Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இந்தியாவிலேயே முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்ற பெண் வழக்கறிஞர்: பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
திருப்பத்தூர்




இந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளார். அவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா(34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சிநேகா சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழை சமீபத்தில் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர் அவரை தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சிநேகாவின் கணவர் பார்த்திபராஜா ‘இந்து தமிழ்’ திசை நாளிதழுக்கு கூறும்போது," கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டம் என கூறலாம். நாங்கள் இருவரும் சாதி, மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள். எங்களது திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு தாலி மறுப்பு, சடங்கு மறுப்புடன் தான் நடைபெற்றது. இந்த திருமண பந்தத்தின் மூலம் குடும்ப நலனுக்காக எங்கள் சொந்த நலனை விட்டு கொடுப்பது என்றும், சமூக நலனுக்கான குடும்ப நலனை விட்டு கொடுப்பது என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். எனது மனைவி குழந்தையாக பள்ளியில் சேரும்போது, சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்று, சட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.
எங்களுக்கு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம்,பவுத்தம் (புத்தர்) ஆகிய மதங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்துள்ளோம். இதன் மூலம் அரசு இட ஒதுக்கீடு கிடைக்காது என்பது தெரியும். இட ஒதுக்கீடு மீது அதிக நம்பிக்கை இருந்தாலும், சாதி, மதம் இல்லாமல் இருப்பது முக்கியமாக கருதினோம். அதன் அடிப்படையில் தான் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற கடந்த 10 ஆண்டுகளாக போராடி, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் இதுபோன்ற சான்றிதழ் கொடுக்க முடியாது எனக்கூறிய வருவாய்த் துறையினரிடம் பல்வேறு எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்து சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிழை பெற்றுள்ளோம்" என்றார்.
இது குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, "சாதியை குறிப்பிடாமல் இதுவரை யாருக்கும் சான்றிதழ் வழங்கவில்லை. முதல் முறையாக வழக்கறிஞர் சிநேகாவுக்கு சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாணையில் இடம் உள்ளது. பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பிறகே அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிநேகாவின் மூதாதையர்கள் சாதி,மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு ஆவணங்களை காட்டியுள்ளதால், அதன் அடிப்படையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சலுகைகள் அவருக்கு கிடைக்காது என்றாலும், இது போன்ற சான்றிதழ் வழங்க அரசாணையில் இடம் உள்ளது" என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு: திருப்பாம்புரத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணம்



திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ராகு பகவானுக்கு நேற்று நடைபெற்ற மகா தீபாராதனை.

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள் ளம், திருப்பாம்புரம் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திரு நாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் நாகவல்லி, நாககன்னி ஆகிய துணைவியருடன் மங்கள ராகுவாக, ராகு பகவான் அருள் பாலித்து வருகிறார். இங்கு, ராகு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற் றது. நேற்று மதியம் 1.24 மணிக்கு ராகு பகவான் கடக ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். முன்னதாக, கோயில் வளாகத்தில் நேற்று காலை பூர்ணாஹூதி, தொடர்ந்து புனித நீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, ராகு சன்னதியில் பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத் தப்பட்டது. தொடர்ந்து, ராகு பெயர்ச் சியின்போது மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ரிஷபம், மிது னம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக் காரர்கள் பரிகார பூஜையில் பங் கேற்று வழிபட்டனர். பின்னர், நேற்று இரவு வெள்ளி சேஷ வாகனத்தில் ராகு பகவான் வீதியுலா நடைபெற் றது. 2-ம் கட்ட லட்சார்ச்சனை இன்று (பிப்.14) தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கேது பகவான் கும்ப ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது தலமான சவுந்திரநாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் நேற்று மதியம் விக்னேஷ்வர பூஜை, ராசி பரிகார சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கேது பகவானுக்கு பால், சந்தன அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.
திருப்பாம்புரம்
இதேபோல, தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு-கேது தல மான திருப்பாம்புரம் சேஷபுரீஸ் வரர் கோயிலில் பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி ராகு-கேது பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் 2.02 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, இன்று (பிப்.14) ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மதுரை



கூடங்குளம் அணுமின் நிலையம் | கோப்புப் படம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய நிலம் வழங்கிய குடும்பங்களில் தலா ஒருவருக்கு அணுமின் நிலைய சி, டி பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அப்பாவு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைய நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவு வேலைகளில் முன்னுரிமை வழங்க 12.2.1999-ல் ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது.
இந்நிலையில், அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்தேர்வு தொடர்பாக கடந்த ஏப்.18-ல் அறிவிப்பாணை வெளியானது. அதில், நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அறிவிப்பாணையை ரத்து செய்து, நிலம் வழங்கியவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்குப்பின்வந்த அறிவிப்பாணையை செயல்படுத்த உயர் நீதிமன்ற அமர்வு தடைஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அணுமின் நிலையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் சி மற்றும் டி பிரிவில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் சி, டி பணியாளர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இடம் அளித்தவர்களுக்கு வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிலம் வழங்கியதற்கான சான்றிதழ், கல்விச் சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிப்.28-க்குள் அணுமின் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எத்தனை பேர் தகுதியுடையவர்கள், நிராகரிக்கப்பட்டவை எத்தனை? ஏன்? என்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
என் இனிய இயந்திரா... கோவையில் அசத்தும் `ரோபோ சர்வர்’



