Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தெரிந்து கொள்வோம் | SudhaRaviNovels

தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
May 9, 2018
395
55
43
வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.


அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது

வாழை இலையில் நேரடியாக உண்பது நம் ஜீரணசக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

புற்றுநோயை தடுக்கும் பாலிபினால்ஸ் வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இதிலிருக்கும் ரூட்டின்,குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த உறைவு,மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

வாழை இலை ஒரு இயற்கை கிருமிநாசினி இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சுத்தன்மையை போக்குவதுடன் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
395
55
43
வாரம் இருமுறை அன்னாசிப்பழம், பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடல் அழகு கூடும்.

ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் உடலில் சேர்ந்த அனாவசியமான கொழுப்புகள் கரைந்து வெளியேற்றப்படும். வெயிலில் அலைபவர்கள் வெள்ளரிக்காய்,தக்காளி இரண்டையும் அரைத்து தேனில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் கருத்துப் போகாமல் இருக்கும்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
395
55
43
உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை

வீணான பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கு பெயர் பெற்ற ராபர்ட் என்பவரால் கனடா நாட்டில் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை கட்டப்பட்டுள்ளது.

மனிதர்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குறைந்த செலவில் உறுதியான வீடுகளை கட்ட முடியும் என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார்.

இதே முறையை பயன்படுத்தி ஒரு சுற்றுச்சூழல் கிராமத்தையே உருவாக்கிக் கொண்டு இருக்கிறார் ராபர்ட், இவரை பிளாஸ்டிக் மன்னர் என்றே அழைக்கின்றனர்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
395
55
43
100 ஆண்டுகள் நிறைவு

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 -- இல் பஞ்சாப் மாநிலம் அம்ரித்சத் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் பீரங்கி துப்பாக்கி சூடு நிகழ்த்தப் பட்டது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நீடித்த இந்த தூப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர்.

இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்கு பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங்,லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார்.இப்போதும் ஜாலியன் வாலா பாக்கில் படுகொலை நடந்த இடத்தில், குண்டுகள் துளைக்கப்பட்ட சுவர்களை பார்க்கலாம், ரத்த கரைகளும் தென்படும்.

இச்சம்பவத்துக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் கண்டு கொள்ளவேயில்லை.

இந்நிலையில் 10 ஆம் தேதி ஏப்ரல் அன்று பிரிட்டிஷ் நாடளுமன்றம் கூடிய கூட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே அறிவித்தார். அதேபோல் நாடளுமன்றத்தில் பேசினால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களை தெரிவித்து கூறினார்.

இதுவும் ஒரு தினம் என்று கடந்துவிடாமல் உயிர் நீத்த மக்களுக்கு நினைவுகள் மூலம் உயிர் கொடுப்போம்.
 
  • Like
Reactions: sudharavi

lakshmi

Active member
May 9, 2018
395
55
43
தமிழ் புத்தாண்டு


இன்று விகாரி வருடம் பிறந்திருக்கிறது. பிரபவ வில் தொடங்கி அட்சய வில் முடியும் தமிழ் வருடங்கள், மொத்தம் அறுபது. இதில் 33 வது ஆண்டு விகாரி ஆண்டாகும். 60 என்கிற எண் , காலக்கணக்கில் மிகவும் முக்கியமான எண். வருடங்கள்
60 என்பதை தாண்டி, 60 நொடிகள் ஒரு நிமிடம்;60 நிமிடங்கள் ஒரு மணி நேரம்.60 நாழிகை ஒரு நாள் என முக்கியத்துவம் கொள்கிறது.


நம் மரபில் புத்தாண்டை வெறும் கொண்டாட்ட காலமாக மட்டுமே பார்ப்பதில்லை. அதைப் புண்யகாலமாக அனுசரிக்கும் வழக்கங்கள் உள்ளன. ஆண்டின் முதல்நாளைத் தென்புலத்தார் வழிபாட்டோடு தொடங்குவதன் மூலம் அவர்களின் ஆசியினைப் பெற வேண்டுவோம்.
 
  • Like
Reactions: sudharavi