Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
முடக்கப்படும் முன்னேற்றம்
1542197097750.png

முடக்கப்படும் முன்னேற்றம்
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து, ‘ஷிரோஸ் ஹேங்அவுட்’ எனும் காபி ஷாப்பை புதுடெல்லியில் நடத்திவருகின்றனர். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது அந்தக் கடையின் கிளை லக்னோவில் தொடங்கப்பட்டது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இந்த வகைக் கடைகளைத் திறக்குமாறு அவர் கூறினார். அதற்குள் அவரது ஆட்சி முடிந்துவிட்டது.
இந்த நிலையில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்தக் கடைகளை மூடும்படி கூறியுள்ளார். மேலும், “இப்படி காபி ஷாப் திறப்பதாலேயே, பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியாது. அவர்களுக்கு எப்படி மறுவாழ்வு அளிப்பது என எங்களுக்குத் தெரியும். இப்படி காபி ஷாப் நடத்துவது அவசியமற்றது” என்று சொல்லியிருக்கிறார். இது அங்கு வேலை பார்க்கும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளனர்.


அடிமைகளை மீட்டெடுத்தவர்
பெர்முடாவில் 1788 செப்டம்பர் 1-ம் தேதி கறுப்பினக் குடும்பத்தில் பிறந்தவர் மேரி பிரின்ஸ். அவருக்குச் சுதந்திரம் என்பது கனவிலும் சாத்தியமற்றது. 1826-ல் டேனியல் ஜேம்ஸ் எனும் முன்னாள் அடிமையை மணந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். கணவரிடமிருந்து மேரி பிரிக்கப்பட்டார்.

1808-ல் இங்கிலாந்தில் அடிமை விற்பனை தடை செய்யப்பட்டிருந்ததால் முதன்முறையாகச் சுதந்திர காற்றைச் சுவாசித்தார். அங்குப் பிழைப்புக்கு வழியில்லை. வறுமையை மீறித் தன்னைப் போன்ற அடிமைகளின் விடுதலைக்காக மேரி போராடினார்.
‘சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமை’ என அவர் முன்னெடுத்த விவாதம் பேசுபொருளானது. ‘மேரி பிரின்ஸ் எனும் மேற்கிந்திய அடிமையின் வரலாறு’ என்ற அவரது சுயசரிதை அடிமைகள் குறித்த இங்கிலாந்தின் பொதுப்புத்தியை மாற்றியமைத்தது. அதுவே எட்டு லட்சத்துக்கும் மேலான அடிமைகளை விடுவிக்கவும் வழியமைத்தது. “ஆடு, மாடுகளைப் போல நானும் என் சகோதரிகளும் அடிமைகளாக விற்கப்பட்டோம்.
அது துயரமான பிரிவு. ஒருவர் பின் ஒருவராக நாங்கள் சென்றோம். என் தாய் வெறுங்கையோடு வீடு திரும்பினார்” என்ற வரிகள் அடிமை வாழ்வின் வலிக்கும் வேதனைக்கும் சாட்சியாக இன்றும் உள்ளன. அவரது 230-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக அக்டோபர் 1-ம் தேதி சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
நம்பிக்கை தந்த நோபல் பரிசு
இயற்பியலில் பெண்களுக்குப் பெரிய அளவுக்கு அங்கீகாரம் கிடைத்ததில்லை. 2017 வரை இரண்டு பெண்களே இயற்பியலில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். முதல் நோபல் பரிசை மேரி கியூரி பெற்றார். இரண்டாவதாக 1963-ல் மரியா மேயர் பெற்றார். பெண்கள் இயற்பியலில் நோபல் வென்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த நிலையில், இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை டோனா ஸ்ட்ரிக்லேண்டு பெற்றுள்ளார். அதுவும், “இயற்பியல் துறை என்பது ஆண்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது” என்று விஞ்ஞானி செர்ன் அறிவித்த மறுநாளே நோபல் பரிசை வென்று பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்துள்ளார்.

“இயற்பியல் துறையில் இருக்கும் பெண்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் இது. இதுவரை இயற்பியலிலிருந்து நாம் விலக்கி வைக்கப்பட்டிருந்தோம். நமது பங்களிப்பு அங்கீகாரமற்றதாக இருந்தது.
இயற்பியலைப் பெண்கள் இனி வேகமாக, மிக வேகமாக முன்னெடுத்துச் செல்வார்கள்” எனப் பேராசிரியை டோனா நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசை ஃபிரான்செஸ் அர்னால்ட் வென்றிருக்கிறார்.
இந்த வெற்றி, அறிவியலில் பெண்களின் பங்களிப்பைக் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடிவரும் ஈராக்கைச் சேர்ந்த நாதீயே மூராத்துக்கு (23 வயது) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காவு வாங்கும் கடன் தொல்லை
ஈழப் போரால் ஏற்பட்ட காயத்தின் வடுவும் குருதியின் நெடியும் இன்றும் மறையவில்லை. உறவுகளையும் உடைமையையும் இழந்த மக்கள் இயல்பு வாழ்வுக்கு மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அங்கு நடைபெற்ற விழாவில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் இதைத் தெரிவித்தார்.


