அத்தியாயம் - 1
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
அன்னை காவேரியம்மாள் கருணை இல்லம் கரூர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான இல்லம். காலை வழிபாட்டிற்காக அனைவரும் பிரேயர் ஹாலில் குழுமிருந்தனர்.
சேவை மனப்பான்மையோடு அங்கு வேலை செய்பவர்களும், ஆதரவின்றி அடைக்கலம் தேடி வந்தவர்களும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தங்கியிருந்தனர்.
இறைவணக்கம் முடிந்தவுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தனர். ஸ்ருதியும் குழந்தைகளை உணவறைக்கு அழைத்துச் சென்றாள்.
அப்போது இல்லத்தின் தலைவர் சிதம்பரம் அழைப்பதாக ஒருவர் சொல்லி சென்றார். குழந்தைகளை அவரவர் இடங்களில் அமர வைத்து, ஆயாம்மாவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி சிதம்பரம் அறை நோக்கிச் சென்றாள்.
அவளைப் பார்த்ததும் அமரச் சொன்னவர், தபாலில் வந்த கவரை எடுத்து அவளிடம் தந்தார். அதுவரை ஆசிரம விஷயமாகப் பேச அழைத்திருப்பார் என்றெண்ணி சென்றவளுக்கு, அந்தக் கவரைப் பார்த்ததும் புரிந்து போனது.
கையிலிருந்ததைப் பிரித்துப் பார்க்க மனமில்லாமல் ஒருவித தவிப்புடனே அமர்ந்திருந்தாள்.அவளது உணர்வினை புரிந்து கொண்டவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அவள் முன்னே வைத்தார்.
அதை எடுத்து மடமடவென்று குடித்து முடித்தாள்.அவளுடைய தவிப்பையும்,படபடப்பையும் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம் “பதட்டபடாதே ஸ்ருதி! எதுவும் இன்னும் முடிஞ்சு போயிடல.நீ மனசு வச்சா எல்லாமே சுபமா முடியும்” என்றார்.
அவரின் வார்த்தையில் அவ்வளவு நேரமிருந்த படபடப்பு குறைந்து அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இது நான் மட்டும் எடுக்க வேண்டிய முடிவு இல்லைங்க ஐயா. ரெண்டு பேர் சம்மந்தபட்டது.”
“மனசுவிட்டுப் பேசினா எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.”
“இதுதான் என் விருப்பம்னு தெரிவிச்சவர்கிட்ட, அதைக் கொடுக்கிறதுதான் முறை. விருப்பமில்லாமல் இழுபறியா வாழ்க்கையைக் கொண்டு போறதைவிட அவங்கஅவங்க வழியில் போறது புத்திசாலினம்.”
“உனக்கு இன்னும் காலங்கள் இருக்கும்மா. வாழ்நாள் முழுக்க இப்படியே இருந்திட முடியாது.”
“அடம் பிடிக்கிற குழந்தையை ஏமாத்தி வேறொரு பொம்மையைக் கொடுத்து சமாதானப்படுத்துற மாதிரி இல்லையே. இது வாழ்க்கை. அவர் குழந்தையும் இல்ல நான் பொம்மையும் இல்ல. எத்தனை நாட்களுக்குத் தான் உணர்வில்லாத ஜடம் மாதிரியே நடிக்கிறது.”
அவளின் சலிப்பான பதிலைக் கேட்டவர், என்ன சொல்வதென்று தெரியாமல் “உனக்கு நாளைக்கு நைட் சென்னைக்கு டிக்கெட் போட்டுடவா? துணைக்குக் கவிதாவை அழைச்சிட்டு போறியாம்மா?”
“வேண்டாங்கையா...நான் போன் பண்ணி சொல்லிட்டா என் பிரெண்ட் திவ்யா வந்துடுவா, அவ வீட்டிலேயே தங்கி முடிச்சிட்டு வந்துடுறேன்.”
அவள் பேசும்போது முகத்தில் எந்தச் சலனம் இல்லையென்றாலும் விழிகளில் அவளையும் மீறிய சோர்வு தெரிந்தது. அவளிடம் வயதுக்கு மீறிய பக்குவம் எப்போதுமே இருக்கும் என்பதை இங்கு வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் தானே. இனியும் அவளை அப்படியே விடக்கூடாது. தான் முடிவு செய்திருப்பதைப் போல் அவளுடைய வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
அவள் அங்கிருந்து போகும் முன் “எதற்கும் நல்லா யோசிச்சுக்கோ ஸ்ருதிம்மா! இழந்த பின்னாடி யோசிக்கிறதை விட, அதைத் தடுக்கிறதுக்கு முயற்சி பண்ணலாம்”என்றார்.
