கடவுள்களின் கவலைகள்
வார இறுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அகால வேளையில் தங்களின் மாதாந்திர மீட்டிங்கை நடத்துவதற்கான ஏற்பாட்டில் சிவனும், விஷ்ணுவும் ஈடுபட்டிருந்தனர். சிவன் மிகவும் தீவிரமாக அனைவருக்கும் இமெயில் அழைப்பிதழ் அனுப்பிக் கொண்டிருக்க விஷ்ணுவோ தன்னுடைய மொபைலில் ஆழ்ந்திருந்தார்.
அதனை கண்ட சிவன் "மாப்பிள்ளை! என்னதான் நான் உங்க தங்கச்சி வீட்டுக்காரரா இருந்தாலும் என்னை வேலை வாங்கிட்டு நீங்க சாவகாசமா மொபைல்ல விளையாண்டுட்டு இருக்கக்கூடாது. பாவம் பாா்த்து நீங்களும் வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க", எனப் பரிதாபமாகக் கூறினார். அவரின் பேச்சை கேட்டு விஷ்ணுவோ "அட நீங்க வேற மாப்பிள்ளை! எல்லாம் நம்ம கடவுள் குரூப்ல இருக்குற சோகக்கதை, சொந்த கதையைதான் படிச்சுட்டு இருக்கேன்.
அனேகமாக இந்த மீட்டிங் ரொம்பவுமே இன்ட்ரஸ்டா போகும் போல இருக்கு", எனக் கூறியதுடன் தன் கையிலிருந்த மொபைலையும் சிவனின் கண்களுக்கு நேராகப் பிடித்தார். விஷ்ணு கூறியவுடன் ஆமாம் என்று ஒப்புக் கொண்ட சிவன்
"நானும் படிச்சேன் மாப்பிள்ளை! படிச்சேன் அப்படிங்கிறதைவிட என் கதையும் அதே நிலைமையில்தான் இருக்கு.சின்ன பையனுங்க குரூப்ல ஈசியா போடுறாங்க. என்ன இருந்தாலும் பெரியவங்க அப்படிங்கற கெத்தை மெயின்டைன் பண்றதுக்காக நான் வாயை திறக்காமல் இருக்கேன்", என தன்னுடைய நிலையை கூறினார்.
சிவன் கூறிய உடன் தன்னுடைய இரு கைகளையும் உயர்த்திய விஷ்ணு"ஹை-ஃபைவ் கொடுங்க மாப்ள, இங்கேயும் அதே கதைதான். நாம நம்ம நிலைய சொன்னா இந்த பசங்க எல்லாரும் நம்ம இமேஜை அசால்ட்டா டேமேஜ் பண்ணிட்டு போய்டுவாங்க. அதனாலதான் நான் உங்க தங்கச்சிகிட்ட கூட வாயைத் திறக்கிறது கிடையாது", எனக் கூறி தானும் தன் மாப்பிள்ளைக்கு சளைத்தவர் இல்லை என்பதை பேச்சில் நிரூபித்தார்.
இருவரும் இவ்வாறு பேசியவாறு அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பிவிட்டு அன்றைய நாளின் கடமையாற்ற சென்றுவிட்டனர். சிவனும், விஷ்ணுவும் பேசிக்கொண்டது போலவே அந்த மாதத்தின் மீட்டிங்கில் வந்து அமர்ந்தவுடன் முருகன் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் முன்னரே "என்னோட பொறுமையோட அளவு குறைஞ்சிக்கிட்டே போகுது.
தலைவர், உபதலைவர், செயலாளர் போஸ்ட்ல உட்கார்ந்திருக்கிற அப்பா, மாமாஸ் நீங்க எல்லாம் இதுக்கான நடவடிக்கையை எடுக்கலைன்னா பின்விளைவுகளுக்கு நான் சுத்தமா பொறுப்பே கிடையாது", என நெய்யில்லிட்ட அப்பமாக பொரிந்து தள்ள ஆரம்பித்துவிட்டார்.
ஏற்கனவே இதனைப் பற்றிப் பேச வேண்டும் என சிவனும் விஷ்ணுவும் பேசி வைத்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் முன்னதாக தன்னுடைய மகன் முந்திக்கொண்டு கூறியதில் சிவனுக்கு சற்றே கோபம் வந்தது.
அதனால் வேகவேகமாக "பெரியவங்களுக்கு முதல்ல மரியாதை செலுத்து" என கோபக் குரலில் கூறினார். "பெரியவங்களுக்கு மரியாதை கொடு மரியாதை கொடுன்னு சொல்றாரு... இவங்களே முதல்ல கண்டிச்சு வச்சிருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?", என்று முணுமுணுத்துக்கொண்ட முருகனை பார்த்து கண்களை சிமிட்டிய விஷ்ணு "மாப்பிள்ளை சும்மா இருங்க", என சிவனிடம் கூறியவா் "முருக்ஸ் நீ இப்ப உட்காரு. மாமா இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன்", என தன்னுடைய மருமகனுக்கு புன்னகை முகமாகவே கூறினார்.
