Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அக்‌ஷராவின் அந்தரங்கப் படங்கள் வெளியாகக் காரணம் முன்னாள் காதலரா?

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாக, அவரது முன்னாள் காதலர் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகின. அப்படங்கள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பரவின. இதுதொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக்‌ஷரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அதில், தனது அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அக்‌ஷராவின் முன்னாள் காதலருக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்மானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
“என்னிடம் அக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்கள் இருந்தது உண்மைதான். எங்களுக்குள் 4 வருடப் பழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு அந்தப் படங்களை அக்‌ஷரா எனக்கு அனுப்பினார். அதனை நான் என் கைபேசியில் இருந்து அழித்துவிட்டேன். அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை" என்று தனுஜ் போலீஸ் தரப்பில் கூறியுள்ளார்.
தனுஜ் விர்மானி, நடிகை ரதி அக்னி கோத்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தனுஜின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''அக்‌ஷராவைப் பிரிந்து ஓராண்டு கடந்த நிலையிலும் இருவரும் நட்பில் இருக்கிறார்கள். தனுஜ் அப்படிச் செய்திருந்தால் எப்படி இருவரும் நட்பில் இருக்க முடியும்? தற்போது அக்‌ஷராவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தனுஜால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு எல்லா விதத்திலும் துணை நிற்கவே தனுஜ் விரும்புகிறார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பத்திரிகையாளராக நடிக்க 10 கிலோ எடை குறைத்த நமிதா

திருமணத்துக்குப் பிறகு முதன்முதலில் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்கிறார் நமிதா.
நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை.
அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் நமிதா. சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பெண் போராளிக்கும், சாதியை வைத்து அரசியல் பண்ணும் மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதை.
வராகி, மனோபாலா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘கோலிசோடா’, ‘சண்டி வீரன்’ படங்களுக்கு இசையமைத்த அருணகிரி, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
நாளை (நவம்பர் 20) இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பத்திரிகையாளராக நடிக்கும் நமிதா, இந்தப் படத்துக்காக 10 கிலோவுக்கு மேல் எடை குறைந்துள்ளார்.
11 வருடங்களுக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்க இருக்கும் படத்தில் வில்லியாக நடிக்கிறார் நமிதா என்று ஏற்கெனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விஷாலின் ‘அயோக்யா’: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

விஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்துவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இந்தப் படத்தை இயக்குகிறார். விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது.
‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங், கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (நவம்பர் 19) வெளியிடப்பட்டது. அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் படம், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் இசை உரிமையையும் இந்த நிறுவனம் தான் வாங்கியுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’: டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸ்

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’ படம், டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரண், மிஷ்கின், அமீர் ஆகிய இயக்குநர்களிடம் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையமைப்பில், ரூபன் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ், இந்தப் படத்தின் மூலம் சினிமாத் துறையில் கால் பதித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை, க்ளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி பெற்றுள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.
‘அடங்க மறு’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர் 21) படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’: ஜனவரி ரிலீஸ்

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் ஜனவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, லண்டனில் தொடங்கியது. மொத்தப் படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டனர்.
இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ளது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவனிடம் இருந்து அந்த எழுத்தாளர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.
இந்தியிலும் ‘கொலையுதிர் காலம்’ உருவாகியுள்ளது. நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தமன்னாவோடு இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா மற்றும் பூமிகா இருவரும் நடித்துள்ளனர். இந்தியிலும் சக்ரி டோலட்டியே இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். ஆனால், என்ன தேதி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.