தீபியின் பேஸ்புக்கும் பர்சனலும்.
தலைப்பே நமக்கு சொல்லிடுது!நாமே நமக்கு ஆப்படிச்சுட்டு நாமே புலம்பிக்குறதுதான் கதை!பெர்சனல் அடிக்கடி நான் உன்னை விட்டு போகப்போறேன்னு சொல்வதும் பேஸ்புக்கிடம் திரும்ப வந்து சரணடைவதும் வாடிக்கைதான்.கதையில் பேஸ்புக் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் முகத்தில் அறையும் கேள்விகள்!லைக்குக்காகவும்,புகழுக்காகவும் தங்களின் எல்லா நிகழ்வுகளையும் பொதுப்பார்வைக்கு கொடுத்துவிட்டு அய்யோ,இப்படி கமெண்ட் வந்துடுச்சே,என்னை அசிங்கப்படுத்திட்டாங்களேன்னு புலம்புறதும் நாம்தான்!போட்டோ போட்டா என்ன நடக்கும்ன்னு தெரியாதா,மேக் அப் போட்ட முகத்தை மட்டுமே காட்டும் இடம்,அதை விட்டுட்டு நம் அகத்தில் உள்ள எல்லாத்தையும் காட்டக்கூடாது என சொல்றது!எல்லாமே நல்லாருக்கு.கடைசியில் அவ்வளவு வீராப்பா பேசிட்டு அந்த பதிவையும் பேஸ்புக்கில் போட்டதை பார்த்து தலையில் அடித்துக்கொள்வது ஹா ஹா!