விஷ்ணு கூறியவுடன் முருகனும் அமர்ந்து விடவே மீட்டிங் ஆரம்பமாக சிறியவர்கள் அனைவரும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்திட பெரியவர்கள் அனைவரும் அந்த மாதங்களில் வரும் அவரவருக்கான விஷேச தினங்களை உரைத்திட என ஆரம்பம் அமைதியாகவே சென்றது.
வழக்கமான நடைமுறைகள் முடிந்த உடன் சிவன் முருகனை நோக்கி "இப்ப சொல்லு முருகா! உனக்கு என்ன பிரச்சனை?", என வினவினார். முருகன் பதில் கூறுவதற்கு முன்னரே கணேசன் "முருகனுக்கு மட்டும் பிரச்சனை இல்லைப்பா. எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்கு. உங்களுக்கு நல்லாவே தெரியும். என்ன முடிவுதான் இதுக்கு எடுக்குறது?", என இடை புகுந்தார்.
இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி கூறியதில் டென்ஷனான பார்வதியும் லட்சுமியும் சரஸ்வதியை நோக்கி "என்னைக்குதான் இந்த ஆம்பளைங்க நேரடியா விஷயத்துக்கு வருவாங்களோ! எப்பப் பார்த்தாலும் சுத்தி வளைச்சி மறைமுகமாகவே பேசுறது", என அலுத்துக் கொண்டனர்.
இவர்களின் பேச்சை கேட்ட மற்ற கடவுள்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டாலும் தலைவரும் உப தலைவரும் என்ன முடிவு எடுக்கப் போகின்றனர் என அவர்களின் முகத்தை ஆர்வமாக எதிர்பார்த்தனர். சிவன் பேச்சினை ஆரம்பிக்கும் முன்னரே இடை புகுந்த விஷ்ணு "சரி பெரியவங்க எங்களுக்குதான் இதை எப்படி கட்டுப்படுத்துறதுன்னு தெரியலை. பசங்க நீங்க எல்லாரும் சொல்லுங்க. அது சரிப்பட்டு வந்தா நாங்க அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்றோம்",
வார இறுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அகால வேளையில் தங்களின் மாதாந்திர மீட்டிங்கை நடத்துவதற்கான ஏற்பாட்டில் சிவனும், விஷ்ணுவும் ஈடுபட்டிருந்தனர். சிவன் மிகவும் தீவிரமாக அனைவருக்கும் இமெயில் அழைப்பிதழ் அனுப்பிக் கொண்டிருக்க விஷ்ணுவோ தன்னுடைய மொபைலில் ஆழ்ந்திருந்தார்.
அதனை கண்ட சிவன் "மாப்பிள்ளை! என்னதான் நான் உங்க தங்கச்சி வீட்டுக்காரரா இருந்தாலும் என்னை வேலை வாங்கிட்டு நீங்க சாவகாசமா மொபைல்ல விளையாண்டுட்டு இருக்கக்கூடாது. பாவம் பாா்த்து நீங்களும் வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க", எனப் பரிதாபமாகக் கூறினார். அவரின் பேச்சை கேட்டு விஷ்ணுவோ "அட நீங்க வேற மாப்பிள்ளை! எல்லாம் நம்ம கடவுள் குரூப்ல இருக்குற சோகக்கதை, சொந்த கதையைதான் படிச்சுட்டு இருக்கேன்.
அனேகமாக இந்த மீட்டிங் ரொம்பவுமே இன்ட்ரஸ்டா போகும் போல இருக்கு", எனக் கூறியதுடன் தன் கையிலிருந்த மொபைலையும் சிவனின் கண்களுக்கு நேராகப் பிடித்தார். விஷ்ணு கூறியவுடன் ஆமாம் என்று ஒப்புக் கொண்ட சிவன்
"நானும் படிச்சேன் மாப்பிள்ளை! படிச்சேன் அப்படிங்கிறதைவிட என் கதையும் அதே நிலைமையில்தான் இருக்கு.சின்ன பையனுங்க குரூப்ல ஈசியா போடுறாங்க. என்ன இருந்தாலும் பெரியவங்க அப்படிங்கற கெத்தை மெயின்டைன் பண்றதுக்காக நான் வாயை திறக்காமல் இருக்கேன்", என தன்னுடைய நிலையை கூறினார்.