மேலும், அவர் பேசும்போது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்கள் ஏமாற்றாமல் எப்படியாவது கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்திவிடுவார்கள் என்பதால், அவர்களை இலக்காகக்கொண்டே கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அங்கு இயங்குகின்றன. இந்த ஆண்டு 37 பெண்கள் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 163 குடும்பங்கள் நீதிமன்றம் சென்று பிரிந்துள்ளன. 300-க்கும் அதிகமான பெண்கள் தமது பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடுகளுக்குப் பிழைப்புக்காகச் சென்றுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
சமையலறையை விட்டு வராதீர்கள்?
ஆனந்திபென் பட்டேல், குஜராத்தின் முன்னாள் முதல்வர். தற்போது மத்திய பிரதேசத்தின் ஆளுநராக உள்ளார். அவ்வப்போது ஒழுக்கம், அறிவுரை, தத்துவம் என ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது அவரது வாடிக்கை.

அந்த வகையில், மாணவிகளுக்கு அவர் அளித்த அறிவுரை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜ்கார்க் மாவட்டத்தில் ஒரு விழாவில் பங்கேற்றபோது கஸ்தூர்பா மகளிர் விடுதி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, “நீங்கள் படிப்பில் பல சாதனைகளைப் புரிந்துவருகிறீர்கள். அதே நேரத்தில் சமையலறையை விட்டு நீங்கள் வெளியே வந்து விடாதீர்கள்.
நன்றாகச் சமையுங்கள். நன்றாகச் சமைக்கக்கூடிய பெண்களுக்கு எதிர்காலத்தில் மாமியாருடன் நல்ல உறவு ஏற்பட வாய்ப்பு அதிகம். பெண்கள் தலைமுடியை வெட்டக் கூடாது.
நீளமான தலைமுடியே பெண்களுக்குக் கவுரவத்தை அளிக்கும்” என அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்! #Deepveer
பாலிவுட் திரையுலகம் மட்டுமல்ல, வடஇந்தியா முழுவதும் `டாக் ஆஃப் தி டவுனாக' இருப்பது `தீப்வீர்' திருமணம்தான். பாலிவுட்டின் டாப் ஸ்டார்ஸ் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தக் காதல் ஜோடியின் திருமணம் நவம்பர் 14-ம் தேதி இத்தாலியில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அவர்களின் `டெஸ்டினேஷன் வெட்டிங்' பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்...



வெனீஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள், லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள், பியானோ மற்றும் வயலின் கருவிகளின் பிறப்பிடம், பீட்சா, பாஸ்தா, எஸ்ப்ரெஸ்ஸோ போன்ற உணவுகளின் தலைநகரம், ஃபேஷன் புரட்சி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை ஏந்தியபடி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ரொமான்டிக் டெஸ்டினேஷன்தான் `இத்தாலி'. இங்கு, இயற்கை வளங்களோடு காதலும் பெரியளவில் மதிக்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ திருமணத்துக்காகப் பலரும் இத்தாலியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் `கோமோ' ஏரிதான் பிரபலங்களின் `நம்பர் 1' சாய்ஸ். `தீப்வீர்' ஜோடியும் தங்களின் திருமணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் `லேக் கோமோ'. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாடகர் டேவிட் பவ்வி, சின்னத்திரை நாயகி கிம் கார்தர்ஷியன் போன்றோரின் திருமணமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றன. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றது.



இவர்களின் திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட மொத்தம் 30 பேரைதான் அழைத்திருக்கிறார்கள். அதில் பாலிவுட்டிலிருந்து ஷாரூக்கான், `பத்மாவத்' இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள், நவம்பர் 21-ம் தேதி பெங்களூரிலும், 28-ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.



பாலிவுட் வரலாற்றிலேயே `தீப்வீர்' திருமண பட்ஜெட்தான் மிகவும் அதிகமாம்! தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம்! இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பர்ய முறைப்படி நடக்கவிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, அவர்களின் பாரம்பர்ய முறைப்படி `கொங்கனி திருமணமும்', மும்பையைச் சேர்ந்த ரன்வீரின் பாரம்பர்ய முறைப்படி சிந்தி திருமணமும் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

திருமணத்துக்கு வருபவர்களுக்கு `ஸ்ட்ரிக்ட் ரூல்' ஒன்றை உருவாக்கியுள்ளனர் தீப்வீர் ஜோடி. நிகழ்விடத்தில் மொபைல்போன் உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்த ரூல்! அங்கு வந்திருப்பவர்கள் முழுக்க முழுக்க இவர்களோடு ஒன்றிணைந்து கொண்டாடவேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறையை அறிவித்திருக்கிறார்களாம். ``மொபைல்களோடு, மீடியாவுக்கும் தடை'' என்று அன்புக்கட்டளையிட்டவர் தீபிகாதானாம்!

