அத்தியாயம் – 3
சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர்.
வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அண்ணன்கள் இருவருக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை. எந்த நேரமும் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக அலைவார்களேத் தவிர இதற்கெல்லாம் வரவே மாட்டார்கள்.
ஒரு மணி நேரம் ஓடி முடிக்கும் வேளையில் வீட்டில் விளக்குகள் எரியத் தொடங்கியது. உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவன் தன் வாழ்க்கையின் பக்கங்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்ய இயலாமல் போனது. அதனால் எங்கும் எதிலும் தோல்விகள் மட்டுமே.
அதுவே தந்தைக்கு லேசான வெறுப்பை உண்டாக்கியது . அண்ணன்கள் இருவரும் தம்பி என்ற பாசம் இருந்தாலும், இந்த விஷயத்தில் கேலியாகவே நடத்துவார்கள். அம்மா ஈஸ்வரி மட்டுமே எது எப்படி இருந்தாலும் அவன் என் பிள்ளை என்று மட்டுமே நினைப்பார்.என்றாவது ஒரு நாள் அப்பாவும், அண்ணன்களும் தன்னை மதிக்கும்படி எதிலாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து உள்ளே சென்றான்.
பூஜை செய்துவிட்டு ஈஸ்வரி வெளியே வரவும் , ஜாகிங் முடித்து உள்ளே நுழைந்த மகனைப் பார்த்தவர், நல்ல உயரமும் அளவான தோள்களும்
சாந்தம் தவழும் முகமும் உள்ளவனிடம் எதையும் நிதானத்துடன் செய்யும் போக்கு மட்டும் இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமே என்று எழுந்த எண்ணத்தில் பெருமூச்சொன்றை உதிர்த்து ” என்ன கதிர் ஜாகிங் முடிச்சாச்சா?” என்றார்.
அன்னையைப் பார்த்து மெலிதாக புன்னகையை சிந்தியபடி” முடிச்சாச்சுமா.நீங்க ஏன்மா அதுக்குள்ளே எழுந்தீங்க?” என்று கேட்டான் கதிர்.
“ எப்பவும் எழுந்திரிக்கிறதுதானே.அப்படியே பழகிப் போச்சு” என்று சொல்லி சமையலறைக்குச் சென்று சமையல்காரரிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு சென்றார்.
அவன் காபி குடித்து முடிக்கும் தருவாயில் ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தார்கள். சிவதாண்டவம் தூங்கி எழுந்து வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர, கதிர் அங்கிருந்து கிளம்பினான். அப்போது தாண்டவம்
அவனிடம்.”எழுந்திரிக்கிறதுல இருக்கிற சுறுசுறுப்பு மத்ததுலையும் இருந்தா தேவலை” என்றார்.
அதற்கு எந்த வித உணர்வுகளையும் காட்டாமல்..”ம்ம்..சரிப்பா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அந்த நேரம் அங்கு வந்த ஈஸ்வரி கணவர் மகனை பேசிய வாக்கியங்கள் காதில் விழ சிறு சலிப்புடன் காபியை அவர் கையில் தந்து விட்ட.” காலையிலேயே அவனை கிளப்ப ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றார்.
“அவன் நல்லதுக்கு தானே சொல்றேன்.அதுகென்னவோ அலுத்துக்கிற...இதுக்கு தான் உம்புள்ள விஷயத்துல நான் தலையிடுறது இல்ல” என்று கடுப்படித்தார் தாண்டவம்.
அவரின் பேச்சில் மனசு பாதிக்கப்பட்டு” என்னங்க இப்படி பேசுறீங்க.....நீங்க இப்படி பேசி பேசி தான் பெரியவனுங்க ரெண்டு பேரும் இவனோட ஒட்டவே மாட்டேன்றானுங்க.”என்று வருத்தமாக சொன்னார் ஈஸ்வரி.
காப்பியை குடித்துக் கொண்டும் பேப்பரில் கவனத்தை வைத்துக் கொண்டும் இருந்தவர் மனைவியின் பேச்சில் சற்று கோபமுற்று” அவனால யார் கூடவும் ஓட்ட முடியலேன்னு சொல்லு ஈஸ்வரி.ஏன்னா அவனுக்கு வேலையும் தெரியல,சொல்றதைப் புரிஞ்சுகிட்டு நடக்கவும் தெரியல.அதுக்கு எங்க மேல குறை சொல்லாதே” என்றார்.
அவர் வைத்த கப்பை கையில் எடுத்துக் கொண்டு” ஆமாம் புரியல புரியலன்னு சொல்லி சொல்லியே அவனைப் பைத்தியமாக்கிடுங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
கதிரோ அறைக்குள் போனவன் மனதில் தந்தை சொன்னதின் தாக்கம் இருக்க நேராக சென்று பால்கனியில் நின்று கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான் . தனக்குள் இருக்கும் பல விதமான உணர்வுகளை வெளிக்காட்ட இயலாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பின்னர் தனக்கு மிகவும் பிடித்த போட்டோவை எடுத்து பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்துவிட்டான். அமைதியிழந்து தவித்த மனம் ஆறுதலடைந்தது.காலை வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு கிளம்பினான். அப்பாவும் கந்தவேலும் ஒன்றாக காரில் கிளம்ப, குமாரவேலுவும் வேறு விஷயமாக கடலூர் கிளம்பினான். தான் அன்று எங்கு போவது என்று புரியாமல் தாண்டவத்தையும், கந்தவேலுவையும் பார்க்க, “நீ உன் காரில் ஸ்டீல் பாக்டரிக்கு வந்திடு கதிர். நானும் அப்பாவும் எம்.எல்.ஏவை பார்த்திட்டு அங்கே வரோம்” என்றான் கந்தவேல்.
சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர்.
வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அண்ணன்கள் இருவருக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை. எந்த நேரமும் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக அலைவார்களேத் தவிர இதற்கெல்லாம் வரவே மாட்டார்கள்.
ஒரு மணி நேரம் ஓடி முடிக்கும் வேளையில் வீட்டில் விளக்குகள் எரியத் தொடங்கியது. உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவன் தன் வாழ்க்கையின் பக்கங்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்ய இயலாமல் போனது. அதனால் எங்கும் எதிலும் தோல்விகள் மட்டுமே.
அதுவே தந்தைக்கு லேசான வெறுப்பை உண்டாக்கியது . அண்ணன்கள் இருவரும் தம்பி என்ற பாசம் இருந்தாலும், இந்த விஷயத்தில் கேலியாகவே நடத்துவார்கள். அம்மா ஈஸ்வரி மட்டுமே எது எப்படி இருந்தாலும் அவன் என் பிள்ளை என்று மட்டுமே நினைப்பார்.என்றாவது ஒரு நாள் அப்பாவும், அண்ணன்களும் தன்னை மதிக்கும்படி எதிலாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து உள்ளே சென்றான்.
பூஜை செய்துவிட்டு ஈஸ்வரி வெளியே வரவும் , ஜாகிங் முடித்து உள்ளே நுழைந்த மகனைப் பார்த்தவர், நல்ல உயரமும் அளவான தோள்களும்
சாந்தம் தவழும் முகமும் உள்ளவனிடம் எதையும் நிதானத்துடன் செய்யும் போக்கு மட்டும் இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமே என்று எழுந்த எண்ணத்தில் பெருமூச்சொன்றை உதிர்த்து ” என்ன கதிர் ஜாகிங் முடிச்சாச்சா?” என்றார்.
அன்னையைப் பார்த்து மெலிதாக புன்னகையை சிந்தியபடி” முடிச்சாச்சுமா.நீங்க ஏன்மா அதுக்குள்ளே எழுந்தீங்க?” என்று கேட்டான் கதிர்.
“ எப்பவும் எழுந்திரிக்கிறதுதானே.அப்படியே பழகிப் போச்சு” என்று சொல்லி சமையலறைக்குச் சென்று சமையல்காரரிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு சென்றார்.
அவன் காபி குடித்து முடிக்கும் தருவாயில் ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தார்கள். சிவதாண்டவம் தூங்கி எழுந்து வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர, கதிர் அங்கிருந்து கிளம்பினான். அப்போது தாண்டவம்
அவனிடம்.”எழுந்திரிக்கிறதுல இருக்கிற சுறுசுறுப்பு மத்ததுலையும் இருந்தா தேவலை” என்றார்.
அதற்கு எந்த வித உணர்வுகளையும் காட்டாமல்..”ம்ம்..சரிப்பா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அந்த நேரம் அங்கு வந்த ஈஸ்வரி கணவர் மகனை பேசிய வாக்கியங்கள் காதில் விழ சிறு சலிப்புடன் காபியை அவர் கையில் தந்து விட்ட.” காலையிலேயே அவனை கிளப்ப ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றார்.
“அவன் நல்லதுக்கு தானே சொல்றேன்.அதுகென்னவோ அலுத்துக்கிற...இதுக்கு தான் உம்புள்ள விஷயத்துல நான் தலையிடுறது இல்ல” என்று கடுப்படித்தார் தாண்டவம்.
அவரின் பேச்சில் மனசு பாதிக்கப்பட்டு” என்னங்க இப்படி பேசுறீங்க.....நீங்க இப்படி பேசி பேசி தான் பெரியவனுங்க ரெண்டு பேரும் இவனோட ஒட்டவே மாட்டேன்றானுங்க.”என்று வருத்தமாக சொன்னார் ஈஸ்வரி.
காப்பியை குடித்துக் கொண்டும் பேப்பரில் கவனத்தை வைத்துக் கொண்டும் இருந்தவர் மனைவியின் பேச்சில் சற்று கோபமுற்று” அவனால யார் கூடவும் ஓட்ட முடியலேன்னு சொல்லு ஈஸ்வரி.ஏன்னா அவனுக்கு வேலையும் தெரியல,சொல்றதைப் புரிஞ்சுகிட்டு நடக்கவும் தெரியல.அதுக்கு எங்க மேல குறை சொல்லாதே” என்றார்.
அவர் வைத்த கப்பை கையில் எடுத்துக் கொண்டு” ஆமாம் புரியல புரியலன்னு சொல்லி சொல்லியே அவனைப் பைத்தியமாக்கிடுங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
கதிரோ அறைக்குள் போனவன் மனதில் தந்தை சொன்னதின் தாக்கம் இருக்க நேராக சென்று பால்கனியில் நின்று கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான் . தனக்குள் இருக்கும் பல விதமான உணர்வுகளை வெளிக்காட்ட இயலாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பின்னர் தனக்கு மிகவும் பிடித்த போட்டோவை எடுத்து பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்துவிட்டான். அமைதியிழந்து தவித்த மனம் ஆறுதலடைந்தது.காலை வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு கிளம்பினான். அப்பாவும் கந்தவேலும் ஒன்றாக காரில் கிளம்ப, குமாரவேலுவும் வேறு விஷயமாக கடலூர் கிளம்பினான். தான் அன்று எங்கு போவது என்று புரியாமல் தாண்டவத்தையும், கந்தவேலுவையும் பார்க்க, “நீ உன் காரில் ஸ்டீல் பாக்டரிக்கு வந்திடு கதிர். நானும் அப்பாவும் எம்.எல்.ஏவை பார்த்திட்டு அங்கே வரோம்” என்றான் கந்தவேல்.