Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நான் ‘ராட்சசன்’ அல்ல! - சரவணன் பேட்டி


அறிமுகக் கதாநாயகர்களைவிட வில்லன்கள் பெயரெடுப்பது எப்போதாவதுதான் நிகழும். அண்மையில் வெளியான ‘‘ராட்சசன்’ படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டிருக்கிறார். சைக்கோ கொலையாளியாக அந்தப் படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ படப்புகழ் சரவணன். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
உங்கள் பின்னணி என்ன?
அரியலூர்தான் எனக்குச் சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கே என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மெடிக்கல் ஷாப்பில் 7 ஆண்டுகள் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு துரத்தியபோது சினிமாவுக்குச் செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடகக் கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.
முதல் சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
சென்னையில் நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ற கதைகளைத் தேடினேன். நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன. அப்படித்தான் ‘நான்’ சரவணன் ஆனேன்.
இப்போது ‘நான்’ போய் உங்கள் பெயருக்கு முன்னால், ‘ராட்சசன்’ வந்துவிட்டது இல்லையா?
ஆமாம்! ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநர் ராம்குமாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரைப் போய்ப் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார்கள். பிறகு பார்ப்பதற்கு நான் ஆங்கிலோ இந்தியன்போல இருந்ததால் என்னை வில்லன் கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்தார்.

அந்த சைக்கோ பாத்திரத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்ததோ?
படத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடையைக் குறைக்கச் சொன்னார்கள். இந்தப் படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். தயா என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்தக் கலையைக் கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக சூட்டிங் இருக்கும் நாளில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.
நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் உங்கள் உண்மையான முகம் ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டதா?
உண்மையில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. படத்தில் வசனம் இல்லை என்றும் நான் வருந்தவில்லை. ‘ராட்சசன்’ படத்தில் சைக்கோ கதாபாத்திரம்தான் மிக முக்கியமானது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். தவிர, இந்தப் படத்தில் சரவணன் முகம் தேவைப்படவில்லை. ஆங்கிலோ இந்தியத் தாய் – மகன் உருவம்தாம் தேவைப்பட்டது. படத்தைப் பார்த்து யார் இந்த வில்லன் என்று ரசிகர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். நான் நினைத்ததுபோலவே நடந்தது. அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சிதான்.
இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது?
என்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படம் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி, அஜித் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைலா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன்.
சரவணன் நிஜத்தில் எப்படி?
நிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போதும் சென்டிமெண்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.
‘ராட்சசன்’ வரவேற்புக்குப் பின்னர் புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளனவா?
இரண்டு பட வாய்ப்புகள் வந்துள்ளன. இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
என்றும் மின்னும் ‘தங்கப் பதக்கம்’

காவல் துறை அதிகாரியின் கடமை உணர்வை மையப்படுத்தி மகேந்திரன் கதை ஒன்றை எழுதினார். மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அந்தக் கதையை நாடகமாக அரங்கேற்றினார் செந்தாமரை.
‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பில் அரங்கேறிய நாடகம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. சபாக்களில் இந்த நாடகத்துக்கு ‘முதல் மரியாதை’ கிடைத்தது. ஒரு முறை சென்னை அண்ணாமலை அரங்கில் நாடகத்தைப் பார்த்த சிவாஜி, நாடகக் கதையில் தன்னைத் தொலைத்தார். தனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனது நாடக மன்றத்தின் மூலம் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தை அரங்கேற்ற விரும்பினார்.
தனது விருப்பத்தை செந்தாமரையிடம் தெரிவித்த சிவாஜி, கதையின் உரிமத்தை சிவாஜி நாடக மன்றதுக்கு வாங்கிக்கொண்டார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘தங்கப் பதக்கம்’ என்ற பெயரில் சிவாஜி அரங்கேற்றினார். காவல் துறை அதிகாரியாகத் தோன்றிய சிவாஜி கதாபாத்திரத்துக்குக் காவல் துறை அதிகாரி அருளனின் நடை, உடை, பாவணைகளைத் தனது ஒப்பனையில் காட்டினார்.
சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றிட, சென்னையில் பிரபலமாக இருந்த அத்தனை சபாக்களும் தங்கள் அரங்கில் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தை அரங்கேற்ற போட்டா போட்டி போட்டன. பிரபல அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், திரையுலகக் கலைஞர்கள் ஆகியோர் சிவாஜி காட்டிய கம்பீரத்தில் மிரண்டுபோனார்கள்.