கதவருகில் சென்றவள் மெல்லத் திரும்பி பார்த்து “முயற்சி செஞ்சு தோற்றுப் போன பிறகுதான் இங்கே வந்தேன்” என்று கண்கள் கலங்க கூறினாள்.
அவளின் கலக்கம் அவரையும் தொற்றிக் கொள்ள லேசாகத் தொண்டையைச் செருமி தன்னை நிதானித்துக் கொண்டு “ஸ்ருதி! உனக்கு நான் நல்லதுதான் பண்ணுவேன்னு என்மேல நம்பிக்கை இருக்காம்மா?” என்றார்.
குழப்பத்துடன் பார்த்தவள் “என்னங்கையா இப்படிக் கேட்குறீங்க?”
அவளைப் பார்த்தவர் “நீ இனிமே இங்கே இருக்க வேண்டாம். உன்னுடைய மனசுக்கு ஆறுதல் வேணும்னுதான் இடம் கொடுத்தேன். இப்போ எல்லாம் ஒரு நிலைக்கு வந்துடுச்சு. இனி, நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும். அதுக்கு இங்கே இருந்தா சரி வராது.”
அவர் சொன்னதைக் கேட்டு பதறியவள் கையெடுத்துக் கும்பிட்டு “என்னை இங்கே இருந்து போகச் சொல்லாதீங்கய்யா. நான் இங்கேயே இருந்திடுறேன்” என்றாள் தவிப்புடன்.
“இல்ல ஸ்ருதி! நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. உனக்குச் சென்னையில வேலை ஏற்பாடு பண்ணி இருக்கேன். எனக்குத் தெரிஞ்ச சிஸ்டர் இருக்காங்க. அவங்க நீ தங்குறதுக்கு இடம் பார்த்து கொடுப்பாங்க. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அவங்ககிட்ட கேட்கலாம்.”
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
அன்னை காவேரியம்மாள் கருணை இல்லம் கரூர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான இல்லம். காலை வழிபாட்டிற்காக அனைவரும் பிரேயர் ஹாலில் குழுமிருந்தனர்.
சேவை மனப்பான்மையோடு அங்கு வேலை செய்பவர்களும், ஆதரவின்றி அடைக்கலம் தேடி வந்தவர்களும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தங்கியிருந்தனர்.
இறைவணக்கம் முடிந்தவுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தனர். ஸ்ருதியும் குழந்தைகளை உணவறைக்கு அழைத்துச் சென்றாள்.
அப்போது இல்லத்தின் தலைவர் சிதம்பரம் அழைப்பதாக ஒருவர் சொல்லி சென்றார். குழந்தைகளை அவரவர் இடங்களில் அமர வைத்து, ஆயாம்மாவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி சிதம்பரம் அறை நோக்கிச் சென்றாள்.
அவளைப் பார்த்ததும் அமரச் சொன்னவர், தபாலில் வந்த கவரை எடுத்து அவளிடம் தந்தார். அதுவரை ஆசிரம விஷயமாகப் பேச அழைத்திருப்பார் என்றெண்ணி சென்றவளுக்கு, அந்தக் கவரைப் பார்த்ததும் புரிந்து போனது.
கையிலிருந்ததைப் பிரித்துப் பார்க்க மனமில்லாமல் ஒருவித தவிப்புடனே அமர்ந்திருந்தாள்.அவளது உணர்வினை புரிந்து கொண்டவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அவள் முன்னே வைத்தார்.
அதை எடுத்து மடமடவென்று குடித்து முடித்தாள்.அவளுடைய தவிப்பையும்,படபடப்பையும் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம் “பதட்டபடாதே ஸ்ருதி! எதுவும் இன்னும் முடிஞ்சு போயிடல.நீ மனசு வச்சா எல்லாமே சுபமா முடியும்” என்றார்.
அவரின் வார்த்தையில் அவ்வளவு நேரமிருந்த படபடப்பு குறைந்து அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இது நான் மட்டும் எடுக்க வேண்டிய முடிவு இல்லைங்க ஐயா. ரெண்டு பேர் சம்மந்தபட்டது.”
