Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
7 நாட்கள்; 7 நிறங்களில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்; 7 டர்பன்கள் - வைரலாகும் இந்தியத் தொழிலதிபர்


லண்டனில் வசிக்கும் இந்தியா வம்சாவளியான ரூபன் சிங் என்னும் சீக்கியத் தொழிலதிபர், 7 நாள் ரோல்ஸ்ராய்ஸ் சேலஞ்ச் மூலம் பிரபலமாகியுள்ளார். இதில் ஒவ்வொரு நாளும் தனது டர்பனின் நிறத்துக்கு ஏற்றவாறு ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணிப்பார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் ரூபன் சிங், ஆடம்பரக் கார்கள் குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸின் மீது அலாதியான ஆர்வம் கொண்டவர். 42 வயதான இவர், 7 நாட்களும் 7 நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 2000-ம் ஆண்டு 'த சன்டே டைம்ஸ்' பத்திரிகை, ரூபன் சிங்குக்கு சுமார் 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவரை ’பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்றும் புகழாரம் சூட்டியது.
இந்நிலையில் தற்போது ’நகை கலெக்‌ஷன்’ என்ற பெயரில் மாணிக்கம், மரகதம், நீலம் ஆகியவற்றின் நிறங்களில் மேலும் புதிதாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார் ரூபன் சிங்.
சீக்கியக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள ரூபன், ''கடவுளின் அருளால்தான் இது சாத்தியமானது'' என்று தெரிவித்துள்ளார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
உலக சுற்றுலாவுக்காக நிதி திரட்ட 4 மாதக் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாகசம் செய்த கொடூரம்: தம்பதி கைது



உலகச் சுற்றுலா செல்வதற்காக நிதி திரட்டும்பொருட்டு, தங்களின் 4 மாதப் பெண் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாசகம் செய்த ரஷ்யத் தம்பதி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயது ஆண் மற்றும் அவரின் 27 வயது மனைவி ஆகிய இருவரும் கோலாலம்பூரில் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, 90 விநாடி வீடியோ ஒன்று வைரலானது. அதில் ப்ளூ ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை டி-ஷர்ட் அணிந்த மனிதர் ஒருவர், தனது கால்களுக்குக் கீழேயும் தலைக்கு மேலேயும் கைக்குழந்தையை தூக்கித் தூக்கிப் போட்டு விளையாடினார். பின்னணியில் ஏதோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த ஆணின் மனைவி கீழே தரையில் அமர்ந்திருந்தார். அவரின் கையில், ''உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு நிதி தேவை'' என்று எழுதப்பட்டிருந்த பதாகை இருந்தது.
ஏராளமான மக்கள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கூட்டத்தில் இருந்து ஆண் குரல் ஒன்று, ''இது முட்டாள்தனமான ஒன்று. இப்படி நீங்கள் செய்யக்கூடாது'' என்று ஒலித்தது.
இந்நிலையில் வைரலான வீடியோவைக் கொண்டு மலேசிய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ரஷ்யத் தம்பதியைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய கோலாலம்பூர் காவல்துறை தலைவர் மஸ்லான் லசீம், ''திங்கட்கிழமை அன்று அவர்களைக் கைது செய்தோம். 4 மாதப் பெண் குழந்தையைக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பருவ நிலை மாற்றம்: இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் - எச்சரிக்கும் புதிய அறிக்கை


பருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என்று சமீபத்தில் வந்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது இவ்வாறே தொடர்ந்தால் இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும் நிலை ஏற்படும்.
மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால் இமய மலை பிராந்தியத்தை சுற்றி உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் பருவ நிலை மாற்றம் சார்ந்து மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள இருக்கின்றன. இதனவிளைவு மிகத் தீவிரமாக உள்ளது. இது கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை அளித்த ஆசிரியர்களில் ஒருவரான பிலிப்பஸ் வெஸ்டர் கூறும்போது, ”பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவை. நாம் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்.
நம்மால் இதனை தடுக்க முடியும் என்று நான் கருதுகிறேன். நாம் அன்றாட வேலை காரணமாக நாம் இதுபோன்ற கதைகளை கேட்க தயாராக இல்லை. நம்மிடம் தொழில் நுட்பம் உள்ளது. நம்மால் பசுமை இல்ல வாயுகளின்(Green House Gases) வெளியேற்றத்தை குறைக்க முடியும். இதனை தடுக்க நாட்களோ, வருடங்களோ இல்லை. நாம் இன்றிலிருந்து செயலாற்ற வேண்டும் ” என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இன்றும் நிகழும் பெண்ணுறுப்புச் சிதைவு வன்முறை..! என்ன செய்ய வேண்டும்? #EndFGM