சிவாஜியின் நடிப்பில் மைல்கல்லாய் ஆவணம் கண்ட ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாகத் தயாரிக்க சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் முடிவு செய்தது. ‘வியட்நாம் வீடு’, ‘புதிய பறவை’க்குப் பின் சிவாஜி கலைக்கூடம் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாக்க கையில் எடுத்தது. படத்தை பி. மாதவன் இயக்கினார். 01-06-1974 அன்று படம் வெளியானது. படம் பெரும் வெற்றி பெற்றது. ‘தங்கப் பதக்க’த்தின் வெற்றி விழாக்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்றன.
‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘கட்டபொம்மன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற நாடகங்கள் சிவாஜியின் நடிப்பில் திரைப்படங்களாக வெளிவந்தபோது திரைப்பட வரலாற்றில் சாதனைகளாகத் தடம் பதித்தன. அந்த வரிசையில் ‘தங்கப் பதக்க’மும் இடம் பிடித்தது.
காவல் துறைக்கு அங்கீகாரம் கொடுத்த படமாக ‘தங்கப் பதக்கம்’ திகழ்ந்ததால், துறை சார்பில் நடைபெற்ற காவல் துறை விழாக்களில் ‘தங்கப் பதக்கம்’ அதிக அளவில் திரையிடப்பட்டது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திரை விமர்சனம்: திமிரு புடிச்சவன்

போலீஸ் ஏட்டாக பணி யாற்றுபவர் விஜய் ஆண்டனி. தன் தம் பியை போலீஸ் அதிகாரி யாக்க வேண்டும் என்று வெறித் தனமாக பயிற்சி அளிக்கிறார். இது பிடிக்காமல் வீட்டைவிட்டு ஓடும் அவன், சென்னைக்கு சென்று குற்றவாளியாக உரு வெடுக்கிறான். பதவி உயர்வில் எஸ்.ஐ.யாகி, சென்னை வரும் விஜய் ஆண்டனி, தம்பியை என்கவுன்ட்டரில் கொன்றுவிட்டு இன்ஸ்பெக்டர் ஆகிறார். போலீ ஸார் செய்யும் தவறுகளை நிறுத்தி, அவர்களையும் திருத்தி, காவல்துறை மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்துகிறார்.இதற்கிடையில், தன் தம்பிபோல பல சிறுவர்களை மூளைச் சலவை செய்து, குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவது பெரிய ரவுடியான சாய் தீனா என்று தெரிகிறது. சிறார் குற்றவாளிகளை திருத்த முடிவெடுக்கிறார். அதில் சாதிக் கிறாரா என்பது மீதிக் கதை.
வழக்கமான போலீஸ் - ரவுடி கதையில் சிறார் குற்றவாளிகள், அவர்கள் குற்றச் செயல்களுக்கு ஈர்க்கப்படுவதற்கான காரணங் கள் ஆகியவற்றை சேர்த்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் கணேஷா. தெருவுக்கு நாலு சிறுவர்கள் தடம்மாறி திரியும் இந்த காலத்தில், இது அவசிய மான களம்தான். அவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று குரல் எழுப்பா மல், புதுவிதமாக சிந்தித்திருப் பதும் பாராட்டுக்குரியது.
இவ்வாறு, கதை அளவில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல இருந்தாலும் திரைக்கதை, பட மாக் கம் சொதப்பல். நாயகனின் நோயைப் பற்றி தெரிந்துகொண்ட தாலேயே காவல்துறை அதிகாரி கள் எல்லோரும் திருந்தி விடுகிறார்கள். இதுபோல, அழுத்த மான காரணங்கள், வலுவான திருப்பங்கள் இல்லாமல் பல காட்சிகள் நகர்கின்றன.
சிறார்களில் ஒருவனது அப்பா முருக பக்தர், இன்னொருவனின் அப்பா முஸ்லிம், கதாநாயகியின் அப்பா கிறிஸ்தவர். இது மதநல் லிணக்கத்தை காட்ட வேண்டும் என்பதற்கான திணிப்பு என அப்பட்டமாக தெரிகிறது.
சாக்கடை அடைப்பை போலீஸே இறங்கி நீக்குவது, நீண்ட வசனம் பேசி மக்களை திருத்துவது, கண்ணியமாக நடந்துகொண்டு, மக்களின் நம் பிக்கையைப் பெறுவது போன்ற காட்சிகள், படத்தில் காமெடி இல் லாத குறையைத் தீர்க்கின்றன.
பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் இருக்கும் தலைமைக் காவலரை தேசியக்கொடி ஏற்ற வைத்து கவுரவப்படுத்துவது, முருகனுக்கு மாலை போட்டிருக் கும் விஜய் ஆண்டனி யாரை யும் அடிக்க முடியாத நிலையில், ஆசிட் தாக்குதலில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது என்று ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. திருநங்கை கதாபாத்திரத்தை காவல்துறை அதிகாரியாக கண்ணியமாக சித் தரித்து, படம் முழுவதும் அவருக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும் சிறப்பு.