சிவன் கூறிய உடன் தன்னுடைய இரு கைகளையும் உயர்த்திய விஷ்ணு"ஹை-ஃபைவ் கொடுங்க மாப்ள, இங்கேயும் அதே கதைதான். நாம நம்ம நிலைய சொன்னா இந்த பசங்க எல்லாரும் நம்ம இமேஜை அசால்ட்டா டேமேஜ் பண்ணிட்டு போய்டுவாங்க. அதனாலதான் நான் உங்க தங்கச்சிகிட்ட கூட வாயைத் திறக்கிறது கிடையாது", எனக் கூறி தானும் தன் மாப்பிள்ளைக்கு சளைத்தவர் இல்லை என்பதை பேச்சில் நிரூபித்தார்.
இருவரும் இவ்வாறு பேசியவாறு அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பிவிட்டு அன்றைய நாளின் கடமையாற்ற சென்றுவிட்டனர். சிவனும், விஷ்ணுவும் பேசிக்கொண்டது போலவே அந்த மாதத்தின் மீட்டிங்கில் வந்து அமர்ந்தவுடன் முருகன் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் முன்னரே "என்னோட பொறுமையோட அளவு குறைஞ்சிக்கிட்டே போகுது.
தலைவர், உபதலைவர், செயலாளர் போஸ்ட்ல உட்கார்ந்திருக்கிற அப்பா, மாமாஸ் நீங்க எல்லாம் இதுக்கான நடவடிக்கையை எடுக்கலைன்னா பின்விளைவுகளுக்கு நான் சுத்தமா பொறுப்பே கிடையாது", என நெய்யில்லிட்ட அப்பமாக பொரிந்து தள்ள ஆரம்பித்துவிட்டார்.
ஏற்கனவே இதனைப் பற்றிப் பேச வேண்டும் என சிவனும் விஷ்ணுவும் பேசி வைத்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் முன்னதாக தன்னுடைய மகன் முந்திக்கொண்டு கூறியதில் சிவனுக்கு சற்றே கோபம் வந்தது.
அதனால் வேகவேகமாக "பெரியவங்களுக்கு முதல்ல மரியாதை செலுத்து" என கோபக் குரலில் கூறினார். "பெரியவங்களுக்கு மரியாதை கொடு மரியாதை கொடுன்னு சொல்றாரு... இவங்களே முதல்ல கண்டிச்சு வச்சிருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?", என்று முணுமுணுத்துக்கொண்ட முருகனை பார்த்து கண்களை சிமிட்டிய விஷ்ணு "மாப்பிள்ளை சும்மா இருங்க", என சிவனிடம் கூறியவா் "முருக்ஸ் நீ இப்ப உட்காரு. மாமா இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன்", என தன்னுடைய மருமகனுக்கு புன்னகை முகமாகவே கூறினார்.
விஷ்ணு கூறியவுடன் முருகனும் அமர்ந்து விடவே மீட்டிங் ஆரம்பமாக சிறியவர்கள் அனைவரும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்திட பெரியவர்கள் அனைவரும் அந்த மாதங்களில் வரும் அவரவருக்கான விஷேச தினங்களை உரைத்திட என ஆரம்பம் அமைதியாகவே சென்றது.
வழக்கமான நடைமுறைகள் முடிந்த உடன் சிவன் முருகனை நோக்கி "இப்ப சொல்லு முருகா! உனக்கு என்ன பிரச்சனை?", என வினவினார். முருகன் பதில் கூறுவதற்கு முன்னரே கணேசன் "முருகனுக்கு மட்டும் பிரச்சனை இல்லைப்பா. எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்கு. உங்களுக்கு நல்லாவே தெரியும். என்ன முடிவுதான் இதுக்கு எடுக்குறது?", என இடை புகுந்தார்.
இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி கூறியதில் டென்ஷனான பார்வதியும் லட்சுமியும் சரஸ்வதியை நோக்கி "என்னைக்குதான் இந்த ஆம்பளைங்க நேரடியா விஷயத்துக்கு வருவாங்களோ! எப்பப் பார்த்தாலும் சுத்தி வளைச்சி மறைமுகமாகவே பேசுறது", என அலுத்துக் கொண்டனர்.
இவர்களின் பேச்சை கேட்ட மற்ற கடவுள்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டாலும் தலைவரும் உப தலைவரும் என்ன முடிவு எடுக்கப் போகின்றனர் என அவர்களின் முகத்தை ஆர்வமாக எதிர்பார்த்தனர். சிவன் பேச்சினை ஆரம்பிக்கும் முன்னரே இடை புகுந்த விஷ்ணு "சரி பெரியவங்க எங்களுக்குதான் இதை எப்படி கட்டுப்படுத்துறதுன்னு தெரியலை. பசங்க நீங்க எல்லாரும் சொல்லுங்க. அது சரிப்பட்டு வந்தா நாங்க அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்றோம்",