சூப்பர் எபி கிரிப்நிதா. நீங்க குட்டி பொண்ணா இருக்கறதால உங்க வயசு பசங்ககிட்ட இருக்கும், எங்கன்னா வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் எப்போ... எப்போன்னு தொல்லை பண்றது,அதையே பொழுதுக்கும் நினச்சிட்டு கனவு காணறது, அன்னைக்கு மட்டும் காலையில கரைக்ட் டைமுக்கு எழுந்துகறது.... இப்படி எல்லா க்வாலிடீஸையும் அப்படியே சொல்லிட்டீங்க .
யமுனா நதி இப்படி தான் உருவாச்சா? இவ்வளவு நாள் எனக்கு இது தெரியாது கிரிபி. பலராமரின் உழவின் மேல் இருக்கும் ஆசையை அழகா சொல்லியிருக்கீங்க குட்டி.
காளிங்கன் வதம்... ரொம்ப நல்லா உங்க வயசுக்கு தகுந்தவிதத்தில் சொல்லிட்டீங்க.பிருந்தாவனத்தின் விதிமுறைகளை இப்ப நாம ஃபால்லோ பண்ணா எவ்வளவு நல்லா இருக்கும்!
எனக்கு சிவன் ஆடின திருவிளையாடல் மட்டும் தான் தெரியும். உங்களுக்கு பங்களாதேஷ் நடன பிள்ளையார் ஆடின திருவிளையாடலும் தெரிஞ்சிருக்கே! அதை எப்ப நீங்க எங்களுக்கு சொல்லப்போறீங்கன்னு நான் ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் குட்டி.