Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இத்தாலியில் மூன்று குழந்தை பெற்றால் இலவச நிலம்
இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள், “இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்கள் தொகையை உயர்த்தவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி இத்தாலியில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு இலவச மகா நிலம் அளிக்கப்படும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரத்தின்படி, சுமார் மூன்று லட்சம் குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். மேலும் இவர்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2% குறைவு.
எனவே குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
காதலுக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசி
சாமானியக் குடிமகனான தனது காதலரைக் கரம் பிடிக்க அரச குடும்பத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் ஜப்பான் இளவரசி அயாகோ. ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் கேய் மோரியாவைக் காதலித்தார். ஜப்பான் அரச குடும்பத்தின் விதிமுறைகளின்படி, சாமானியக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்ள இளவரசிகள் விரும்பினால் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியாக வேண்டும். தன் காதலில் உறுதியாக நின்ற அயாகோ, விதிமுறையைப் பின்பற்றி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். டோக்கியோவில் உள்ள மெய்ஜி புனிதத்தலத்தில் திங்கள் கிழமை நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
1542195825314.png
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
20 ஆவிகளுடன் வாழ்ந்தேன்... ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்: பிரிட்டன் பெண்மணியின் வெலவெலத்துப் போகச்செய்யும் அடம்
பிரிட்டனைச் சேர்ந்த அமீதிஸ்ட் ரெல்ம் என்ற 30 வயது பெண்மணி தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு வைத்து கொண்டுள்ளதாகவும் அதில் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சந்தித்த ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தன் ‘பேய் ஆசை’யை வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 ஆவிகளுடன் தான் உடலுறவு கொண்டதாக இந்தப் பெண் கூறியதும் பலருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவர் தன் எதிர்காலக் கணவருக்குத் தெரியாமல் 20 ஆவிகளுடன் தான் உறவு கொண்டதாகத் தெரிவித்தது பலருக்கும் தூக்கிவாரிப்போட்டது.
இதில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சந்தித்தா ஆவியுடன் தான் விமானத்தில் உறவு கொண்டதாகவும் அவர் சமீபத்தில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது திருமண ஆசையை அந்த ஆவி வெளிப்படுத்தியது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அமீதிஸ்ட் ரெல்ம் கூறியதில் பலரும் வெலவெலத்துப் போயுள்ளனர்.
பிரிட்டன் டேப்லாய்ட் ஒன்றுக்கு அவர் கூறும்போது, “இந்த ஆவிக்கு முழங்கால்கள் இல்லை, ஆனால் முதல் முறையாக அவர் என்னிடம் பேசினார், அவர் குரல் அழகானது, ஆழமானது, செக்சியானது” என்று தெரிவித்த போது இவர் விளையாடுகிறாரா, சீரியஸகாப் பேசுகிறாரா என்ற குழப்பமே பலருக்கும் எஞ்சியுள்ளது.
இவர்களது இந்த உறவை குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனராம். இதனையடுத்து கிறித்துவ முறைப்படி அல்லாத பழங்குடி முறையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.
சாதாரண மனிதர்களை விட இவ்வகை ஆவிகளினுடனான தொடர்பு தனக்கு உண்மையான உற்சாகத்தை அளிப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
1542195920210.png
 
  • Like
Reactions: kayal vizhi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்
நத்தையை உண்பது - குறிப்பாக மூல வியாதிக்காரர்கள் மருந்தாக உண்பது - நம்மூரில் உள்ள வழக்கம். ஆனால், முறையாகச் சமைக்காமல் இறைச்சியை உட்கொண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு உதாரணம் ஆகியிருக்கிறார் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர்.
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பல்லார்டு ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் இறந்திருக்கிறார். அப்போதே, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொஞ்சம் சரியானவர் பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நீண்ட போராட்டத்துக்குப் பின் சமீபத்தில் காலமானார். நத்தையின் உடலில் இருந்த நுரையீரல் புழுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது!
1542196051725.png
 