ஏம்பா சர்வர், தோசைக்கு சட்னி கேட்டு எவ்வளவு நேரமாச்சு. இப்பத்தான் தேங்காய் அரைச்சிக்கிட்டிருக்கீங்களா... இந்த ஹோட்டல்ல இதே தொல்லைப்பா. ஆர்டர் கொடுத்து அரை மணி நேரமாச்சு. இன்னும் சப்பாத்தி வரலை" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டாலும், போகும்போது சர்வர் மனம்குளிர ரூ.5, ரூ.10 டிப்ஸ் வைத்துச் செல்வோம். ஆனால், கோவையில் ஒரு ஹோட்டலில் இதற்கெல்லாம் தேவையே இருக்காது. ஆம். இந்த ஹோட்டலில் சர்வர் வேலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல, ரோபோக்கள்!
மனித அறிவின் உச்சம் ரோபோ. மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக, மனிதனால் உருவாக்கப்பட்டவை இயந்திரமனிதர்கள். தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடுவந்துவிட்டது. மருத்துவம், ராணுவம், கட்டுமானம், தொழில் துறை என ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. `வேலை செய்வதுபோல நடித்து ஏமாற்றுவது, சம்பள உயர்வு கேட்டு ஸ்டிரைக் செய்வது, அடிக்கடி லீவு போடுவது' என எதுவும் ரோபோக்களிடம் இருக்காது. மேலும், மனிதர்களால் செய்ய முடியாத, செய்யத் தயங்கக் கூடிய வேலைகளையும் செய்யும் என்பதால் ரோபோக்களின் பயன்பாடு வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த வகையில், தற்போது
ஹோட்டல்களில் சர்வர் வேலை செய்யவும் வந்துவிட்டன ரோபோக்கள். கோவை அவிநாசி சாலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அருகேயுள்ள செந்தில் டவர்ஸ் முதல் மாடியில் கோவையில் முதல் ரோபோ உணவகமான `ரோபோ தீம் ரெஸ்டாரன்ட்`. செயல்படுகிறது
எப்போதும் புதுமைகளை அங்கீகரிப்பதில் முன்னிலை வகிக்கும் கோவை, ரோபோ உணவகத்துக்கும் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது. இந்த ரோபோ உணவகத்தின் பொதுமேலாளர் கைலாஷ் சுந்தரராஜனிடம் பேசினோம். "சென்னையில் 2012-ல் பி.இ. தகவல் தொழில்நுட்பம் முடித்தேன். சாஃப்ட்பேர் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அதனால் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடைசியாக சோளிங்கநல்லூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அதன் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜேந்திரன். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டே யிருந்தோம்.
அப்போதுதான், ரோபோ சர்வர் ஐடியா வந்தது. ஏற்கெனவே, ஜப்பான், சீனா, நேபாள், பங்களாதேஷ் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள ரெஸ்டாரன்டுகளில் ரோபோக்களை சர்வர்களாகப் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்த பின்னர், 2017 நவம்பரில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் ரோபோ டெஸ்டாரன்டைத் தொடங்கினோம். அங்கு 4 ரோபோக்களை சர்வர் பணியில் பயன்படுத்தினோம். பெரிய அளவுக்கு வரவேற்பு இருந்தது. கோவையைச் சேர்ந்த நிறைய பேர் தேடி வந்து, ரோபோக்கள் கையால் சாப்பிட்டார்கள்(?).
எனவே, கோவையிலும் ரோபோ ரெஸ்டாரன்டை தொடங்க முடிவு செய்து, கோவை அவிநாசி சாலையில் 2018 ஜூலை மாதம் `ரோபோ தீம் ரெஸ்டாரன்ட்` என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்டைத் தொடங்கினோம். இந்தியாவிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் இது அறிமுகமானது.
கோவை ரெஸ்டாரன்டில் ஒரே நேரத்தில் 140 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். இதற்காக, சீனா-ஜப்பான் தொழில்நுட்பத்தில் 8 ரோபோக்களை இறக்குமதி செய்தோம். இவை `சர்வீஸ் ரோபோ` வகையைச் சேர்ந்தவை. இவற்றை இயக்குவது, பராமரிப்பது தொடர்பாக 3 மாதங்கள் பயிற்சி பெற்றோம்.
ப்ளீஸ், டேக் யுவர் ஃபுட்...
ஒவ்வொரு டேபிளிலும் `டேப்லட்` இருக்கும். அதில் உணவு வகைகள், விலை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த டேப்லட் மூலம் உணவு ஆர்டர் கொடுத்தால், அது சமையல் அறையில் உள்ள கணினியில் தெரியும். உடனே அவர்கள் உணவை சமைத்து, அங்கே தயாராக நிறுத்தப்பட்டுள்ள ரோபோக்கள் ஏந்தியுள்ள தட்டில் வைப்பார்கள். குறிப்பிட்ட டேபிளின் எண்ணை அழுத்திவிட்டால், அந்த ரோபோ சரியாக அந்த டேபிளுக்குச் சென்று, `ப்ளீஸ், டேக் யுவர் ஃபுட்` என்று கூறும். நாம் அந்த உணவை எடுத்துக் கொண்ட பிறகு, தேங்க்யூ, ஐ வில் கெட் பேக் டூ மை வொர்க்' என்று கூறிவிட்டு, மீண்டும் சமையல் அறை பகுதிக்குச் சென்றுவிடும்.
