Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
காருக்குள் புகுந்து பீதி ஏற்படுத்திய நாகப் பாம்பு
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் காரின் முன்பக்க இயந்திரப் பகுதியில் புகுந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
திருப்பூர் மாநகர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஸ்ராஜ். இவர், பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 8-ம் தேதி உறவினர்களுடன் திருப்பூரில் இருந்து பிஎம்டபிள்யு கார் மூலமாக மதுரைக்கு சென்றுள்ளார்.
வெள்ளகோவில் அருகே முத்தூர் வட்டக்கரை பகுதியில், காரின் முன்பக்கமாக இயந்திரப் பகுதியை ஒட்டி பாம்பின் தலை காணப்பட்டது. இதனை கவனித்த விக்னேஸ்ராஜ், வட்டக்கரையில் காரை நிறுத்திவிட்டு முன்பக்க இயந்திரப் பகுதியை திறந்துபார்த்தார். அப்போது, பாம்பு எதுவும் தென்படவில்லை.
இதையடுத்து, வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் காரை சோதனையிட்டு பாம்பு இல்லை என தெரிவித்து சென்றுவிட்டனர். இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி கோவை பிஎம்டபுள்யு கார் சர்வீஸ் ஸ்டேசனுக்கு சென்று விக்னேஸ்ராஜ் பார்த்துள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது:
பாம்பு எங்கு ஏறியது என்று தெரியவில்லை. காரின் இயந்திரப் பகுதியில் மழை நீர் வடிவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ஃபில்டர் வழியாக பாம்பு உள்ளே புகுந்துள்ளது. கார் ஓடியதால் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட சூட்டின் காரணமாக தலையை மட்டும் காண்பித்துள்ளது. ஆனால், உடலை முழுமையாக வெளியே எடுக்க முடியவில்லை. அதனை பார்த்த பின்புதான் இயந்திரப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
கடந்த 9-ம் தேதி காலை கோவை யில் உள்ள பிஎம்டபிள்யு சர்வீஸ் ஸ்டேசனுக்கு காரை எடுத்துச் சென்றேன். அங்கு காரை இயக்கிய போது இயந்திரப் பகுதி சூடாகத் தொடங்கியதும் பாம்பின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இயந்திரப் பகுதியின் ஒவ்வொரு பாகமாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிக்கும் சஞ்சய் என்பவர் வரவழைக் கப்பட்டார். அவரும் லாவகமாக பாம்பை பிடித்தார். சுமார் இரண் டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின், பாம்பை பிடித்து வனப்பகுதி யில் விடுவித்தனர். அதற்குள் காரில் இருந்து பாம்பு அப்புறப் படுத்தப்படும் வீடியோ வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் வைரலாக பரவிவிட்டது' என்றார்.
‘இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது’
கார் நிறுவனத்தினர் கூறும்போது, ‘காரின் இயந்திரப் பகுதியில் நாகப்பாம்பு புகுந்ததை அகற்றிவிட்டோம். ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை கார் வாங்கினாலும், காருக்குள் பாம்போ மற்றவையோ புகாத வண்ணம் தான் பொதுவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. காருக்குள் உள்ள இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது. காரை நிறுத்தியிருந்த இடத்தில் எங்காவது பாம்பு ஏறி இருக்கலாம். அனைத்து வகை கார் ஓட்டுபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை' என்றார்.
1542196269470.png
 
