Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தெரிந்து கொள்வோம் | SudhaRaviNovels

தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
தோஷங்கள் விலகும் நடராஜர் உச்சி கால அபிஷேகம்


மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள் தோறும் செய்து வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் படி சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் உச்சி கால அபிஷேகம் என்று சொல்லப்படும். அபிஷேகத்தின் போது பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, எண்ணெய், நெய், புஷ்பம் போன்ற பதினாறு வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நட்சத்திர நாளிலும் ஆவணி,புரட்டாசி மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதியில் நடக்கும். இந்த உச்சிக் கால பூஜையை காண தேவாதி தேவர்களும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கை.
 
Last edited:
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
நைல் நதிக்கரையில் பழமையான கோவில்


நைல் நதிக்கரையை ஒட்டி உள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அப்போது 42 அடி உயரம் கொண்ட மூன்றாம் அமென் ஹோடெப் மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது.


1970-ம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சின் போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.

அகழ்வாராய்ச்சியில் மேலும் 2 பெரிய சிலைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.ஒன்று வித்யாசமான தலை அமைப்புள்ள ஆண் தெய்வச்சிலை ஒன்றும், 6 அடி உயரம் உள்ள சிங்கத்தலை கொண்ட பெண் தெய்வச்சிலை ,ஆராய்ச்சி நடக்கும் இடம் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்சியாளர்களின் கணிப்பாக உள்ளது.?
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
உழைப்பாளர் தினம்

மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தினம் தான். இந்த உலகத்தின் அமைதிக்கு அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் 12 முதல் 18 மணி நேரம் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கபட்டனர். இதை எதிர்த்து, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் கூட்டமைப்பு 8 மணி நேரம் வேலை கோரிக்கையை முன் வைத்து போராடியது. 1886-ம் ஆண்டு மே 1ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவித்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக அமைந்தது.


இந்தியாவில் சென்னையில் பொதுவுடமைவாதியும் தலை சிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் 1923_ல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தினவிழாவை கொண்டாடினார்.


சென்னையில் முதன்முதலாக தொழிலாளர் தினவிழா கொண்டாடிய இடத்தில் 1956_ம் ஆண்டு கர்மவீரர் காமராஜர் சென்னையில் உழைப்பாளர் சிலையை நிறுவினார்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
இல்லை ...இல்லை... இல்லை

அல்பேனியாவில் மதங்கள் இல்லை (ரொம்ப நல்ல விஷயம்)

அபுதாபியில் காக்கைகள் இல்லை

பிரான்சில் கொசுக்கள் இல்லை

சுவிட்சர்லாந்தில் ராணுவம் இல்லை

லிபியாவில் நதிகள் இல்லை

முதலைக்கு நாக்கு இல்லை

அத்திமரமும் பலாமரமும் பூப்பதில்லை

பாகிஸ்தான் ஜோர்டான் நதியில் மீன்களே இல்லை
 
  • Like
Reactions: sudharavi and Anuya

lakshmi

Active member
May 9, 2018
398
55
43
தெரிந்து கொள்வோம்

ஆக்டோபஸின் ரத்தம் நீலநிறமாக இருக்கும்

கழுகு எதையும் கொல்லாது,இறந்ததை மட்டும் தின்னும்

தவளை தன் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன

நீரில் நின்று கொண்டே தூங்கும் பிராணி கடல்குதிரை

நத்தைக்கு கால் ஒன்று ஆனால் வயிற்றில் பல் உண்டு

எறும்பிற்கு 5 மூக்குகள் உள்ளன

எட்டுகால் பூச்சிக்கு கண்களும் எட்டு

நாய்களுக்கு வியர்ப்பதில்லை
 
  • Like
Reactions: sudharavi and Anuya