Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தெரிந்து கொள்வோம் | SudhaRaviNovels

தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
மரகத புத்தர்

வடகிழக்கு சீனத்தில் உள்ள லயோனின் மாநிலத் தலைநகரான ஷென் யாங்கில் மரகதக் கற்களால் ஆன புத்தர் சிலை உள்ளது. இதன் எடை 7ஆயிரம் கிலோ, உயரம் 2 மீட்டர்.


உலகிலேயே மிக உயரமான புத்தர் ஆலயம் சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜியான்சு மாநிலத்தில் சாங் சேங் என்னுமிடத்தில் உள்ளது. இதில் 13 தளங்கள் உள்ளன.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
தலைகீழாக பறக்கும் கழுகு

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அபூர்வ கழுகு உள்ளது. மற்ற கழுகுகளைப் போல் இந்த கழுகு வானில் பறப்பதில்லை தலைகீழாகத் தான் பறக்கிறது. அது பறக்கும் போது வானில் இருந்து மல்லாக்காக பூமியில் விழுவது போல் தான் இருக்கும் ஆனால் தொடர்ந்து கவனித்தால் அது தலைகீழாக பறப்பது தெரியும்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
இரு மகான்கள்

நமது இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் இந்த புண்ணிய பூமியில் அவதரித்து இருக்கிறார்கள், அவர்களில் இருவர் ஆதிசங்கரர், ராமனுஜர் ,இன்று அவர்கள் இருவரின் அவதாரதினம்.

இருவரும் பல நூற்றாண்டு இடைவெளியில் தோன்றியவர்களாக இருந்தாலும் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சென்னை ஶ்ரீபெரும்புதூரில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பகவான் பெருமாளின் அவதாரமாக தோன்றியவர் மகான் ஶ்ரீராமானுஜர்.

கேரள மாநிலம் காலடி என்னும் சிறிய கிராமத்தில் வைகாசி மாதம் சுக்ல பட்ச பஞ்சமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆதிசங்கரர்.

கடவுளின் முன் அனைவரும் சமம் என்னும் சமத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியவர் ஶ்ரீராமானுஜர்.

இருவரும் முதலில் பயின்றது அத்வைதமே,ராமானுஜர் அத்வைதத்தில் இருந்த சாராம்சத்தை ஆராய்ந்து மக்களுக்கு எளிதாகச் சொல்ல விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கினார்.

விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் இரண்டுக்கும் பாஷ்யம் எழுதியது ஆதிசங்கரரே.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
மோகினி ஏகாதசி

இன்று அதாவது மே 15 வைகாசி மாதம் வளர்பிறையில் சுக்ல பட்ச தினத்தில் வரும் ஏகாதசியை மோகினி ஏகாதசி என்று சொல்கிறார்கள்.

இந்து இதிகாசங்களின் படி விஷ்ணு மோகினியாக வடிவம் எடுத்த நாளை மோகினி ஏகாதசி என்று கூறுகிறார்கள்.

இந்த நாளில் விரதமிருந்து துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து, நாளை துவாதசி திதியன்று விரதம் முடிக்க வேண்டும்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
புத்தர்

நேபாள நாட்டில் லும்பினியில் மாயாதேவி ஆலயம் உள்ளது. இந்த இடத்தில் தான் புத்தபிரான் அவதரித்தார் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். புத்தர் அவதரித்தது கி.மு. 563 ஆம் ஆண்டு. புத்தர் தன் தர்ம நெறிகளை முதன் முதலில் உபதேசித்த இடம் மான்வனம் என்ற இடம் ஆகும்.
 
  • Like
Reactions: sudharavi