அத்தியாயம் – 27
அரங்கம் முழுவதும் அப்படி ஒரு அமைதி. யாரும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வெளியில் இருப்பவர்களுக்கு தான் தொந்திரவு கொடுத்தார்கள் என்றால் சொந்த குடும்பத்திலேயே வில்லன் வேலை பார்த்திருக்கும் அவர்களை அற்ப பிறவிகளை போல பார்த்தனர். அதே சமயம் இவற்றை எல்லாம் மனைவியாகிய பிம்லா எப்படி அனுமதித்தார் என்று அனைவரின் பார்வையும் அவரை தீண்டிச் சென்றது.
பிம்லாவோ நெருப்பின் மீது நின்று கொண்டிருந்தார். சித்தார்த் தங்கள் குடும்பத்தை பற்றி பேசியதை கேட்டு அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தவர், நீரஜ் கம்பீரமாக உள்ளே நுழைவதை கண்டதும் முதன்முறையாக அதிர்ந்து போனார்.
சாமர்த்தியமாக அனைத்தையும் நடத்திக் கொண்டதாக எண்ணி இருந்ததை இப்படி சித்தார்த் சுக்கு சுக்காக உடைப்பான் என்று எண்ணவில்லை. அதிலும் நீரஜ் முழுவதுமாக குணமடைந்து பழைய தெளிவுடன் வந்து நிற்பதை கண்டதும் தனது அத்தனை கனவுகளும் சிதைந்து போனதை அறிந்து கொண்டார்.
நீரஜின் பார்வை முழுவதும் பிம்லாவின் மீது தான் இருந்தது. அவர் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை அவதானித்தபடி இருந்தார்.
அப்போது ஒருவர் “நீரஜ் உங்கள் மனைவியே உங்களை கொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். இதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிம்லாவை பார்த்து விட்டு “உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை இங்கே நான் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று அவர் முடிக்கும் முன் அவசரமாக அவர் அருகே சென்ற பிம்லா “என்னை மன்னிச்சிடுங்க நீரு. எங்கப்பாவும், அண்ணன்களும் என்னை மிரட்டி தான் இதை செய்ய வச்சாங்க” என்றார் நீலி கண்ணீருடன்.
அவர் பேசியதை கேட்டதும் சிவதாஸின் இதழ்களில் கூட மெல்லிய புன்னகை. சித்தார்த்தோ அவரை கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்தான்.
“என்ன சொல்லி மிரட்டினாங்க பிம்லா? உன் உயிரை எடுத்திடுவேன்னா? அப்போ கணவன் உயிரை விட உன் உயிருக்கு மதிப்பு அதிகமில்லையா? அதனால என்னை கொல்ல ஒத்துக் கொண்டாயா?”
அங்கிருந்த அனைவருக்கும் அவரின் வார்த்தைகள் சாட்டையடியாக தோன்ற, பிமலா என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தார்கள்.
“இல்ல நீரு. நம்ம பிள்ளையை கொன்று விடுவேன்னு சொன்னாங்க”.
“ஒ...தாயுள்ளம் தவிச்சு போய் என்னை கொல்ல ஒத்துகிட்டீங்க?”
“ம்ம்...” என்றார் கண்ணீருடன்.
“ஆமாம் உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்? அவன் என் பிள்ளை. நீ எதுக்கு அவனுடைய உயிரை காப்பாற்ற என்னை பலி கொடுக்க நினைச்ச?”
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் அவரின் கேள்வியில் அதிர்ந்து நீரஜை பார்க்க, “இவங்க என்னுடைய ரெண்டாவது மனைவி. என் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் என் முதல் மனைவியை ஒதுக்கி வச்சிட்டு இவங்களை என் மனைவியாக்கினார். சொல்லப் போனா ஒரு தொழில்முறை ஒப்பந்தம் போல. சித்தார்த்திற்கும் நடந்தது இது தான். என் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் சித்தார்த்” என்று அனைவரின் முன்பும் அத்தனை நாள் பாதுகாத்து வந்த உண்மையை போட்டு உடைத்தார்.
அவர் சொன்னதும் பாய்ந்து அவரது சட்டையைப் பற்றி உலுக்கி “பொய் சொல்லாதே! யாரும் நம்பாதீங்க! இவருக்கு நான் மட்டுமே மனைவி” என்று கத்தினார்.
அனைவரின் மனதிலும் நினைத்தேன் என்கிற வார்த்தை எழ, ஒரு சிலர் வாயை திறந்து அதை சொல்லவும் செய்தனர். நானாஜி மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவமானப்பட்டு நின்றது வெறியை கூட்டியது. அதிலும் தினு ஆத்திரமடைந்து நீரஜை நோக்கி பாய, அவனை அலேக்காக பற்றி தூக்கி தன கைப் பிடியில் வைத்துக் கொண்ட சிவதாஸ் “துள்ளாதே! உள்ளே கொண்டு வச்சு அக்குவேறு ஆணி வேறா பிரிச்சிருவேன்” என்றான்.