இதுவரை கதையின் நாயக னாக நடித்துவந்த விஜய் ஆண் டனி, இந்த படம் மூலம் தன்னை ஒரு மாஸ் நாயகனாக முன் னிறுத்த முயற்சித்திருக்கிறார். நடிக்கத் தேவையில்லாத காட்சி கள், சண்டைக் காட்சிகளில் ஓரளவு தேறியும் விடுகிறார். சென்டி மென்ட், உணர்ச்சிவசப்பட்டு வச னம் பேசும் இடங்களில்தான் பார்வையாளர்களை சோதிக்கிறார்.
சென்னை தமிழ் பேசும் காவல் அதிகாரியாக கதாநாயகி நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனியை காதலித்துக்கொண்டே, சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவ ருக்கு பல்பு கொடுத்தும், சில இடங்களில் பல்பு வாங்கியும் ரசிக்க வைக்கிறார்.
விஜய் ஆண்டனியின் தம்பி உள்ளிட்ட இளம் சிறார்களின் மிகை நடிப்பு மகா எரிச்சல்.
விஜய் ஆண்டனி இசையில் ‘நக நக நக’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. முருகக் கடவுளுக்கு இணையாக சித் தரிக்கப்படுவதால் பார்க்கத்தான் முடியவில்லை.
மொத்தத்தில் ஓரளவு நல்ல கதை, ரசிக்கத்தக்க சில ஐடியாக் களை மட்டுமே நம்பி எடுக்கப் பட்ட படம். ‘பிச்சைக்காரனை’ நம்பிப் போனவர்களை இவன் ஏமாற்றிவிட்டான்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும் வரவேற்புக்கு இடையே, ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் இன்று ரிலீஸாகின்றன.
அஜித் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஏற்கெனவே தீபாவளிக்கு ரிலீஸாகும் ஏற்பாட்டுடன் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தன. திரைத்துறை பிரச்சினைகள், வேலைநிறுத்தம் போன்ற காரணங்களால் அதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ திரைப்படப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தன. கடந்த நவம்பரில் ரஜினியின் ‘2.0’ ரிலீஸானதால் அடுத்து ‘பேட்ட’ படத்தை பொங்கல் வெளியீடாக திட்டமிட்டு அந்த படக்குழுவும் களத்தில் இறங்கியது. ரசிகர்கள் போட்டிஅஜித் படம் ரிலீஸாகும் அதே நாளில் ரஜினி படமும் ரிலீஸ் என செய்தி வந்ததால், கடந்த சில வாரங்களாக இரு தரப்பு ரசிகர்கள் இடையேகடும் போட்டியும், சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.
வழக்கமாக அஜித் - விஜய் ரசிகர்கள் இடையேதான் போட்டிகள் உருவாகும். அது தற்போது ரஜினி - அஜித் ரசிகர்கள் இடையிலான போட்டியாக மாறியது. அதற்கேற்ப, ‘பேட்ட’ டிரெய்லரும், ‘விஸ்வாசம்’ டிரெய்லரும் ரசிகர்களின் போட்டி மற்றும் உற்சாகத்தை உச்சத்துக்கு கொண்டுசென்றன.
பொங்கல் விடுமுறைஇந்நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 1,090 திரையரங்குகளில், ‘பேட்ட’ திரைப்படம் 450 முதல்500 அரங்குகளிலும், ‘விஸ்வாசம்’ திரைப்படம் 450-க்கு மேற்பட்ட அரங்குகளிலும் இன்று வெளியாகின்றன. ஒருசில அரங்குகளில் மட்டும் ஹாலிவுட், தெலுங்கு படங்கள் வெளியாகின்றன.
‘‘ரஜினி, அஜித் இருவரது படங்களும் சமமான அரங்குகளில் வெளியாவதால் படம் ரிலீஸாகி, விமர்சன ரீதியாக வரும் வரவேற்பை வைத்தே படத்தின் முன், பின் வெற்றி குறித்து கூற முடியும்’’ என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பினர்.
பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும், படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ரஜினி, அஜித் ரசிகர்களும் போஸ்டர், பேனர் என உற்சாகமாகி உள்ளனர்
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆஸ்கார் விருதுக்கு பிறகு இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடந்த 2018-ல் ‘சர்கார்’, ‘2.0’, ‘செக்கச் சிவந்த வானம்’, அடுத்து வரவுள்ள ‘சர்வம் தாளமயம்’, இந்தியில் ‘சஞ்சு’ என திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில், 2019-ம் ஆண்டில் அதிக ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டு, சில படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிறகு, அந்த வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, கிடைக்கும் நேரத்தை மணிரத்னம், ரஜினி, ஷங்கர் போன்ற நெருங்கிய நண்பர்களின் படங்களுக்கு மட்டும் செலவிடலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்.