Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பேட்ட' படத்தில் ரஜினியின் இன்னொரு வெர்ஷன் வேற லெவல்ல இருக்கும்: பாபி சிம்ஹா


'பேட்ட' படத்தில் ரஜினியின் இன்னொரு வெர்ஷன் வேற லெவல்ல இருக்கும் என்று பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள பாபி சிம்ஹாவின் பேட்டியின் கேள்வியும் பதிலும்:
ரஜினியுடன் ஒன்றாக நடித்த அனுபவம்?
இதைவிட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல. தலைவர் கூட நான் பிரேம்ல இருக்குறது பெரிய சந்தோஷம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி. கடவுளுக்கும் நன்றி.
’பேட்ட’ ரஜினி பற்றி?
நீங்க படம் பார்க்கும்போது தெரியும். படம் நிச்சயமா வேற மாதிரி இருக்கும். தலைவரோட இன்னொரு வெர்ஷன் வேற லெவல்ல இருக்கும். அவர் கூட நிற்கும்போதே ஒரு மாதிரியான பயம் இருக்கும்.
ஒரு ரஜினி ரசிகனாக எப்படி உணர்கிறீர்கள்?
எப்போதுமே நான் ரஜினி ரசிகன்தான். எப்போதெல்லாம் அவரை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் நான் ஒரு ரஜினி ரசிகனாகத்தான் உணர்வேன்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பேட்ட' பற்றி ஒரு வார்த்தை? - கார்த்திக் சுப்பராஜ் பதில்


'பேட்ட' பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள் என்பதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிலளித்துள்ளார்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ் பேட்டியின் கேள்வியும் பதிலும்:
'பேட்ட' படம் ரஜினி ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட படமாக இருக்கும்?
இது ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர்களால் எடுக்கப்பட்ட படம்.
ரஜினியுடனான தருணங்கள் பற்றி?
நிறைய இருக்கிறது. அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டு போய் பேசுவேன். சிறந்த தருணம் என்றால் கதையை கேட்ட 2 நிமிடத்தில் ’இந்த படம் நாம்தான் பண்றோம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அந்த தருணம் என்னால் மறக்க முடியாதது.
'பேட்ட' பற்றி ஒரு வார்த்தை?
’தலைவரிசம்’
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு.
பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நியாபகம் வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக் கொண்டு செல்கிறது.
ஆனால், ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என்றார்.
விஜய் சேதுபதி தற்போது ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'நிமிர்', 'Mr. சந்திரமெளலி', 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
இன்று (மார்ச் 27), அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம் பெறவேண்டும் என்று திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியுள்ளது விஜய் டிவி.
‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய கே.எம்.சர்ஜுன், நயன்தாராவை வைத்து ‘ஐரா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.
படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். நாளை (மார்ச் 28) படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், ‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது. ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக நயன்தாரா படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது அமேசான் ப்ரைம் வீடியோ.