விருந்தோம்பல்
இருள் கவிழ்ந்திருந்த நடுநிசியில் நாய்களின் குரைப்பு சத்தத்தையும் கண்டுகொள்ளாமல் மிகவும் வேகவேகமாக நடந்து சென்றவன் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா என யாராலும் கண்டறிய முடியாத இடத்தில் இருந்த அந்தக் கட்டிடத்தின் கதவினை காற்றினை விடவும் பலத்த வேகத்தில் கடந்தான்.
அவன் இவ்வளவு வேகமாக வந்த பொழுதிலும் அனைவருக்கும் பின் தாமதமாகவே வந்துள்ளான் என்பதை அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவனது சீனியர்களின் முகபாவனை உணர்த்தியது. "அச்சச்சோ ஏற்கனவே வச்சு செய்வாங்க... இன்னைக்கு கூட்டத்துக்கு லேட்டா வந்ததுக்கு இன்னும் என்னெல்லாம் பேச்சு வாங்கனுமோ", என மனதில் எண்ணியவாறே வெளியில் தன்னுடைய பற்கள் அனைத்தையும் காட்டி "சாரி சீனியர்ஸ்! கொஞ்சூண்டு லேட்டாயிடுச்சு", என மன்னிப்புக் கேட்க விரும்பாத குரலில் பேசியவனை கண்டு அவனுடைய சீனியா்கள் இகழ்ச்சியான புன்னகை ஒன்றை வீசினர்.
அது புரிந்தாலும் புரியாத மாதிரியே அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான். தங்கள் அருகில் வந்து அமர்ந்தவனை பார்த்தவர்கள் மீண்டும் தங்களுக்குள்ளேயே தங்களின் பேச்சினை தொடர்ந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை அவர்கள் அவமதிப்பதாக உணர்ந்தாலும் இப்பொழுதைய நேரத்திற்கு எது பேசினாலும் தன்னை மட்டம் தட்டியே பேசுவார்கள் என எண்ணியவன் அவர்களின் பேச்சில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் மட்டம் தட்டினாலும் பின்னர் ஜூனியரையும் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதையே காலம் காலமாக பின்பற்றும் சீனியர்கள் இங்கேயும் அதனையே பின்பற்றினர். சீனர்களில் அனைவருக்கும் மூத்தவனான பிளாக் "ஏன்டா கோவ்! ஏறத்தாழ 200 மில்லியன் பேரை போட்டுத் தள்ளுன என்னை விட நீ பெரிய அப்பாடக்கரா ஆகிட்டியே! அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லி தொலையேன். மறுபடியும் நாங்க ஏதாவது புது அவதாரம் எடுத்து டானா நடமாட முடியுமானு பார்க்குறோம்", எனக் கேட்டவுடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவ் தன் கர்ணக் கொடூர குரலில் கத்தி அழ ஆரம்பித்துவிட்டான்.
அவனின் அழு குரலில் தான் எதுவும் தவறாக கேட்டு விட்டோமோ என பதறிய பிளாக் "டேய்! நான் என்ன கேட்டேன் இப்படி ஒரு ஒப்பாரி வச்சுட்டிருக்க. யாராவது உன் சத்தத்தைக் கேட்டா நான் உன்னை கொடுமைப் படுத்துறதா சொல்லுவாங்க. வாயை மூடு. என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே தெரியும்", என அதட்டியவுடன் தன் அழுகையை நிறுத்தி விசும்ப ஆரம்பித்துவிட்டான்.
மீண்டும் பிளாக் அவனை சத்தம் போட வாய் திறந்த நொடியில் அவனது அருகில் அமர்ந்திருந்த சாஸ் எதுவும் பேச வேண்டாம் என கண்ணால் ஜாடை செய்துவிட்டு கோவை கட்டியணைத்து ஆறுதல் படுத்த தொடங்கினான். சாஸின் ஆறுதலில் சற்று தெளிந்தவன் தன்னுடைய சீனியர்கள் அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான்.
"சீனியர்ஸ்! நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் சந்தோசமா இல்லை. பேரு பெத்த பேரு தாகந்துகு நீலு லேதுன்னு சொல்லுவாங்களே அந்த கதைதான் என்னோட கதையும்", என கோவ் தன்னுடைய சோகக் கதையை பின்னணியில் சோக இசை வாசிக்கக் கூற ஆரம்பித்தான்.