அப்படியும் அடங்காமல் “யாரை பார்த்து என்ன பேசிட்டு இருக்கீங்க?’ என்று கத்தினான்.
சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு தினுவின் மூக்கில் ஓங்கி குத்தி இருந்தான். அதில் முகமெங்கும் ரத்தம் வழிய, மடங்கி அமர்ந்தவனை பிடித்து தூக்கி நிறுத்தி “இங்கே எல்லாம் பேசி முடிக்கும் வரை சத்தம் வரக் கூடாது” என்றான் மிரட்டலாக.
பிம்லாவோ சமூகத்தின் முன்பு தனது அங்கீகாரம் பறி போனதை எண்ணி ஆங்காரத்துடன் சித்தார்த்திடம் “உன்னை பெத்தது வேணா அவளா இருக்கலாம். பாலூட்டி வளர்த்தது நான். அந்த பாசம் கொஞ்சம் கூட உன் மனசுல இல்லையா?” என்றார் கோபமாக.
“அந்த பாசம் உங்களுக்கு இருந்ததா? உங்களுக்கு யாரிடமும் அன்பு இல்லை. நீங்கள் ஒரு சுயநலவாதி. சமூகத்தில் நீரஜ் மல்ஹோத்ராவின் மனைவி என்கிற அந்தஸ்து வேண்டும் என்பதற்காக அவரை மணந்து கொண்டீர்கள். அவருக்கு எத்தனை மனைவி இருந்திருந்தாலும் உங்களை அது பாதித்திருக்காது. உங்களுக்கு வேண்டியது அவருடைய தொழில், அதன் மூலியம் கிடைக்கும் மரியாதை. பாசம் அன்பு என்று ஒன்று இருந்திருந்தால் வர்ஷினியின் பெற்றோரை கொலை செய்திருப்பீர்களா?” என்று அடுத்த குண்டை போட்டான்.
அதைக் கேட்டதும் முகம் மாறிப் போனது பிம்லாவிற்கு. தனது அனைத்து பிம்பங்களும் உடைந்து கொண்டிருப்பதை உணர்ந்தார்.
சித்தார்த்தின் கைகளைப் பற்றிக் கொண்டவர் “உனக்குமா என்னுடைய நிலை புரியல? எங்கேயும் என் உணர்வுகளுக்கான மரியாதை அளிக்கப்படல. அவங்க அவங்க சுயநலத்திற்காக என்னை உபயோகப்படுகிட்டாங்க. இங்கே பாதிக்கப்பட்டது நான் மட்டுமே”.
அரங்கம் முழுவதும் அப்படி ஒரு அமைதி. யாரும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வெளியில் இருப்பவர்களுக்கு தான் தொந்திரவு கொடுத்தார்கள் என்றால் சொந்த குடும்பத்திலேயே வில்லன் வேலை பார்த்திருக்கும் அவர்களை அற்ப பிறவிகளை போல பார்த்தனர். அதே சமயம் இவற்றை எல்லாம் மனைவியாகிய பிம்லா எப்படி அனுமதித்தார் என்று அனைவரின் பார்வையும் அவரை தீண்டிச் சென்றது.
பிம்லாவோ நெருப்பின் மீது நின்று கொண்டிருந்தார். சித்தார்த் தங்கள் குடும்பத்தை பற்றி பேசியதை கேட்டு அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தவர், நீரஜ் கம்பீரமாக உள்ளே நுழைவதை கண்டதும் முதன்முறையாக அதிர்ந்து போனார்.
சாமர்த்தியமாக அனைத்தையும் நடத்திக் கொண்டதாக எண்ணி இருந்ததை இப்படி சித்தார்த் சுக்கு சுக்காக உடைப்பான் என்று எண்ணவில்லை. அதிலும் நீரஜ் முழுவதுமாக குணமடைந்து பழைய தெளிவுடன் வந்து நிற்பதை கண்டதும் தனது அத்தனை கனவுகளும் சிதைந்து போனதை அறிந்து கொண்டார்.
நீரஜின் பார்வை முழுவதும் பிம்லாவின் மீது தான் இருந்தது. அவர் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை அவதானித்தபடி இருந்தார்.
அப்போது ஒருவர் “நீரஜ் உங்கள் மனைவியே உங்களை கொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். இதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிம்லாவை பார்த்து விட்டு “உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை இங்கே நான் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று அவர் முடிக்கும் முன் அவசரமாக அவர் அருகே சென்ற பிம்லா “என்னை மன்னிச்சிடுங்க நீரு. எங்கப்பாவும், அண்ணன்களும் என்னை மிரட்டி தான் இதை செய்ய வச்சாங்க” என்றார் நீலி கண்ணீருடன்.
அவர் பேசியதை கேட்டதும் சிவதாஸின் இதழ்களில் கூட மெல்லிய புன்னகை. சித்தார்த்தோ அவரை கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்தான்.