ன்று (பிப்ரவரி 6) பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான சர்வதேச தினம். ஆசிய நாடுகளில் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்காத சொல்லாடல் இது. என்றாலும், இங்கே நிகழும் பாலியல் வன்புணர்வுகளுக்கு நிகராக ஆப்பிரிக்கப் பெண்களுக்கு சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வரும் கொடூரம். 8 அல்லது 10 வயதுச் சிறுமியை மிட்டாயோ அல்லது விருப்பமான ஏதோவொரு பொருளையோ கொடுப்பதாக ஆசைகாட்டி, ஓர் இருட்டு அறைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அழைத்துச் செல்பவர் அந்தச் சிறுமி அதிகம் நம்பும் அவரின் அம்மா அல்லது பாட்டியாக இருப்பார். உள்ளே முன்பின் பரிச்சயம் இல்லாத ஒரு நபர் பிறப்புறுப்பின் சதைகளைக் கத்தி அல்லது பிளேடு கொண்டு அறுத்துவிட்டு, சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் சிறிய இடைவெளிவிட்டு இழுத்துத் தைத்து விடுவார்கள். அது, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிகழும்வரை அவரின் தூய்மையைப் பாதுகாக்க ஆப்பிரிக்கர்களால் பின்பற்றப்பட்ட மூடச்சடங்கு.
சிறுமிகளின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் அளவுக்கு வன்மம் நிறைந்த செயல் ஏன் நிகழ்கிறது? ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும் சுதந்திரம்கூடப் பறிக்கப்படும் அளவுக்கு அந்தப் பிஞ்சு உச்சகட்ட வலியை உணர வேண்டுமா? இதற்குக் காரணம் சடங்கும் சம்பிரதாயமும் மட்டும்தானா? இல்லை, சடங்கு என்ற பெயரால் வெறியாட்டமாடிய ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே.



``பிறப்புக்குரிய உறுப்பு வெட்டி எடுக்கப்படுவதை உணர்ந்தேன். மொன்னையான பிளேடு முன்னும், பின்னும் என் தசையினூடே சென்றுவரும் சத்தம் கேட்டபடியிருந்தது. யாரோ உங்கள் தொடையிலிருந்து தசையைத் துண்டாக அறுத்தெடுப்பதுபோல அல்லது உங்கள் கையை வெட்டியெடுப்பது போல இருந்தது அந்தவலி. தவிர, இது உங்கள் உடம்பில் மிக முக்கியமான உணர்ச்சிபூர்வமான பகுதி”
சோமாலியாவில் பிறந்து வளர்ந்த நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான வாரிஸ் டைரி, தன் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட அனுபவத்தை மேற்கண்டவாறு விவரிக்கிறார். தன் 5 வயதிலேயே பிறப்புறுப்புச் சிதைப்பை அனுபவித்த அவர், 13 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பின்னர், வாழ்க்கையில் கடுமையான உழைப்புக்குப் பிறகு அவர் அடைந்த உயரங்கள், ஒவ்வொரு முறையும் தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக அவர் அளித்த பதிலடியாகும். வீட்டிலிருந்து வாரிஸ் வெளியேறினாலும் அவர் போன்ற எண்ணற்ற பெண்களுக்கு அத்தகைய விடுதலை கிடைக்கவில்லை. ஒருநாள் தனக்கு நடந்த அநீதியை உலகில் எல்லோருக்கும் அறிவித்தார். தன் வலியை எப்படியெல்லாம் விவரிக்க இயலுமோ அப்படியெல்லாம் விவரித்தார். பின்னர், தன் சுயசரிதை நூலான `Desert flower’ புத்தகத்திலும் அதுகுறித்து எழுதினார். இந்தப் புத்தகத்தை `பாலைவனப் பூ’ எனும் தலைப்பில் எழுத்தாளர் அர்ஷியா தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
வாரிஸ் டைரியின் கதை உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சடங்கின் பெயரால் இப்படியொரு வெறிச்செயல் நிகழ்த்தப்படுவதை உலகம் அறிந்துகொண்டது. அவருடைய சுயசரிதை திரைப்படமாகவும் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது.
இன்று #MeToo இயக்கத்திற்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் போன்று, வாரிஸ் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்விதத்தில் `வாரிஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். பின்னர் அது `டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஆனது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸுக்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை அளித்துக் கௌரவித்தது.