ரோபோ கொண்டு வரும் உணவை நாமே எடுத்துப் பரிமாற தயக்கம் இருப்பின், அங்கு பணியில் இருக்கும் வழக்கமான சர்வர்கள், அவற்றை எடுத்து நமக்குப் பரிமாறுவார்கள். பெரும்பாலானோர் ரோபோ கொண்டுவரும் உணவை எடுத்து, தாங்களே பரிமாறிக் கொள்கின்றனர்" என்றார்.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், இரவு 7 முதல் 11 மணி வரையிலும் இந்த ரெஸ்டாரன்ட் செயல்படுகிறது. இந்த ரோபோக்களுக்கு உணவு மின்சாரம்தான். சர்வீஸ் நேரத்தைத் தவிர, மற்ற
ஓய்வு நேரங்களில் இந்த ரோபோக்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யப்படுகிறது. சைனா,சின்லி, தேவாங், சங்ஹூ, சிச்சுவான், லீகுவான் என்றெல்லாம் இவற்றுக்குப் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன.
"இங்கு இந்தியன், சைனீஸ், தாய், தந்தூரி வகை உணவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. முன்கூட்டியே புக் செய்துவிட்டால், டேபிள் ஒதுக்கிவிடுவோம். நிறைய குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் இங்கு வருகின்றனர். பிறந்த நாள் பார்ட்டி, ட்ரீட் என முன்கூட்டியே புக் செய்துவிட்டு, விழாவை சிறப்பாகக் கொண்டாடிக் கொள்கின்றனர்.
அண்மையில் சென்னை போரூரிலும் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளோம். அதிகவரவேற்பு உள்ளதால், தமிழகத்தில் வெவ்வேறுநகரங்களிலும் ரோபோரெஸ்டாரன்டுகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் கைலாஷ் தெரிவித்தார்.
அடிமை உழைப்பாளி...
`ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ்` என்ற செயற்கை அறிவுத் துறையின் வளர்ச்சி வெகு வேகமாய் உள்ளது. ரோபோ என்ற வார்த்தை செக் அல்லது லத்தீன் மொழியிலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். லத்தீன் மொழியில் லபோர் என்றால் அடிமை உழைப்பாளி என்று பொருள். காரல் கெப்பேக் என்ற செக் மொழி நாடகாசிரியர் 1921-ல் ஒரு நாடகத்தில் ‘ரோபோ’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். மனிதர்களால் காலம்காலமாக செய்யப்படும் கடின வேலைகளை, இலகுவாக செயவதற்காக சில இயந்திரங்களைப் பயன்படுத்தினர். அவையே ரோபோக்கள். இந்த துறை இயந்திர மனிதவியல் (ரோபோடிக்ஸ்) என்றழைக்கப்படுகிறது. நகராதவை, நகரக்கூடியவை என ரோபோக்கள் உண்டு. ரோபோக்களை உருவாக்குவதில் ஜப்பானியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இயந்திர மனிதன் அல்லது மனித உருகொண்ட தானியங்கி ரோபோக்கள் ஹியூமனாய்டு ரோபோ என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை உடல் பகுதியுடன், தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் குறிப்பிட்ட உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் தோல் தொழில்நுட்பத்துடன், மனிதரைப்போலவே தோற்றம்கொண்ட ரோபோக்களும் வந்துவிட்டன.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அம்பானி வீட்டில் அடுத்த திருமணம்: ரூ.1.5 லட்சத்தில் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ்- நெட்டிசன்கள் விமர்சனம்


உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இஷா அம்பானி - ஆனந்த் பிராமலின் பிரம்மாண்டத் திருமணத்தைத் தொடர்ந்து, இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
அவரின் சிறுவயதுத் தோழிரும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஷ்லோகா மேத்தாவை ஆகாஷ் அம்பானி மணக்கிறார். இந்நிலையில் இருவரின் திருமண அழைப்பிதழ் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அழகிய இளஞ்சிவப்பு நிறப் பெட்டிக்குள் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேல்புறத்தில் சூரிய ஒளியில் தாமரைகள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்களுக்கு நடுவே ராதையும் கிருஷ்ணரும் இருக்கின்றனர். அதைத் திறந்தவுடன், மேல் பகுதியில் வெள்ளி ஃப்ரேமில் ராதா கிருஷ்ண படம் வைக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்தவுடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிகின்றன.