  • Like
Reactions: kayal vizhi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அடடா என்ன திறமை; போலீஸாரே வியந்த ’டிப்டாப்’ திருடன்: ஏடிஎம்மில் இப்படியும் உங்கள் பணம் பறிபோகலாம்
ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைத்திருப்பி பணத்தை அபேஸ் செய்துவந்த திருடனை பிடித்த போலீஸார், அந்த நபர் திருடிய விதத்தைப் பார்த்து வியந்துபோயுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பபவர்களின் பணம் திருடப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வங்கியிலிருந்தும், வாடிக்கையாளர்கள் சார்பாகவும், சென்ட்ரல் ரயில்வே போலீஸுக்கும், அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்திற்கும் அதிக அளவு புகார்கள் வந்தது.
இதையடுத்து போலீஸார் புகார் கூறியவர்கள் பணம் எடுத்த நாட்களில் அந்தந்த ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து சோதனையிட்டனர். அப்போது அனைத்து சம்பவங்களில் ஒரு நபர் இருப்பது தெரியவந்தது. அனைத்து சம்பவங்களிலும் இந்த இளைஞர் எப்படி அங்கு இருக்கிறார் என்று குழப்பமடைந்த போலீஸார் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இளைஞர் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தினர்.
சிலர் எங்களுக்கு தெரியவில்லை, ஞாபகமில்லை என்று தெரிவித்தனர், சிலர் ஆமாம் சார் இவர்தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தார் என்று தெரிவித்தனர். சிலர் இவர்தான் சார் பணம் எடுக்கும்போது ஏடிஎம் மெஷின் வேலை செய்யவில்லை என்று கூறி பக்கத்து மெஷினில் எடுக்கச்சொன்னார் என்று தெரிவித்தனர்.
போலீஸார் அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்து சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் எடுக்கும்போது ஏதோ கூறுவதும், பின்னர் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டுச் செல்வதும் தெரியவந்தது.
போலீஸார் அந்த இளைஞரை பிடிக்க வலைவிரித்து காத்திருந்தனர். வழக்கம்போல் ஏடிஎம்மில் தனது கைவரிசையை காட்ட வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் சிக்கினார். அவரைப்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் கோபி கிருஷ்ணா என்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் கூறியது போலீஸாரை திடுக்கிட வைத்தது. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று சிரித்துக்கொண்டனர். ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை அவர்கள் அறியாமலே நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் எடுத்த அந்த நபர் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் விமானத்தில் சொந்த ஊருக்கு பறந்து விடுவாராம்.
எப்படி பணத்தை நூதன முறையில் ஏமாற்றி எடுப்பேன் என்பதை அந்த நபர் நடித்து காட்டியுள்ளார். டிப்டாப்பாக உடையணிந்து இரண்டு எந்திரங்கள் உள்ள ஏடிஎம்மில் சென்று நின்றுக்கொள்வார். பணம் எடுக்க வருபவர்கள் ஒரு எந்திரத்தில் கார்டை சொருகி வெளியே எடுத்தவுடன் இவர் அவசரமாக குறுக்கிட்டு சார் இந்த மெஷின் வேலை செய்யவில்லை அந்த மெஷினில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவார்.
பணம் எடுக்க வந்தவர் நன்றி கூறிவிட்டு அடுத்த எந்திரத்தில் கார்டை நுழைத்து பணம் எடுப்பார். இவர் அவர்கள் பதிவு செய்யும் சீக்ரெட் நம்பரை கவனித்து வைத்துக்கொண்டு டக்கென்று அந்த நம்பரை முதலில் கார்டை நுழைத்த எந்திரத்தில் அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை எடுத்துவிடுவார். இதில் பல நேரம் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். கணக்கில் கணிசமாக பணம் வைத்துள்ளவர்கள் பணத்தை அழகாக சுருட்டிவிடுவார்.
இப்படி செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பல ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பல வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் எடுப்பார். இப்படி கணிசமாக சேரும் பணத்தில் சொந்த ஊருக்கு விமானத்தில் சென்று வருவார். நூதனமான முறையில் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
பணம் எடுக்கும்போது அருகில் யாரையும் நிற்க அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் பணம் பறிபோக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர். நூதனமான முறையில் பணத்தை திருடிவந்த நபர் பெரியமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
1542196166844.png
 
  • Like
Reactions: kayal vizhi