Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தமிழகத்தில் குளிர் அலை; எத்தனை நாள் நீடிக்கும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம்
சென்னை



தமிழகத்தில் தற்போது வீசி வரும் கடுமையான குளிர் அலை எத்தனை நாள் நீடிக்கும் என தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது வட இந்தியாவில் நிலவும் குளிர் அலையை ஈர்க்கிறது. குளிர் அலையை ஒடிசா வழியாக வங்க கடலோர பகுதி வழியாக வேகமாக ஈர்க்கிறது. இதனால் தமிழக கடலோரப்பகுதிகளிலும் தொடர்ந்து குளிர் அலையை ஈர்த்து வருகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் ‘ஆண்டி சைக்கிலோன்’ எனப்படும் எதிர் நிகழ்வு இருப்பதால் இந்த நிலை காணப்படுகிறது.


இதனால் தமிழகத்தில் கடலில் பனிப்பொழிவுடன் கூடுதலாக குளிர் அலையும் சேர்ந்து வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான குளிர் வீசுகிறது. வரும் 4-ம் தேதி வரை இந்த நிலை காணப்படலாம். தாய்லாந்து அருகே மற்றொரு புயல் சின்னம் உருவாகி அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கும் தமிழகத்துக்கும் தொடர்பு இல்லை. அதனால் தமிழகத்தில் மழை ஏதும் இருக்காது. எனினும் அந்த புயலின் போக்கை பொறுத்து தமிழகத்தில் நிலவும் குளிர் அலையின் போக்கு இருக்கும். ஜனவரி 4-ம் தேதி தான் தாய்லாந்தில் புயல் சின்னம் வலுப்பெறும். எனவே தமிழகத்தில் அதுவரை குளிர் அலை வீசவே வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் வழியாக குளிர் அலை ஈர்க்கப்படுவதை காட்டும் படம்

செயற்கைகோள் படம்
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஓவியக் கூடமாகும் உடல்!


உடல் பாகங்களில் ஆசை ஆசையாகத் தீட்டிக்கொள்ளும் டாட்டூகளையே விஞ்சிவிட்டன ‘பாடி ஆர்ட்’ எனப்படும் உடல் ஓவியக் கலை. ஒட்டுமொத்த உடலையும் வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசத்துகிறார்கள் இந்தக் காலத்து இளையோர். பார்ப்பதற்கு டாட்டூபோலவே இருந்தாலும், இது டாட்டூ வகையைச் சேர்ந்தது அல்ல. தற்காலிகமாக மட்டுமே உடல் ஓவியம் இருக்கும் என்பதால், இளையோர் மத்தியில் இதன் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உடல் ஓவியக் கலை வளர்ந்துவருவதால், வெளிநாடுகளில் ஓவியர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. மனதுக்குப் பிடித்த ஓவியங்கள் தொடங்கி விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொள்வோர் எண்ணிக்கையும் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
உடல் ஓவியத்துக்கு ஆதரவு இருப்பதுபோலவே எதிர்ப்பும் இருக்கிறது. உடலைத் திரைச் சீலையாக்கிப் பல வண்ணக் குவியல்களை உடலில் கொட்டுவதால் தோல் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால், உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவியக் கலை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

கடந்த ஆண்டு முனிஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்காக விடிவிடிய மட்டன் பிரியாணி சமைக்கப்பட்ட காட்சி

கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி பிரசாதமாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், பக்தர்கள் பிரியாணிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுக்காவில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி நடக்கிறது. மதுரையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், விருதுநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் வடக்கம்பட்டி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக வரும் 25-ம் தேதி வழங்கப்படும்.
வடக்கம்பட்டி கிராமத்தில் 3 நாட்கள் முனியாண்டி சாமி கோயிலில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் 2 ஆயிரம் கிலோ அரிசி, ஆட்டிறைச்சி பிரியாணியாக இரவு பகலாகச் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பரிமாறப்படும்.
இதுகுறித்து கோயிலின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் என். முனீஸ்வரன் கூறுகையில், ''திருவிழா அன்று 50க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் இரவு முழுவதும் பிரியாணி சமைக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்கு படைக்கப்படும். அதன்பின் காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு காலை உணவாகப் பிரியாணி வழங்கப்படும்.
பிரியாணியை காலை உணவாகச் சாப்பிடுவதே தனிச்சிறப்புதான். எந்த விதமான வேறுபாடும் இன்றி இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடலாம். பாத்திரங்களில் வாங்கிச் செல்லலாம். அன்றைய தினம் அனைத்து வயதினரும் அமர்ந்து இங்கு சாப்பிடுவதைக் காணலாம். மக்கள் மட்டுமல்ல, முனியாண்டி சாமியே பிரியாணிப் பிரியர். கடந்த ஆண்டு நாங்கள் 200 ஆடுகள், 250 சேவல்கள், 1,800 கிலோ அரிசி ஆகியவை சேர்த்து பிரியாணி செய்தோம். இந்த ஆண்டு இதைக் காட்டிலும் அதிகரிக்கும்.
வடக்கம்பட்டியில் உள்ள அனைத்து மக்களும் பிரியாணிப் பிரியர்கள். மதுரையில் உள்ள ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடந்த 70களில் தொடங்கப்பட்டது. இந்தக் கடையின் பெயரில் தென்னிந்தியா முழுவதும் ஆயிரம் கடைகள் இருக்கின்றன. முதன் முதலாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவர் தொடங்கினார். அவரின் முயற்சியால் இந்தத் திருவிழா நடந்து வருகிறது.
அதன்பின் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் எனப் பலரும் முனியாண்டி விலாஸ் கடையைத் தொடங்கினார்கள். மதுரை என்ற அடைமொழியோடு தொடங்கி நடத்திவருவதால், அனைவரும் சேர்ந்து இந்தத் திருவிழாவை நடத்துகிறோம்''.
இவ்வாறு முனீஸ்வரன் தெரிவித்தார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
காணும் பொங்கல்; கடற்கரைக் கூட்ட நெரிசலில் கணவர்கள் காணாமல் போன விநோத சம்பவம்

