதுல நாம செய்வதற்கு எதுவுமே இல்லை. வேண்டாம் அர்ஜுன்! இதுக்கு மேல என்னை தொந்திரவு செய்தால் நான் இங்கிருந்தும் போக வேண்டிய நிலை வரும். குற்ற உணர்வில் மறுகிக் கொண்டு இருக்கிறேன் அர்ஜுன்”.
அவளை முறைத்து பார்த்துவிட்டு ஓய்ந்து போய் “என்னால முடியல சுடர். ஆளாளுக்கு அவங்க தரப்பைப் பேசி என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கீங்க. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துட்டேன். யாருமே இறங்கி வரலேன்னா எப்படி? நீ என்ன தப்பு செய்த குற்ற உணர்வில் உழல்வதற்கு?”
‘கவிதா பெண்கள் விடுதி’ என்கிற போர்டை பார்த்தபடி அவன் நின்றிருந்தான். உள்ளே சென்று அவளைப் பார்பதற்கு யோசனையாக இருந்தது. அவளின் கேள்விகளுக்கு தன்னால் பதில் தர இயலுமா? நிச்சயமாக முடியாது. என்ன தைரியத்தில் இங்கு வந்து நிற்கிறோம் என்று யோசித்தபடியே மீண்டும் போர்டை பார்த்தான்.
பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். காவலாளி இவன் வெகுநேரமாக போர்டை பார்த்துக் கொண்டே நிற்பதை சந்தேகக் கண்ணோடு பார்த்தான்.
அவனுடைய பார்வை எங்கேனும் அவளாக தென்படுகிறாளா என்று தேடியது. அத்தனை நேரம் நின்றும் அவள் கண்களில் படவில்லை எனும் போது வாய்ப்பில்லை என்றே புரிந்தது.
தயக்கத்தை உதறி தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான். வரவேற்ப்பில் இருந்த பெண்ணிடம் “சுடர்கொடியைப் பார்க்கணும்” என்றான்.
“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”
“மாமா”.
அங்கே சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை நிறுத்தி சுடரை அழைத்து வரும்படி கூறினாள்.
தனதறையில் இருந்த மேஜையில் குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவளை கலைத்தது அந்தப் பெண்ணின் குரல்.
“சுடர்கொடி உனக்கு கெஸ்ட். உங்க மாமா வந்திருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.
“மாமாவா? அது யாரு?” என்று யோசனையுடன் எழுந்தவள் மெல்ல படியிறங்கி வர ஆரம்பித்தாள்.
அங்கு இடுப்பில் கை வைத்தபடி முதுகு காட்டிக் கொண்டு நின்றவனை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. மனமோ ‘மாமாவா?’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள்.
அவளின் வருகையில் சட்டென்று திரும்பியவனின் பார்வை முழுமையாக ஆராய்ந்தது. அதில் அவளின் உடல் மெலிவும், கண்களின் கருவளையமும் அவளின் மனதை கூறியது.
“வா வெளில போய் பேசுவோம்”.
அவளும் அங்கே வைத்து எதையும் பேசக் கூடாது என்று அமைதியாக அவன் பின்னோடு சென்றாள்.
விடுதியின் முன்புறம் உள்ள மரத்தின் கீழே சென்றதும் பொறுமையைப் பறக்க விட்டவள் “எதுக்கு மாமான்னு சொன்னீங்க?” என்று எகிறினாள்.
இருகைகளையும் கட்டிக் கொண்டு அவளை ஆழ்ந்துப் பார்த்தவன் “அப்போ நான் யார் உனக்கு?”
அவளும் நேரடியாக அவன் கண்களைப் பார்த்து “யாருமே இல்லை! நமக்குள்ள என்ன உறவிருக்கு? எதுவுமில்லை”.
“சோ வெறுத்து ஒதுக்கிட்ட”.
“ஒதுங்கிட்டேன்! வேற என்ன செய்ய முடியும்? எதுவுமே வேண்டாம் யாருமே வேண்டாம்னு ஒதுங்கி வந்துட்டேன்”.
“ஏன் சுடர்? நான் தான் சொன்னேனே. எல்லாவற்றிற்கும் காலம் நேரம் இருக்கு பொறுமையாக இரு என்று”.
சட்டென்று கண்கள் கலங்கிவிட “தவறு எங்கப் பக்கம் இருக்கு நடந்து முடிந்துவிட்ட எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் கொட்டப்பட்ட வார்த்தைகளை அள்ளிவிட முடியுமா சொல்லுங்க? அந்த வார்த்தைகள் என்றைக்கும் என்னை துரத்திக் கொண்டே தான் இருக்கும். அதோட கயல் அவளை நினைத்தால் எதுவுமே பேசக் கூடாது”.
“அந்த வார்த்தைகள் தான் உனக்கு முக்கியமா போயிடுச்சு இல்ல? நான் உன் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் உண்டாக்கலையா? ம்ம்..சரி விடு! நீ எதுக்கு ஹாஸ்டலில் இருக்க?”
முகம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? நம்மை பொறுத்தவரை எல்லாமே முடிஞ்சு போச்சு. தயவு செய்து என்னை பார்க்க வராதீங்க”.
“என் கேள்விக்கு பதில் சொல்லு சுடர். நீ ஏன் இங்கே இருக்க?”
அவனை முறைத்து பார்த்துவிட்டு நகர எத்தனிக்க, அவளின் மணிக்கட்டைப் பிடித்திருந்தான். அழுத்தி பிடித்ததில் வலி எடுக்க ஒருவித எரிச்சலுடன் “விடுங்க! இன்னும் என்ன வேணும்? மொத்தமா என் உயிரை அள்ளி குடிச்சாச்சு. வேற என்ன தான் வேணும்?”
அவளின் கையை விட்டவன் “ஏண்டி? ஏன்? நீயும் உன் பங்கிற்கு என்னை படுத்துற? கொஞ்சம் பொறுமையா இருன்னு தானே சொல்றேன்?”
மேலும் கண்களும் முகமும் கசங்கிப் போக “இதுக்கு தான்! இதுக்கு தான் ஒதுங்கி போயிடுங்கன்னு சொல்றேன். மனசெல்லாம் விஷமாகி போச்சு. இதுல நாம செய்வதற்கு எதுவுமே இல்லை. வேண்டாம் அர்ஜுன்! இதுக்கு மேல என்னை தொந்திரவு செய்தால் நான் இங்கிருந்தும் போக வேண்டிய நிலை வரும். குற்ற உணர்வில் மறுகிக் கொண்டு இருக்கிறேன் அர்ஜுன்”.
அவளை முறைத்து பார்த்துவிட்டு ஓய்ந்து போய் “என்னால முடியல சுடர். ஆளாளுக்கு அவங்க தரப்பைப் பேசி என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கீங்க. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துட்டேன். யாருமே இறங்கி வரலேன்னா எப்படி? நீ என்ன தப்பு செய்த குற்ற உணர்வில் உழல்வதற்கு?”
Last edited: