Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சுஜாவருணியின் திருமண ஆடைகள் இவ்வளவு ஸ்பெஷலானதா?
சுஜாவின், ப்ரீ வெடிங் போட்டோ ஷூட், நிச்சயதார்த்தம், திருமணம், ரிசப்சன் ஆகிய நிகழ்வுகளுக்கு, அவருக்குத் தேர்வு செய்த புடவைகள் அனைத்துமே பாரம்பர்ய முறையில் நெய்யப்பட்டவை


`பிக்பாஸ்' புகழ் சுஜா வருணியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சிவாஜிகணேசன் குடும்பத்தைச் சேர்ந்த, நடிகர் சிவக்குமாருடன் தன்னுடைய மணவாழ்வைத் தொடங்கியிருக்கிறார் சுஜா. மணப்பெண் சுஜா வருணியின் ஆடை, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அதன் சிறப்பம்சம் பற்றி, அந்த ஆடையை டிஸைன் செய்த ப்ரியா ரீகனிடம் பேசினேன். ``சுஜாவின், ப்ரீ வெடிங் போட்டோ ஷூட், நிச்சயதார்த்தம், திருமணம், ரிசப்சன் ஆகிய நிகழ்வுகளுக்கு, அவருக்குத் தேர்வு செய்த புடவைகள் அனைத்துமே பாரம்பர்ய முறையில் நெய்யப்பட்டவை. அதற்கு ஏற்ப டிரெடிஷனலான முறையில் ப்ளவுஸ்களையும் வடிவத்தோம்.
ப்ரீ வெடிங் ஷூட்டுக்காக, சுஜா தேர்வு செய்திருந்த சிவப்புநிற புடவைக்குச் சற்று கான்ட்ராஸ்டாக, ரோஸ் நிறத்தில் கேப் டிசைன் ப்ளவுஸைத் தயாரித்தோம். இந்த மிக்ஸ் மேட்ச் டிரெடிஷனல் புடவையிலும் டிரெடிண்டியான தோற்றத்தைத் தந்தது.



நிச்சயதார்த்தத்துக்கு, பச்சைநிற புடவைக்கு பிங்க் நிறத்தில் ப்ளவுஸ் வடிவமைத்தோம். மணமகன் சிவக்குமாரின் அம்மா பெயர் மீனாட்சி மேலும் அவருக்கு மதுரை மீனாட்சி அம்மன் மீது அதிக ஈடுபாடு என சுஜா சொல்ல, மணமகன் சிவக்குமாரை ஈர்க்கும் விதமாக ப்ளவுஸில் மீனாட்சி அம்மன் உருவம் வரைந்து ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்தோம்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
முகூர்த்தப் புடவைக்கு மேட்ச் செய்யப்பட்ட ப்ளவுஸ் ஒரிஜினலான குந்தன் ஸ்டோன்களால் அலங்கரிக்கப்பட்டதுதான் இன்னும் சிறப்பு.

ரிஷப்சனுக்காக சுஜா தேர்வு செய்த கோல்டன்நிற புடவைக்கான ப்ளவுஸ் சம்திங் ஸ்பெஷல். கோல்டன் நிற மெட்டீரியலில், சில்வர் நிற ஜர்தோஸி வேலைப்பாடுகளால் மணமக்களின் முதல் எழுத்தான ` S' என்பதை வடிவமைத்திருந்தோம். இவ்வளவு சிரத்தையோடு இருந்ததுதான், சுஜா திருமண ஆடைகள் எல்லோரையும் கவர்ந்தது" என்றார் ப்ரியா ரீகன்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இது பயோபிக் காலம்!- படமாகிறது நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை


பாலிவுட்டில் 'சஞ்சு', தெலுங்கிலும் தமிழிலும் சாவித்திரியின் 'மஹாநடி' போன்ற பயோபிக் படங்கள் அபார வெற்றி பெற்ற சூழலில் தற்போது தமிழ்த் திரையுலகின் காமெடி குணச்சித்திர ஜாம்பவான்களில் ஒருவரான சந்திரபாபுவின் கதை திரைப்படமாகவுள்ளது.
'ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' (JP: The Legend of Chandrababu) என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'சீவலப்பேரி பாண்டி, 'அமரன்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' போன்ற படங்களை இயக்கிய கே.ராஜேஸ்வர் இயக்குகிறார்.
இது குறித்து ராஜேஸ்வர் 'தி இந்து'விடம் பேசும்போது, சந்திரபாபு பாத்திரத்தில் நடிப்பது யார் என்று தேர்வு செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்தப் படத்தில் சந்திரபாபு நடித்த பல்வேறு படத்திலிருந்தும் பாடல்கள் தொகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் படத்தை இந்தோ -ரஷ்ய நிறுவனமான ருரோ தயாரிக்கிறது. ரஷ்ய மொழியிலும் படம் டப் செய்யப்படவுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ப.தங்கப்பன் கூறும்போது,"ரஷ்யாவில் எப்போதுமே இந்தியப் படங்களுக்கு மவுசு அதிகம். ஆனால், சோவியத் யூனியன் சிதைந்த பின்னர் அங்கு நிறைய இந்தியப் படங்கள் திரையிடப்படுவதில்லை" என்றார்.