இந்நிலையில், நேற்று உறவினர்கள் சூழ மெஹெந்தி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர். இவர்களுக்கான பிரத்தியேக ஆடைகளை வடிவமைத்தவர், `விருஷ்கா'வுக்கு ஆடைகள் வடிவமைத்த சபியாசச்சி முகர்ஜி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், `தீப்வீர்' ஜோடி கைப்பட எழுதிய குறுஞ்செய்தியைக் கொடுத்திருக்கின்றனர். மெஹெந்தி விழாவைத் தொடர்ந்து, மிகவும் எமோஷனலாகிப்போன ரன்வீர், தீபிகாவையும் தன் உரையாடலால் நெகிழவைத்துள்ளார்.

மணமேடையை அலங்கரிக்க, Florence நகரத்திலிருந்து பன்னிரண்டு பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவின் ஃபேவரிட் மலரான `லில்லி' மலர்களைக்கொண்டே மேடையை அலங்கரித்துள்ளனர். பாலிவுட் மட்டுமல்லாது, உலக ரசிகர்கள் அனைவரும் `தீபிகாவுக்கு, ரன்வீர் என்ன மாதிரியான சர்ப்ரைஸ் வைத்திருப்பாரோ!' என்றபடி வெயிட்டிங்!
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
1980-களின் நடிகர்கள் சந்திப்பு: நடிப்பு, நடனம் என அசத்திய நடிகர்கள்
1980-களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் கூட்டணி, ஆண்டுதோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூட்டணியில் உள்ள நடிகர்களில் ஒருவர் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார். நடிகர்கள் ஒன்றுகூடி தங்களுடைய நட்பு, பழங்கால நினைவுகள் ஆகியவற்றைப் பேசி மகிழ்வர்.
2018-ம் ஆண்டுக்கான 80-களின் நடிகர்கள் சந்திப்பு நவம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் 22 நடிகர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சந்திப்புக்கான வடிவமொன்று உருவாக்கப்படும். அதற்கேற்ப நடிகர்கள் ஆடை அணிகலன் அணிந்து வருவர். இந்த ஆண்டு டெனிம் மற்றும் டைமண்ட்ஸ் (வைரங்கள்) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
சவேரா ஹோட்டலின் நீனா ரெட்டி, சுஜாதா முந்த்ரா, நிவேதிதா ஆகியோர் நிகழ்ச்சி நடந்த இடத்தை அலங்கரித்திருந்தனர். சோஃபா, பூக்கள், விரிப்புகள், ஜன்னல் திரைச்சீலைகள் எல்லாமே டெனிம் துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டெனிம் ஆடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.
முதலில், நடிகர்கள் 12 பேரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் சகிதமாகவும், சிலர் டெனிம் ஜாக்கட்டுகளுடனும் வந்து சேர்ந்தனர். ஜாக்கி ஷெராஃப், ட்ரெண்டியான டெனிம் ஜாக்கெட்டில் வந்து கவனம் ஈர்த்தார். பின்னர் மோகன்லால் வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவே போர்ச்சுகலில் இருந்து சென்னை வந்திருக்கிறார். அவரது பிரத்யேக சட்டையின் பின்னால் 80 என எழுதப்பட்டிருந்தது.
ஜீன்ஸ், குர்தி, டிசைனர் சேலைகள் என டெனிம் ரக ஆடைகளில் அணிவகுத்தனர் பெண்கள். பூனம் திலான், மும்பையில் இருந்து அனைவருக்கும் பரிசுப்பொருள் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு நடிகரின் புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக செல்போன் கூடு ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார்.
பின்னர் நடிகர்கள் அனைவரும் டம்ப் சராட்ஸ் விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. நரேஷ், சத்யராஜ், ஜெயராம் ஆகியோர் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முக்கியமான தருணங்களை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசனுக்கு மரியாதை செய்யும் வகையில் சில காட்சிகள் நடித்தனர்.
‘விஸ்வரூபம்’ படத்திலிருந்து ஒரு காட்சியை ஜெயராம் நடித்துக்காட்டி கைதட்டு வாங்கினார். பெண்கள் ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ‘இன்கம் இன்கம்’ பாடலுக்கு ஆடினர். மோகன்லால், கேரள படகுப்போட்டி போல் பாரம்பரிய பாடலுக்கு ஏற்ப படகுப்போட்டி மாதிரியை நடத்தினார்.
ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ சுந்தர், பூர்ணிமா, லிஸி லக்‌ஷ்மி ஆகியோர் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தனர். பின்னிரவில் கேக் வெட்டிக் கொண்டாடினர். 2019-ல் 10-வது ரீயூனியன் நடைபெறவிருக்கிறது.

1542208874441.png
 
  • Like
Reactions: kayal vizhi