வாரிஸ் டைரி என்ற ஒரு பெண்மணி, தன் வலியை வெளியே சொன்னதால், பெண்ணுறுப்பு சிதைவிலிருந்து பல சிறுமிகள் காப்பாற்றப்பட்டார்கள். இருந்தாலும், இந்த விவகாரத்தில் போதிய விழிப்புஉணர்வு, உலகளவில் இன்றும் இல்லை என்பதே நிதர்சனம்.
பிறப்புறுப்பு தைக்கப்பட்ட நிலையிலேயே வாழப் பழகிவிடும் பெண்களுக்குத் திருமணம் நடைபெறும்போதுதான், அந்தத் தையல் பிரிக்கப்படுகிறது. அதுவரை அந்தத் தையல் அந்தத் பெண்ணின் கற்பை அவளது புனிதத்தைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதாவது, ஐந்து வயதுச் சிறுமியாக இருக்கும் காலகட்டத்திலிருந்தே பெண்ணின் மீது கற்பு என்னும் பிம்பம் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்.
இந்தத் தருணத்தில்தான் தந்தை பெரியாரின் சொற்கள் எவ்வளவு வலிமையானவை எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ``கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது ஏன் ஆண்களுக்கு இல்லை? ஏன் எந்த இலக்கிய புராணங்களும் ஆணின் கற்பைச் சோதிக்கவில்லை அல்லது கொண்டாடவில்லை?” என்று அவர் எழுப்பிய கேள்வி இன்றும் பதில் அளிக்கப்படாமலேயே தட்டிக்கழிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையில் பெண்ணுறுப்புச் சிதைவு நடந்தாலும்ஆசியாவிலும் ஆங்காங்கே அதுபோன்ற கொடூரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் இந்த வழக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இருபாலரும் நல்ல கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `கல்வியறிவற்ற பழங்குடியின மக்களால் மட்டும் நடத்தப்படும் சடங்கு அல்ல' என்பதற்கு இது ஒரு சான்று. இந்தியாவில்கூட இப்படி ஒரு கொடுமையான சடங்கு பின்பற்றப்படுவதை, பத்திரிகையாளர் ஆரீஃபா ஜோஹாரி போன்றவர்களால் இந்த உலகம் அறிந்து கொண்டது. அவர்களால் அது சாத்தியமானது. இதையடுத்து, கடந்த வருடம் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிராக வலுவான கண்டனங்களைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்ணுறுப்பைச் சிதைப்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையாகக் கருதப்படும் எனவும் அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபை பெண் உறுப்புச் சிதைவை 2012-ம் ஆண்டு நவம்பர் 27-ல் தடை செய்த பிறகுதான், போஹ்ரா மக்களில் இந்த வன்செயல் கண்டறியப்பட்டது. உறுப்புச் சிதைவு கொடுஞ்செயல் என உணரப்படாமல் இன்னமும் நடைமுறையில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இது தெரியப்படுத்துகிறது. எந்தவொரு சட்டமும் நடைமுறையில் சாத்தியப்பட வேண்டுமெனில், அதுகுறித்த போதிய அளவு விழிப்புஉணர்வும் பிரசாரமும் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் இதுபோன்ற கொடுமையிலிருந்து ஒரு பெண்ணையாவது காப்பாற்ற முடியும். என்றாலும், அதை மனித உரிமைகளை நம்பும் அனைவரும் முன் நின்று செய்யவேண்டியது அவசியம்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஐஸ்கிரீமை நாக்கால் சாப்பிட கூடாது : பெண்களுக்கு துருக்கி விதித்த புதிய விதிமுறை


துருக்கியில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
துருக்கியில் உள்ள பக்சிலர் மாவட்டதில் மாநகராட்சி அமைப்பு ஒன்று, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு மாதம் பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வாரத்துக்கு 2 மணி நேரம் நடைபெறுகிறது.
இந்தப பயிற்சி வகுப்பில் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள விதிமுறைகள்தான் தற்போது துருக்கியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த பயிற்சி வகுப்பில் பெண்கள் நாக்கால் ஐஸ்கிரீமை சாப்பிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம்.
இதனைத் தான் தற்போது சமூக ஊடகங்களில் அந்த நாட்டு பெண்கள் ஐஸ்கிரீமை இனி நாம் உருகிய பின் தான் சாப்பிட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது மிகவும் ஆபத்தான போக்கு பெண்கள் ஐஸ்கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூற இவர்கள் யார்? நாங்கள் எப்படி இருகிறோமோ அப்படியே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று துருக்கி பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.