“என்ன சொல்லி மிரட்டினாங்க பிம்லா? உன் உயிரை எடுத்திடுவேன்னா? அப்போ கணவன் உயிரை விட உன் உயிருக்கு மதிப்பு அதிகமில்லையா? அதனால என்னை கொல்ல ஒத்துக் கொண்டாயா?”
அங்கிருந்த அனைவருக்கும் அவரின் வார்த்தைகள் சாட்டையடியாக தோன்ற, பிமலா என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தார்கள்.
“இல்ல நீரு. நம்ம பிள்ளையை கொன்று விடுவேன்னு சொன்னாங்க”.
“ஒ...தாயுள்ளம் தவிச்சு போய் என்னை கொல்ல ஒத்துகிட்டீங்க?”
“ம்ம்...” என்றார் கண்ணீருடன்.
“ஆமாம் உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்? அவன் என் பிள்ளை. நீ எதுக்கு அவனுடைய உயிரை காப்பாற்ற என்னை பலி கொடுக்க நினைச்ச?”
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் அவரின் கேள்வியில் அதிர்ந்து நீரஜை பார்க்க, “இவங்க என்னுடைய ரெண்டாவது மனைவி. என் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் என் முதல் மனைவியை ஒதுக்கி வச்சிட்டு இவங்களை என் மனைவியாக்கினார். சொல்லப் போனா ஒரு தொழில்முறை ஒப்பந்தம் போல. சித்தார்த்திற்கும் நடந்தது இது தான். என் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் சித்தார்த்” என்று அனைவரின் முன்பும் அத்தனை நாள் பாதுகாத்து வந்த உண்மையை போட்டு உடைத்தார்.
அவர் சொன்னதும் பாய்ந்து அவரது சட்டையைப் பற்றி உலுக்கி “பொய் சொல்லாதே! யாரும் நம்பாதீங்க! இவருக்கு நான் மட்டுமே மனைவி” என்று கத்தினார்.
அனைவரின் மனதிலும் நினைத்தேன் என்கிற வார்த்தை எழ, ஒரு சிலர் வாயை திறந்து அதை சொல்லவும் செய்தனர். நானாஜி மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவமானப்பட்டு நின்றது வெறியை கூட்டியது. அதிலும் தினு ஆத்திரமடைந்து நீரஜை நோக்கி பாய, அவனை அலேக்காக பற்றி தூக்கி தன கைப் பிடியில் வைத்துக் கொண்ட சிவதாஸ் “துள்ளாதே! உள்ளே கொண்டு வச்சு அக்குவேறு ஆணி வேறா பிரிச்சிருவேன்” என்றான்.
அப்படியும் அடங்காமல் “யாரை பார்த்து என்ன பேசிட்டு இருக்கீங்க?’ என்று கத்தினான்.
சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு தினுவின் மூக்கில் ஓங்கி குத்தி இருந்தான். அதில் முகமெங்கும் ரத்தம் வழிய, மடங்கி அமர்ந்தவனை பிடித்து தூக்கி நிறுத்தி “இங்கே எல்லாம் பேசி முடிக்கும் வரை சத்தம் வரக் கூடாது” என்றான் மிரட்டலாக.
பிம்லாவோ சமூகத்தின் முன்பு தனது அங்கீகாரம் பறி போனதை எண்ணி ஆங்காரத்துடன் சித்தார்த்திடம் “உன்னை பெத்தது வேணா அவளா இருக்கலாம். பாலூட்டி வளர்த்தது நான். அந்த பாசம் கொஞ்சம் கூட உன் மனசுல இல்லையா?” என்றார் கோபமாக.
“அந்த பாசம் உங்களுக்கு இருந்ததா? உங்களுக்கு யாரிடமும் அன்பு இல்லை. நீங்கள் ஒரு சுயநலவாதி. சமூகத்தில் நீரஜ் மல்ஹோத்ராவின் மனைவி என்கிற அந்தஸ்து வேண்டும் என்பதற்காக அவரை மணந்து கொண்டீர்கள். அவருக்கு எத்தனை மனைவி இருந்திருந்தாலும் உங்களை அது பாதித்திருக்காது. உங்களுக்கு வேண்டியது அவருடைய தொழில், அதன் மூலியம் கிடைக்கும் மரியாதை. பாசம் அன்பு என்று ஒன்று இருந்திருந்தால் வர்ஷினியின் பெற்றோரை கொலை செய்திருப்பீர்களா?” என்று அடுத்த குண்டை போட்டான்.
அதைக் கேட்டதும் முகம் மாறிப் போனது பிம்லாவிற்கு. தனது அனைத்து பிம்பங்களும் உடைந்து கொண்டிருப்பதை உணர்ந்தார்.
சித்தார்த்தின் கைகளைப் பற்றிக் கொண்டவர் “உனக்குமா என்னுடைய நிலை புரியல? எங்கேயும் என் உணர்வுகளுக்கான மரியாதை அளிக்கப்படல. அவங்க அவங்க சுயநலத்திற்காக என்னை உபயோகப்படுகிட்டாங்க. இங்கே பாதிக்கப்பட்டது நான் மட்டுமே”.