“மனசுவிட்டுப் பேசினா எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.”
“இதுதான் என் விருப்பம்னு தெரிவிச்சவர்கிட்ட, அதைக் கொடுக்கிறதுதான் முறை. விருப்பமில்லாமல் இழுபறியா வாழ்க்கையைக் கொண்டு போறதைவிட அவங்கஅவங்க வழியில் போறது புத்திசாலினம்.”
“உனக்கு இன்னும் காலங்கள் இருக்கும்மா. வாழ்நாள் முழுக்க இப்படியே இருந்திட முடியாது.”
“அடம் பிடிக்கிற குழந்தையை ஏமாத்தி வேறொரு பொம்மையைக் கொடுத்து சமாதானப்படுத்துற மாதிரி இல்லையே. இது வாழ்க்கை. அவர் குழந்தையும் இல்ல நான் பொம்மையும் இல்ல. எத்தனை நாட்களுக்குத் தான் உணர்வில்லாத ஜடம் மாதிரியே நடிக்கிறது.”
அவளின் சலிப்பான பதிலைக் கேட்டவர், என்ன சொல்வதென்று தெரியாமல் “உனக்கு நாளைக்கு நைட் சென்னைக்கு டிக்கெட் போட்டுடவா? துணைக்குக் கவிதாவை அழைச்சிட்டு போறியாம்மா?”
“வேண்டாங்கையா...நான் போன் பண்ணி சொல்லிட்டா என் பிரெண்ட் திவ்யா வந்துடுவா, அவ வீட்டிலேயே தங்கி முடிச்சிட்டு வந்துடுறேன்.”
அவள் பேசும்போது முகத்தில் எந்தச் சலனம் இல்லையென்றாலும் விழிகளில் அவளையும் மீறிய சோர்வு தெரிந்தது. அவளிடம் வயதுக்கு மீறிய பக்குவம் எப்போதுமே இருக்கும் என்பதை இங்கு வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் தானே. இனியும் அவளை அப்படியே விடக்கூடாது. தான் முடிவு செய்திருப்பதைப் போல் அவளுடைய வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
அவள் அங்கிருந்து போகும் முன் “எதற்கும் நல்லா யோசிச்சுக்கோ ஸ்ருதிம்மா! இழந்த பின்னாடி யோசிக்கிறதை விட, அதைத் தடுக்கிறதுக்கு முயற்சி பண்ணலாம்”என்றார்.
கதவருகில் சென்றவள் மெல்லத் திரும்பி பார்த்து “முயற்சி செஞ்சு தோற்றுப் போன பிறகுதான் இங்கே வந்தேன்” என்று கண்கள் கலங்க கூறினாள்.
அவளின் கலக்கம் அவரையும் தொற்றிக் கொள்ள லேசாகத் தொண்டையைச் செருமி தன்னை நிதானித்துக் கொண்டு “ஸ்ருதி! உனக்கு நான் நல்லதுதான் பண்ணுவேன்னு என்மேல நம்பிக்கை இருக்காம்மா?” என்றார்.
குழப்பத்துடன் பார்த்தவள் “என்னங்கையா இப்படிக் கேட்குறீங்க?”
அவளைப் பார்த்தவர் “நீ இனிமே இங்கே இருக்க வேண்டாம். உன்னுடைய மனசுக்கு ஆறுதல் வேணும்னுதான் இடம் கொடுத்தேன். இப்போ எல்லாம் ஒரு நிலைக்கு வந்துடுச்சு. இனி, நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும். அதுக்கு இங்கே இருந்தா சரி வராது.”
அவர் சொன்னதைக் கேட்டு பதறியவள் கையெடுத்துக் கும்பிட்டு “என்னை இங்கே இருந்து போகச் சொல்லாதீங்கய்யா. நான் இங்கேயே இருந்திடுறேன்” என்றாள் தவிப்புடன்.
“இல்ல ஸ்ருதி! நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. உனக்குச் சென்னையில வேலை ஏற்பாடு பண்ணி இருக்கேன். எனக்குத் தெரிஞ்ச சிஸ்டர் இருக்காங்க. அவங்க நீ தங்குறதுக்கு இடம் பார்த்து கொடுப்பாங்க. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அவங்ககிட்ட கேட்கலாம்.”