அவன் பேச ஆரம்பிக்கும் முன்னரே இடை புகுந்த ஜிகா "ஏன்டா கோவ்! உலகத்தையே ஆட்டிப் படைக்கிற பெரிய டான் நீ... சோக கதையை சொல்லப் போறியா? இது நம்புற மாதிரி இல்லையே! உன்னை விட நாங்களும் பெரிய ஆளா இருந்தவங்கதான்டா! ஆனா எங்களையெல்லாம் கட்டி மூலையில தூக்கிப் போட்டுட்டாங்க. நீ எப்படி இத்தனை நாள் ஆகியும் மாட்டாம இருக்க? இப்ப வந்து எங்ககிட்ட கட்டுக்கதை சொல்லிக்கிட்டுருக்குறயா?", என கோபத்துடன் கேட்டவுடன் மீண்டும் சாஸை பார்த்த கோவ்
"நான் சொல்றதெல்லாம் உண்மை சீனியர்! நான் எங்கே போக மாட்டேன்னு சொல்றேன் இவங்கதான் என்னை விட மாட்டேங்கிறாங்க. நான் சொல்றத கேட்டுட்டு நீங்களே நிஜத்தை புரிஞ்சிப்பீங்க சீனியர்!", என பாவமாகக் கூறினான். தன்னைப் பார்த்துக் கொண்டே பேசியவனை அனுதாபத்துடன் நோக்கிய சாஸ் அவன் சொல்வதை கொஞ்சம் கேட்போமே எனக் கூறியவுடன் அனைவரும் அமைதியாகி விட்டனர்.
மீண்டும் சில நிமிடங்களை தன்னுடைய விசும்பலில் செலவழித்த கோவ் தன் கதையின் ஆரம்பத்தை மற்றவர்கள் பேசி கெடுக்கும் முன்னர் கூற ஆரம்பித்து விட்டான். "உண்மைதான் உங்க எல்லாரையும் விட நான் இந்த உலகத்தையே ஆட்டி படைத்தது. ஆரம்பத்துல எனக்கும் நாடு விட்டு நாடு போய் அங்க எல்லாரையும் கொன்னு குவிக்கிறதுல இருந்த சந்தோஷம் இப்ப சுத்தமாவே இல்லை...
உலகத்துல இருக்குற எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நான் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்குறப்ப நாங்க அப்படி எல்லாம் இல்லைடான்னு என் மண்டையில நங்குன்னு குட்டி நச்சுன்னு புரிய வச்சது ஒரு நாடு. பிறந்தோம்,வளர்ந்தோம் மத்தவங்களை நம்ம ஆதிக்கத்துக்குக் கீழ கொண்டு வந்தோம்
இருள் கவிழ்ந்திருந்த நடுநிசியில் நாய்களின் குரைப்பு சத்தத்தையும் கண்டுகொள்ளாமல் மிகவும் வேகவேகமாக நடந்து சென்றவன் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா என யாராலும் கண்டறிய முடியாத இடத்தில் இருந்த அந்தக் கட்டிடத்தின் கதவினை காற்றினை விடவும் பலத்த வேகத்தில் கடந்தான்.
அவன் இவ்வளவு வேகமாக வந்த பொழுதிலும் அனைவருக்கும் பின் தாமதமாகவே வந்துள்ளான் என்பதை அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவனது சீனியர்களின் முகபாவனை உணர்த்தியது. "அச்சச்சோ ஏற்கனவே வச்சு செய்வாங்க... இன்னைக்கு கூட்டத்துக்கு லேட்டா வந்ததுக்கு இன்னும் என்னெல்லாம் பேச்சு வாங்கனுமோ", என மனதில் எண்ணியவாறே வெளியில் தன்னுடைய பற்கள் அனைத்தையும் காட்டி "சாரி சீனியர்ஸ்! கொஞ்சூண்டு லேட்டாயிடுச்சு", என மன்னிப்புக் கேட்க விரும்பாத குரலில் பேசியவனை கண்டு அவனுடைய சீனியா்கள் இகழ்ச்சியான புன்னகை ஒன்றை வீசினர்.
அது புரிந்தாலும் புரியாத மாதிரியே அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான். தங்கள் அருகில் வந்து அமர்ந்தவனை பார்த்தவர்கள் மீண்டும் தங்களுக்குள்ளேயே தங்களின் பேச்சினை தொடர்ந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை அவர்கள் அவமதிப்பதாக உணர்ந்தாலும் இப்பொழுதைய நேரத்திற்கு எது பேசினாலும் தன்னை மட்டம் தட்டியே பேசுவார்கள் என எண்ணியவன் அவர்களின் பேச்சில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் மட்டம் தட்டினாலும் பின்னர் ஜூனியரையும் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதையே காலம் காலமாக பின்பற்றும் சீனியர்கள் இங்கேயும் அதனையே பின்பற்றினர். சீனர்களில் அனைவருக்கும் மூத்தவனான பிளாக் "ஏன்டா கோவ்! ஏறத்தாழ 200 மில்லியன் பேரை போட்டுத் தள்ளுன என்னை விட நீ பெரிய அப்பாடக்கரா ஆகிட்டியே! அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லி தொலையேன். மறுபடியும் நாங்க ஏதாவது புது அவதாரம் எடுத்து டானா நடமாட முடியுமானு பார்க்குறோம்", எனக் கேட்டவுடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவ் தன் கர்ணக் கொடூர குரலில் கத்தி அழ ஆரம்பித்துவிட்டான்.
