பூலோக கற்பக விருட்சம்
பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்கிறார்கள். இதன் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன் தருவதினால் பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது.
வீடு கட்ட மரமும், உண்பதற்கு காய் கனிகளும், முன் காலத்தில் செய்திகளை ஆவணப்படுத்த அதன் ஓலைகளும், விசிறி, நார்ப் பொருட்கள், மருத்துவ குணம் கொண்ட பதநீர் என்று பனை மரத்தின் அத்தனை பாகங்களும் நமக்கு பயன் படுகிறது. இவை சிறந்த உயிர் வேலியும் கூட அதனால் இதை பூலோக கற்பக விருட்சம் என்கிறார்கள்.