Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தெரிந்து கொள்வோம் | SudhaRaviNovels

தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
புதையலை காக்கும் முதலைகள்

மன்னர் ஆட்சி காலங்களின் போது சேகரிக்கப்பட்ட தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை போரின் போது இவைைகள் கொள்ளைையடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கிணறுகள், சுரங்கம் போன்ற ரகசிய இடங்களில் வைத்து பாதுகாத்தனர்.

அத்துடன் இந்த சொத்துகளை ரகசியமாகவும் பாதுகாத்து வந்தனர். கால மாற்றத்தில் இவை புதையலாக வெளிப்படுகின்றன. அப்படி குஜராத் மாநிலத்தில் உள்ள புதையல் ஒன்றை முதலைகள் காவல் காப்பதாக நம்பப்படுகிறது. குஜராத், அகமதாபாத், காந்திகிராமம் போன்ற பகுதிகளை போன்று ஜுனாகத் பகுதி வானுயர்ந்த கோட்டைகளுக்கு புகழ்பெற்றது. சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாம். இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் ஆட்சியை சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காண முடியும்.

இந்நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. இதனை அடைய 9999 படிகளை உடைய மலைப்பாதைகள் மற்றும் கோவில்களை கடக்க வேண்டும்.

மிகமுக்கியமாக மர்மமான பகுதியாக காணப்படும் உபர்கோட் கோட்டை கி.மு 320 - ம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியரால் கட்டப்பட்ட கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகளில் அழகான நுழைவாயில்கள்,தூண்கள், தண்ணீர் கோட்டைகள் மற்றும் சட்டசபை மண்டபம், தியான மண்டபம் போன்றவை உள்ளன.

இவற்றை கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான மறைமுக குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது. அத்துடன் குகையின் உள்ளே ஒரு மீட்டர் தூரத்தில் 300 அடி ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடயங்களை காணலாம். யாரேனும் உள்ளே வந்தால் முதலைக்கு இரையாகும்படி இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். இன்று முதலைகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் புதையலை தேடிச் செல்பவர்கள் உயிரிழந்து விடுவது தொடர்கதையாகி உள்ளதாம்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
ஈஸ்டர் திருநாள்


இயேசு கிறிிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீீண்டும் உயிரோடு வந்ததை நினனவு கூறும் நாளே ஈஸ்டர் திருநாள்.


இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின்படி கி.பி. 27-33-இல் ஏசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் வகையில் கிறூஸ்தவர்களால் கொண்டாடப்படுவது உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்கா
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
புவி தினம்

இன்று உலக புவி தினம் புவியின் பாதுகாப்புத் தன்மைகளை கருத்தில் கொண்டு1970 ம் ஆண்டு முதல் புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

புவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு இன்றுடன் 48 வருடங்கள் கடந்த பின்பு தான் நாம் பூமித்தாயை பற்றி நினைத்து பார்க்கிறோம். இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால் தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி உள்ளோம். கடந்த வருடங்களில் எஙகு பார்த்தாலும் பூமி வெப்பமயமாதல், இயற்கை பேரிடர்கள் என்று நாம் நிறைய அனுபவித்து விட்டோம். இனி வரும் காலங்களிலாவது மரங்களை வளர்த்து பூமியை பேணுவோம்?
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
உலக புத்தக தினம்


ஏப்ரல் 23 இன்று உலக புத்தக தினம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் நூலகம் சென்று புத்தகத்தை வாசிப்பது ஒரு வகை அலாதியான சுகம்தான்.


1995 - ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் இந்த சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாள் உலக புத்தக தினம் என்று மட்டும் அல்லாது, புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பிறந்த மற்றும் இறந்த மாமனிதர்களுக்கு மரியாதையும் செய்கின்றனர். குறிப்பாக ஷேக்ஸ்பியர் இந்த நாளில் தான் மறைந்தார்.


புத்தகங்கள் சாகவரம் பெற்றவை, மனிதனை புதுப்பிக்க செய்யும் பண்பு நல்ல புத்தகங்களுக்கு உண்டு. சமூகத்தின் எழுச்சிக்கு புத்தகங்களின் பங்கு உண்டு. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
397
54
43
தீயில் உருக்குலைந்த தேவாலயத்தில் உயிருடன் இருந்த தேனீக்கள்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள நோட்ரே டேம் என்ற இடத்தில் 850 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க தேவாலயத்தில் ஏப்ரல் 15 ம் தேதி மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதில் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழுந்தன. மேலும் தேவாலயத்தின் இரண்டு கோபுரங்களில் ஒன்று முற்றிலும் தீக்கிரையானது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.


மிகப்பெரிய தீ விபத்தில் தேவாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க முள் கிரீடம்,கிங் லூயிஸ் IX அணிந்திருந்த துணி, போன்றவைகள் பத்திரமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தேவாலயத்தின் மேற்கூரை மீது வசித்த சுமார் 2,00,000 தேனீக்கள் தீயில் சிக்கி அழிந்திருக்கும என கருதப்பட்டது. ஆனால் அவை பத்திரமாக இருப்பதாக தேனீக்களை பராமரிப்பவர் தெரிவித்துள்ளார். தேனீக்கள் மேற்கூரைக்கு கீழேயுள்ள ஓர் இடத்தில் பதுங்கி உயிர் தப்பித்துள்ளன. இது பிரான்ஸ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
  • Like
Reactions: sudharavi