அவனின் அழு குரலில் தான் எதுவும் தவறாக கேட்டு விட்டோமோ என பதறிய பிளாக் "டேய்! நான் என்ன கேட்டேன் இப்படி ஒரு ஒப்பாரி வச்சுட்டிருக்க. யாராவது உன் சத்தத்தைக் கேட்டா நான் உன்னை கொடுமைப் படுத்துறதா சொல்லுவாங்க. வாயை மூடு. என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே தெரியும்", என அதட்டியவுடன் தன் அழுகையை நிறுத்தி விசும்ப ஆரம்பித்துவிட்டான்.
மீண்டும் பிளாக் அவனை சத்தம் போட வாய் திறந்த நொடியில் அவனது அருகில் அமர்ந்திருந்த சாஸ் எதுவும் பேச வேண்டாம் என கண்ணால் ஜாடை செய்துவிட்டு கோவை கட்டியணைத்து ஆறுதல் படுத்த தொடங்கினான். சாஸின் ஆறுதலில் சற்று தெளிந்தவன் தன்னுடைய சீனியர்கள் அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான்.
"சீனியர்ஸ்! நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் சந்தோசமா இல்லை. பேரு பெத்த பேரு தாகந்துகு நீலு லேதுன்னு சொல்லுவாங்களே அந்த கதைதான் என்னோட கதையும்", என கோவ் தன்னுடைய சோகக் கதையை பின்னணியில் சோக இசை வாசிக்கக் கூற ஆரம்பித்தான்.
அவன் பேச ஆரம்பிக்கும் முன்னரே இடை புகுந்த ஜிகா "ஏன்டா கோவ்! உலகத்தையே ஆட்டிப் படைக்கிற பெரிய டான் நீ... சோக கதையை சொல்லப் போறியா? இது நம்புற மாதிரி இல்லையே! உன்னை விட நாங்களும் பெரிய ஆளா இருந்தவங்கதான்டா! ஆனா எங்களையெல்லாம் கட்டி மூலையில தூக்கிப் போட்டுட்டாங்க. நீ எப்படி இத்தனை நாள் ஆகியும் மாட்டாம இருக்க? இப்ப வந்து எங்ககிட்ட கட்டுக்கதை சொல்லிக்கிட்டுருக்குறயா?", என கோபத்துடன் கேட்டவுடன் மீண்டும் சாஸை பார்த்த கோவ்
"நான் சொல்றதெல்லாம் உண்மை சீனியர்! நான் எங்கே போக மாட்டேன்னு சொல்றேன் இவங்கதான் என்னை விட மாட்டேங்கிறாங்க. நான் சொல்றத கேட்டுட்டு நீங்களே நிஜத்தை புரிஞ்சிப்பீங்க சீனியர்!", என பாவமாகக் கூறினான். தன்னைப் பார்த்துக் கொண்டே பேசியவனை அனுதாபத்துடன் நோக்கிய சாஸ் அவன் சொல்வதை கொஞ்சம் கேட்போமே எனக் கூறியவுடன் அனைவரும் அமைதியாகி விட்டனர்.
மீண்டும் சில நிமிடங்களை தன்னுடைய விசும்பலில் செலவழித்த கோவ் தன் கதையின் ஆரம்பத்தை மற்றவர்கள் பேசி கெடுக்கும் முன்னர் கூற ஆரம்பித்து விட்டான். "உண்மைதான் உங்க எல்லாரையும் விட நான் இந்த உலகத்தையே ஆட்டி படைத்தது. ஆரம்பத்துல எனக்கும் நாடு விட்டு நாடு போய் அங்க எல்லாரையும் கொன்னு குவிக்கிறதுல இருந்த சந்தோஷம் இப்ப சுத்தமாவே இல்லை...
உலகத்துல இருக்குற எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நான் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்குறப்ப நாங்க அப்படி எல்லாம் இல்லைடான்னு என் மண்டையில நங்குன்னு குட்டி நச்சுன்னு புரிய வச்சது ஒரு நாடு. பிறந்தோம்,வளர்ந்தோம் மத்தவங்களை நம்ம ஆதிக்கத்துக்குக் கீழ கொண்டு வந்தோம்