  • Like
Reactions: kayal vizhi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
12 நாள் குழந்தையை தாயிடமிருந்து பறித்துச் சென்ற குரங்கு: கடித்துக் கொன்றதால் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் பாலூட்டிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து பிறந்து 12 நாட்கள் மட்டுமே நிறைந்த பச்சிளங்குழந்தையை பறித்துச் சென்ற குரங்கு, அவர் முன்பு கடித்துக் கொன்றது.
ஆக்ரா நகர் விஜய நகர் பகுதி மொஹல்லா கச்சேரா பகுதியில் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், வீடுகளில் ஜன்னல் வழியாகப் புகும் குரங்குகள் வீட்டில் இருக்கும் பொருட்களை உணவுப்பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. துணிகள் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால், குரங்குகளுக்குப் பயந்து வீட்டு ஜன்னல்களில் மக்கள் இரும்பு வளையடித்து வைத்துள்ளனர்.
அதிலும் இப்பகுதியில் உள்ள குரங்குகள், பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து தாக்கியும், கடித்தும் வருவதால், பெண்களும், குழந்தைகளும் வீட்டு மாடிக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த சன்னி என்ற பெண் நேற்றுமாலை வீட்டுவாசலில் அமர்ந்து தனது பச்சிளங் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தார். இந்தக் குழந்தை பிறந்து 12 நாட்களே ஆகி இருந்தது.
அப்போது திடீரென வந்த குரங்கு ஒன்று, சன்னியிடம் இருந்து அவரின் பச்சிளங்குழந்தையை பறித்துக்கொண்டு ஓடியது. தன் கைகளில் இருந்து குழந்தையை பறித்துக்கொண்டு குரங்கு ஓடியதால், செய்வதறியாது சன்னி திகைத்து கூச்சலிட்டார்.
இதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, அந்தக் குரங்கை துரத்திச் சென்றனர். ஆனால், யாருடைய கைகளிலும் சிக்காமல் குழந்தையைக் தூக்கிக்கொண்டு ஓடிய குரங்கு பல்வேறு இடங்களுக்குத் தாவியது. இதனால், சன்னியும், அவரின் குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில், சன்னியின் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டின் மாடியின் ரத்தக்கறையுடன் குழந்தை கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தையைக் குரங்கு கடித்ததால், ரத்தம் அதிகமாக வெளியேறி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், மருத்துவரின் வார்த்தையை ஏற்காத குடும்பத்தினர் மற்றொரு மருத்துவமனைக்குக் குழந்தையை தூக்கிச் சென்று பரிசோதித்தனர். ஆனால், குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து சன்னியும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டுக் கதறினார்கள்.
இதையடுத்து, விஜயநகர் பகுதியில் மிக அதிக அளவில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சூழல் ஆர்வலர் ஷர்வன் குமார் கூறுகையில், ‘‘குரங்குகள் தற்போது மிகவும் ஆவேசமாக மக்களிடம் நடக்கத் தொடங்கியுள்ளன. குரங்குகளின் இயற்கையான குணம் மறைந்துவிட்டது. மரங்கள், செடிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. மக்கள் குரங்குகளை பார்த்தால் அச்சப்பட்டு வெளியே செல்ல முடியாமல் இருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் வீட்டின் மாடிக்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
 
  • Like
Reactions: kayal vizhi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
'மிதக்கும் குடிசைகளில்'' நெசவாலைகள்: மணிப்பூர் ஏரியில் ஒரு வித்தியாசமான முயற்சி
1542196493371.png


வடகிழக்கு மாநிலங்களிலேயே முதன்முறையாக வித்தியாசமான ஒரு முயற்சியாக மணிப்பூர் மாநிலத்தில் ''தண்ணீரில் மிதக்கும் கைத்தறி குடிசைகள்'' தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான விழா இன்று பிஷ்னபூர் அருகிலுள்ள லோக்தாக் ஏரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 மிதக்கும் குடிசைகளை திரிபுரா மாநில வனம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மேவார் குமார் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து ஜவுளி மற்றும் கைத்தறி இயக்குநரகத்தின் இயக்குநர் கே.லாம்லி காமேய் தெரிவிக்கையில்,
'' ஏரிகளில் நெசவுலைகளுக்கான குடிசைகள் அமைத்துள்ளோம். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். மிதக்கும் இக்குடிசைகளில் பெண்கள் ஈடுபடக்கூடிய கைத்தறி நெசவுப்பணிகளை செயல்படுத்தி பார்க்க உள்ளோம்.
இம்முயற்சி வெற்றிபெற்றால் மேலும் பெரிய அளவில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கவும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதும்தான் இச் சோதனை முயற்சிகளுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
  • Like
Reactions: kayal vizhi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
கவனம்...துப்பினால் துடைக்கணும்; புனே நகராட்சி புதிய எச்சரிக்கை
1542196569847.png