காணும்பொங்கல்

காணும் பொங்கலன்று கடற்கரையில் கூடும் கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க போலீஸார் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போலீஸாரே எதிர்பாராத வண்ணம் கணவர்கள் காணாமல் போன விநோத சம்பவம் நடந்தது.
காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் விசேஷமான ஒரு பண்டிகை. சென்னையைப் பொறுத்தவரை பொதுமக்கள் முக்கியமாக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் கூடுவார்கள். குழந்தைகளுடன் சந்தோஷமாக கடற்கரைக்கு வரும் சில குடும்பத்தினர் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு தேடுவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
இதைத் தடுக்க போலீஸார் குழந்தைகள் கையில் பெற்றோரின் தொடர்பு எண்ணை எழுதி பட்டையை அனுப்பும் முறையைக் கொண்டு வந்ததால் குழந்தைகள் காணாமல் போவதும், அதை தேடிக் கண்டுபிடிக்க நேர விரயமும் பெருமளவில் குறைந்துபோனது.
போலீஸார் காணாமல் போன குழந்தைகளை மீட்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நேற்று காணும் பொங்கலுக்கு குடும்பத்துடன் வந்த சில கணவன்மார்களும் காணாமல் போனது போலீஸார் மத்தியில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
நேற்று காணும்பொங்கலை ஒட்டி மெரினாவில் ஏறத்தாழ ஒரு லட்சம்பேர் வந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க கையில் பட்டை அணிவித்து அனுப்பியதால் 25 குழந்தைகள் மட்டுமே காணாமல் போய் அவர்கள் விரைவில் மீட்கப்பட்டனர். எவ்வித அசம்பாவிதாமும் நிகழாவண்ணம் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாட்டை சிறப்பாகச் செய்திருந்தனர்.
மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஜனத்திரளில் போலீஸாரே எதிர்பாராத சில நிகழ்வுகள் நடந்தன. பாதுகாப்புக்காக 30க்கும் மேற்பட்ட கண்ட்ரோல் ரூம் பூத்துகளை அமைத்துப் பணியில் இருந்தனர். அப்போது பல பூத்துகளில் பெண்கள் அழுதுகொண்டே தங்கள் கணவரைக் காணவில்லை என வந்து புகார் அளித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் போன் செய்யுங்கள் என்று கூற இருவரில் ஒருவரிடம் செல்போன் இல்லாமல் இருப்பதும், அல்லது டவர் இல்லாமல் இருப்பதும், சுவிட்ச் ஆப் ஆகியிருப்பதும் தெரியவந்தது.
போலீஸார் பூத் அமைத்துள்ளதால் அடையாளத்தைச் சொல்லி எப்படியும் கணவரை அழைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் வர போலீஸார் அவர்களிடம் அவர்களது கணவர் அடையாளம், பெயர், சட்டை கலர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு மைக்கில் அழைத்தனர். அதற்குப் பிறகு இருவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.
குழந்தைகள் காணாமல் போகும் புகார்கள்தான் எப்போதும் வரும். ஆனால் இந்த முறை கணவர்கள் காணாமல் போன புகாரும் வந்தது போலீஸாரிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி உள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண்பது என போலீஸாரிடையே குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக நகைச்சுவையுடன் பேசிக்கொண்டனர். இதனிடையே காணாமல் போன 7 கணவர்களையும் கண்டுபிடித்து போலீஸார் ஒப்படைத்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
100 ஆண்டுகளாக பொங்கலைத் தவிர்க்கும் கிராமம்; விழிப்புணர்வுக்காக 17 ஆண்டுகளாகப் பொங்கலிடும் 'தனி மனிதர்'

நாமக்கல்



மாட்டுப்பொங்கல் கொண்டாடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள்.

நாமக்கல் அருகே கடந்த 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையைத் தவிர்த்து வரும் கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் 17 ஆண்டுகளாக தனி மனிதராக பொங்கல் வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகை தவிர்க்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில் பொங்கல் பண்டிகையைத் தவிர்க்க காரணம் என்ன என்ற கேள்விக்கு கிராம மக்கள் கூறும் பதில் மக்களிடம் பண்டிகை குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதைக் காட்டியது.
பண்டிகை உற்சாகம்
சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். உழவுத்தொழிலில் பிரதானமானது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடிய இக்கிராம மக்கள் தற்போது பொங்கல் பண்டிகையை வெறுப்பதோடு, கிராமங்களில் பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் வெள்ளையடித்து, உழவுத் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கால்நடைகளுக்குப் பொங்கலிட்டு வணங்குவதையும் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் முன்னோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது சாமிக்கு வைக்கப்பட்ட பொங்கலை நாய் சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதிய எங்கள் முன்னோர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையைத் தவிர்த்தனர். மேலும், பொங்கலைத் தவிர்த்த மறு ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் கிராமத்தில் உள்ள கால்நடைகள் இறந்தன. தொடர்ந்து இதுபோல நடந்து வரும் சம்பவங்கள் நடந்ததால், பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்து விட்டோம். அதேவேளையில் கிராமக் கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம்" என்றனர்.
தன்னம்பிக்கை ஆசிரியர்
எனினும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான இளங்கோ என்பவர் மக்களிடம் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை கடந்த 16 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல இளங்கோ மட்டும் கொண்டாடினார். இவரது கொண்டாட்டத்தில் அவரது உறவினர்கள் ஒருசிலரைத் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
இதுகுறித்து இளங்கோ கூறும்போது, "பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களை வலியுறுத்தி வருகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். ஆனால், கிராம மக்கள் யாரும் வரவில்லை. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை நான் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவேன்" என்றார்.