ஜோசப் பனிமய மாதா பிச்சை
சந்திரபாபுவின் இயற்பெயர் ஜோசப் பனிமய மாதா பிச்சை. தூத்துக்குடி பனிமய மாதா திருக்கோயில் நினைவாக அவருக்கு அவரது பெற்றோர் அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர். சுதந்திர போராட்டத்தின் போது சந்திரபாபுவின் தந்தை ரோட்ரிக்ஸ் 7 முறை கைது செய்யப்பட்டார்.
ஹீரோவைவிட ஒருபடி மேல்
தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ரோட்ரிக்ஸின் மகன் சந்திரபாபு. திரையுலகில், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பதாலேயே அவர் மிகவும் பிரபலம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனைவிட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வாங்கினார். சென்னை சாந்தோமில் 20 கிரவுண்டில் பிரம்மாண்டமாக வீடு கட்டினார். கார், வீட்டின் இரண்டாவது தளம் வரைக்கும் செல்லும் வகையில் கட்டுமானம் இருந்தது.
'பாவ மன்னிப்பு' கதை சந்திரபாபு எழுதியது. அந்தப் படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 3000 அடி ஷூட் முடிந்த நிலையில் படம் கைமாறியது.
அவரது திறமைகள் ஏராளம். ஆனால் வாழ்க்கை அவருக்கு தாராளம் காட்டவில்லை. கடைசி காலத்தில் வாடகை வீட்டில், மின்சாரக் கட்டணம் செலுத்த கூட பணமில்லாமல் உணவுக்கு வழியில்லாம் இருந்தார். எல்லா பிரச்சினையும் எம்.ஜி.ஆரை வைத்து 'மாடி வீட்டு ஏழை' படத்தை எடுக்க முயன்றபோது ஆரம்பித்தது. எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு சரிவர வராததால் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒருநாள் எம்ஜிஆர் வீட்டுக்குச் சென்ற சந்திரபாபு எம்.ஜி.சக்கரபாணியுடன் தகராறில் ஈடுபட்டார். நாற்காலியால் சக்கரபாணியைத் தாக்கவும் முயன்றார்.


சிக்கல் விளைந்தது
இதனால், அந்தப் படத்துக்கு மூடுவிழா நடந்தது. படத்துக்காக சந்திரபாபு வாங்கியிருந்த கடன்கள் அவருக்குச் சிக்கலை விளைவித்தன. கனவு இல்லத்தை அடமானம் வைத்தார். ஆனால், அதன்பின்னர் எம்ஜிஆர் சந்திரபாபு மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளவில்லை என்பதற்கு சாட்சியாக 'பறக்கும் பாவை', 'அடிமைப்பெண்'ணில் சந்திரபாபு நகைச்சுவை நாயகனாக நடித்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆரும் - சந்திரபாபுவும் மனம் திறந்து பேசுவதுபோல் ஒரு காட்சியை யோசித்துள்ளதாக இயக்குநர் ராஜேஸ்வர் கூறியுள்ளார்.
அந்தக் காட்சிக்குப் பின் 'குமாரராஜா' படத்தில் வரும் ஒண்ணுமே புரியல உலகத்துல பாடலைப் பொருத்தவும் இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அமலாபாலுடன் திருமணமா? - விஷ்ணு விஷால் காட்டம்


அமலாபாலுடன் திருமணம் என்று வெளியான செய்திக்கு விஷ்ணு விஷால் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சமூக வலைதளத்தில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து 'ராட்சசன்' படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
விஷ்ணு விஷால் - அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதுவும் எழுதாதீர்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
இவரது நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் 21-ம் தேதி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்

மறைந்த இயக்குநர் கே.பாலசந் தரின் மனைவி ராஜம் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.
பாலசந்தரின் திரையுலகப் பயணத்துக்கு உறுதுணையாக 58 ஆண்டுகள் உடன் இருந்தவர் ராஜம். இவர் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவிலில் பிறந்தவர். கடந்த 4 ஆண்டுகளாக மகள் புஷ்பா கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் ஆகியோருடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், விவேக், டெல்லி கணேஷ், யூகி சேது, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் சரண், சமுத்திரகனி, அமீர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளை இளைய மகன் பிரசன்னா செய்ய உடல் தகனம் செய்யப்பட்டது.