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், துப்பியவர் அந்த இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று புனே நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
புனே நகராட்சியின் இந்த உத்தரவால் புனே நகரவாசிகள் புகையிலை, பான்மசாலாவை வாயில்போட்டு கண்ட இடங்களில் எச்சிலை துப்பமுடியாமல் திணறி, உரிய இடங்களில் தேடி துப்புகின்றனர்.
வடமாநிலங்களில் அரசு அலுவலக சுவர்கள் மட்டுமின்றி பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் பான்மசாலா, பாக்கு, புகையிலை ஆகியவற்றை வாயில் மென்று கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு உருவாகி புனே நகராட்சிக்குச் சுத்தம் செய்வது பெரும் தலைவலியை ஏற்படுத்த வந்தது.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் பொது இடங்களிலும், சுவர்களிலும் எச்சில் துப்பி அசுத்தம் செய்பவர்களுக்கு 150 ரூபாய் உடனடி அபராதமும், குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடாமல் சாலையில் வீசுபவர்களுக்கு ரூ.180 அபராதமும், பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையில், கடந்த 3-ம் தேதி முதல் 156 பேர் வரை சிக்கினார்கள். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனாலும், அபராதம் மட்டும் வசூலித்தால் போதாது, துப்பியவர்களே சுத்தம் செய்யும் நடவடிக்கையை புனே நகராட்சி நிர்வாகம் கடந்த 5-ம் தேதி முதல் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது குறித்து புனே நகராட்சி அதிகாரி தியானேஸ்வர் மோலக் நிருபர்களிடம் கூறியதாவது:
புனே நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை குறைக்கும் முயற்சியில் இறங்க அபராதம் விதித்தோம். ஆனால், அபராதம் விதிப்பதைக் காட்டிலும், இன்னும் கடுமையாக்க எச்சில் துப்புபவர்களே அந்த இடத்தைச் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், சுத்தம் செய்பவர்களை புகைப்படம் எடுத்து பொது இடங்களிலும் ஒட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்பி அசுத்தம் செய்வதை தவிர்ப்பார்கள்.
முதல்கட்டமாக பீபிவாடி, அனுத், ஏரேவாடா, கசாபா, கோலே சாலை ஆகிய பகுதிகளில் அமல்படுத்தி இருந்தோம், இனிமேல் இந்த விதிமுறை 15 வார்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் 15 சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
கடந்த 8 நாட்களில் 156 பேர் பொது இடங்களில் எச்சில் துப்பி சிக்கிக்கொண்டார்கள். அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. புனே நகரைச் சுத்தமாக வைத்து ஸ்வச் சர்வேயில் முதலிடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
  • Like
Reactions: kayal vizhi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பொருள் பழசு சித்திரம் புதுசு


வீட்டுப் பாடத்தை எழுதிக்கொண்டிருக்க பக்கத்தில் அமர்ந்து புள்ளிக்கோலம் போட்டுப் பழகிக்கொண்டிருக்கிறார் எண்பது வயதான ஸ்ரீரங்கா. சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் பகுதியில் வசித்துவரும் இவர், தள்ளாத வயதிலும் நுணுக்கமான அப்லிக் கலையைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.
புத்தாண்டு பிறந்துவிட்டால் மதிப்பிழக்கும் பொருட்களில் காலண்டருக்கு முதலிடம். ஆனால், கடவுள் உருவங்கள் அச்சிடப்பட்டிருக்கும் பழைய காலண்டர்கள்தாம் ஸ்ரீரங்காவின் அப்லிக் வேலைக்கு ஆதாரமாக உள்ளன. அப்லிக் கலைக்குத் தேவையான பொருட்களைப் பலரும் கடைகளில் தேடித் தேடி வாங்குவார்கள்.
ஆனால், இவரோ இதுவரை எந்தப் பொருளையும் கடைகளில் வாங்கியது கிடையாது. வீட்டில் வீணாகும் கிஃப்ட் கவர், அறுந்த மணிகள், குழந்தைகளுடைய பழைய துணியில் உள்ள பட்டன்கள், லேஸ், ரிப்பன், கம்பளித் துணி, பழைய புடவைகளின் ஜரிகை ஆகியவற்றைக் கொண்டு கைவினைக் கலையில் அசத்துகிறார்.
“நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த பெண்ணு. இப்போ மாதிரி அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கேட்டதையெல்லாம் வாங்கித்தரும் பழக்கமில்லை. அதனால் வீட்டுல என்ன பொருள் கிடைக்குமோ அதைவைத்தே கைவேலைப்பாடுகளைச் செய்வேன். கைவினைக் கலை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட என்னுடைய அம்மாதான் காரணம். அவங்ககிட்ட இருந்துதான் புள்ளிக் கோலம் போடக் கத்துக்கிட்டேன்.
பிறகு ரங்கோலி, சமையல், நாட்டு மருந்து, ஓவியம் வரைவது, கைவினைப் பொருட்களைச் செய்வதுன்னு படிப்படியா பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அதேபோல் எனக்கு எதையும் வீணாக்கப் பிடிக்காது. பிள்ளைகளுக்குப் பரிசாக வரும் பொருட்களைச் சுற்றியிருக்கும் காகிதங்களைக்கூடப் பத்திரமாக எடுத்துவைத்து பின்னர் அப்லிக் வொர்க் செய்யும்போது பயன்படுத்திக்கொள்வேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் அப்லிக் வொர்க் செய்திருக்கேன்” என நினைவுகூர்கிறார் ஸ்ரீரங்கா.
தற்போது ஸ்ரீரங்காவைப் பின்பற்றி அவருடைய பேத்திகளும் ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மறுசுழற்சி பற்றி இன்றைக்கு நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அது குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத காலத்திலிருந்தே வீணாகும் பொருட்களைக் கொண்டு வியப்பான சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீரங்கா. அதை அடுத்த தலைமுறைக்கும் அவர் பயிற்றுவிப்பது பாராட்டுக்குரியது தானே!