Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript ஏமாளி | SudhaRaviNovels

ஏமாளி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஏமாளி




வாங்கிய கடனை
செலுத்தாதீர்கள் என்றார்கள்
சட்டத்திற்கு பயந்து
சரியாக செலுத்தினேன்
செலுத்தாதவர்களுக்கெல்லாம்
தள்ளுபடி செய்தது அரசு

அரசு புறம்போக்கில்
குடிசை கட்ட அழைத்தார்கள்
சட்டத்திற்கு பயந்து
மாட்டேன் என்றேன்
பயப்படாதவர்களுக்கெல்லாம்
பட்டா கொடுத்தது அரசு

இப்பொழுது
பக்கத்து ஊருக்கு
கள்ள ஓட்டுப்
போடக் கூப்பிடுகிறார்கள்
சட்டத்திற்கு பயந்து
போகாமல் இருந்தால்
அடுத்தாண்டு
நல்ல் ஓட்டும்
இல்லாமல் போய்விடுமோ

-